Tuesday, July 9, 2019

சீருடை

பள்ளி என்று சொன்னாலே
துள்ளி வரும் நினைவுகள்..

மனம் அள்ளி கொண்ட நண்பர்கள்
தினம் சொல்லி கொடுத்த ஆசான்கள்

இடங்கள் வேறுவேறு ஆனாலும்
உடனிருந்த இடம் பள்ளிதான்..
வசதி வேறுவேறு ஆனாலும்
வசமிருந்த வசதி பள்ளிதான்..
குலங்கள் வேறுவேறு ஆனாலும்
ஒன்றாயிருந்த குலம் பள்ளிதான்..
பின்புலம் வேறுவேறு ஆனாலும்
நட்பின் பக்கபலம் பள்ளிதான்..
படிப்பு வேறுவேறு ஆனாலும்
நடிப்பில்லா பிடிப்பு பள்ளிதான்..

இப்படி பல வேறு ஆனாலும்
நாங்கள் இங்கே ஒன்றுதான்
காரணம்
வேற்றுமை இல்லா பள்ளி சீருடை தான்....

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...