Friday, July 5, 2019

தமிழே....

தமிழை பேச..

நா நடனமிட்டு ஆடும்!
நரம்புகள் புடைத்து எழும்!
உள்ளம் உவகை கொள்ளும்!
இதயம் மெட்டெடுத்து பாடும்!
இரத்தம் கும்மாளத்தில் கொப்பளிக்கும்!
கைகள் ஓங்கி நிற்கும்!
கால்கள் உரைநடை போடும்!
உடல் சிலிர்த்து நிற்கும்!
உறுப்பெல்லாம் பேருவகை கொள்ளும்!
மூளையில் கர்வம் குடிபுகும்!
சிந்தை சீர்பட்டு போகும்!

மண்டியிட்டு வணங்குகிறேன் தமிழ் அன்னையே
மண்டியிட எங்கும் விடமாட்டாய் என்னையே
மண்ணில் இட்ட போதும் என்னையே
மங்காது ஓங்கும் உன் புகழ் தமிழ் அன்னையே...

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...