Sunday, July 28, 2019

மேரா ப்யாரி...

பார்வையால் அஞ்சவும் இல்லை 
மொழிகளால் கொஞ்சவும் இல்லை 
தேவையென கெஞ்சவும் இல்லை 
கோபமென மிஞ்சவும் இல்லை
ஆசைக்கோ பஞ்சமும் இல்லை 

உறவும் இல்லை ஊடலும் இல்லை 
தொடவும் இல்லை விடவும் இல்லை 

இருந்தும் ...

கண்ணில் படாது கனவில் வரும் மாயக்காரி 
இதயத்தை அவள் வசமாக்கிய வசியக்காரி 
அவளையே நினைத்து இயங்கவைக்கும் எந்திரக்காரி 
எனது இதயத்தில் வந்தமர்ந்து ஆட்சி செய்யும் மந்திரக்காரி 
வாழ்க்கையையே பூந்தோட்டமாக மாற்றிய வசந்தக்காரி
காதல் இதுதான் என அறியவைத்த தந்திரக்காரி  

ஆம் அவள் காதல் கைகாரி 
ஒய்யாரி சிங்காரி மேரா ப்யாரி...

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...