Monday, July 8, 2019

மகளை பற்றிய பாடல்

சுற்றும் பூமிதனில் சுழலும் வாழ்க்கையிது
அற்றும் உறவுதனில் பற்றும் பாசமிது
மகளே பாச மகளே என் பிறப்பின் அர்த்தம் உன் பிறப்பே
மகளே நேச மகளே என் செயலின் தொடக்கம் உன் சிரிப்பே
சரணம்
********
ஓடி ஓடி உழைத்தாலும் கோடி கோடி சேர்த்தாலும் எதற்கும் ஈடில்லா பிள்ளை செல்வம் நீதானே ...
உன் மழலை மொழி கேட்க வரும் கவலைகள் கலைந்தோடுமே..
உன் செல்ல சிணுங்கலை பார்க்க வரும் தொல்லைகள் தொலைந்தோடுமே..
வாழ்வில் நாங்கள் கண்ட வசந்தம் நீதானே மகளே..
பூமியில் எவரும் கண்டிடாத நாங்கள் கண்ட சொர்க்கம் நீதானே மகளே...
சரணம்
********
அள்ள அள்ள குறையாத சொல்ல சொல்ல திகட்டாத எதற்கும் ஈடில்லா தமிழை போன்றவள் நீதானே..
உன் கைகள் பிடித்து நடக்க நான் தவழும் பிள்ளையாகிறேன்..
உன் எச்சில் சோறு உண்ண நான் அமுதம்தனை காண்கிறேன்..
மடியில் தலை வைத்து உறங்கிட பிள்ளை ஆகிறாய்
மகளே உனது மடிதனில் தலை வைத்து உறங்கிட தாயும் ஆகிறாய்..

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...