Wednesday, July 31, 2019

எங்கும் காதல்...😍

அன்னையின் மீது அன்புக்காதல்
தந்தையின் மீது பாசக்காதல்
ஆசான் மீது மிதப்புக்காதல்
தமிழின் மீது அளவில்லாக்காதல்
மாமன் மீது பரிகாசக்காதல்
அத்தை மீது அதிகாரக்காதல்
அண்ணனின் மீது அளவுக்காதல்
அக்கா மீது அக்கறைக்காதல்
தங்கையின் மீது தவிப்புக்காதல்
தம்பியின் மீது உரிமைக்காதல்
காதலியின் மீது கனவுக்காதல்
மனைவியின் மீது காதலோக்காதல்
பிள்ளையின் மீது பிரியக்காதல்
நண்பனின் மீது பிரியாக்காதல்

மீண்டும் கிடைக்குமா கிராம வாழ்க்கை

விடியற்காலை மணி நான்கு

சேவல் கூவி எழுப்ப
கோழி கொக்கரிக்க
குயிலின் மயிலின் சத்தம் இரைக்க
உடலை முறித்து கொண்டு எழுவோம்

காத்திருந்த உறவுகள் அழைக்கும்
ஆம் மாடு என்கிற மாமனும் ஆடு என்கிற அண்ணனும் நாய் என்கிற தம்பியும் தான் அது
குடும்பஅட்டையில் இல்லை ஆனாலும் குடும்பத்தில் பதிந்த உறவுகள்

அவைகளை கவனித்து விட்டு
காலைக்கடனை கவனிக்க ஆயத்தம் ஆவோம்
பனியும் வாடை காற்றும்
உடலை பதம்பார்க்க
கருவேலம் பல்லுக்கு இதம் கூட்ட
இயற்கை உரத்தை மண் ஏற்க காலை கடனை முடிப்போம்

நீரோடும் ஓடை
ஓடையை ஒட்டிய சாலை
சாலையை ஒட்டிய பனைமரங்கள்
பனைமரங்களில் விளைந்த பனங்காயும்
பங்குபோட்டு உண்றோம்
அதில் ஏறி சறுக்கி விளையாடினோம்
அதன் மட்டையில் வண்டி ஓட்டினோம்
மிதிவண்டி டயரை வண்டியாக ஓட்டியதும்
குரங்கு பார் போட்டு சைக்கிள் பழகினோம்

கிட்டிப்புள்ளு பம்பரம் கிச்சுகிச்சு கபடி கபடி கண்ணாமூச்சி நீச்சல் போட்டி என பல உடற்பயிற்சிகளை செய்தோம்

நீராகாரம் கூழ் கம்பங்களி சாப்பிட்டு மகிழ்ந்தோம்

சிறிய தென்னங்கீற்று  வீடுதான்
உள்ளே குனிந்துதான் போகவேண்டும்
ஆனால் பாசம் தலைநிமிர செய்யும்.
சிறிய காயம் ஏற்பட்டாலும் ஊரே நலம் விசாரிக்கும்.
வீட்ட சுத்தி காவற்படை போல வாழை தென்னை வேம்பு என மரங்க நிற்கும்.
யாரு வந்தாலும் உடனே உட்கார  வீட்டு முன் திண்ணை
அதில் படுத்து நிலா கண்டதும் பல்லாங்குழி ஆடியதும் அற்புதமாய் இருந்தது.
ஆயிரம் சண்டை வந்தாலும் ஊருக்கு என்றால் ஒன்றாய் நிற்கும் கூட்டம்.
அதிலும் ஊர் திருவிழா என்றால் அங்கு
விற்ற பொம்மைகள்
அதைகேட்டு அழுத நிமிடங்கள்
சுற்றிய ராட்டின சுற்றல்கள்
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்கள்.

எண்ணெய் ஒழுகும் தலை
நெற்றியில் சின்னதாய் திருநீர்
துவைக்க மறந்த மேலாடை
இடுப்பில் நிற்காத கால்சட்டை
இப்படி தான் பள்ளிக்கு செல்வோம்.

ஆசிரியர்க்கு மரியாதை அப்பாவுக்கு பயம் கலந்த பாசம்
அன்னை என்றால் அன்புனு திரிஞ்சோம்.


நண்பர்களுடன் சேர்ந்து
உலுக்கி சாப்பிட்ட நாகர்ப்பழமும்
சுட்டு சாப்பிட்ட புளியங்காயும்
திருடி சாப்பிட கொய்யாபழமும்
அடித்து உண்ட விளாங்காயும்
பறித்து சாப்பிட்ட மாங்காயும்
பிடுங்கிய சாப்பிட்ட கொடுக்காய்ப்புளியும்
எச்சில் ஊற சாப்பிட்ட நெல்லியும்
தாத்தா சீவி கொடுத்த இளநீறும்
ஆத்தா உருட்டிக் கொடுத்த உருண்டசோறும்
அனைவரும்
பத்து பைசா மிட்டாய் பார்த்து
எச்சில் விழுங்கிய நேரமது
இரண்டு ரூபாய் நோட்டில் டூரிங் தியேட்டரில் படம் பார்த்த காலமது
இன்றும் நெஞ்சில் இனிக்கிறது..!

ஆத்தோரம் தென்னன்தோப்பு
அழகழகாய் அணிவகுக்க
கொத்துகொத்தாய் தேங்காயும் இளநீரும் நீந்திப்பழகிய ஆறும்
அதில் பிடித்த மீனும் ஆக்கி திண்ண கூட்டாஞ்சோறும் என்னானு சொல்ல...

நிலமெல்லாம் பசுமைபோர்த்தி
எங்கெங்கும் வயல்வாசம்
களையெடுக்கும் பெண்களங்கே
பாடியிருக்கும் நாட்டுப்பாட்டும் பிள்ளை அழுதா தாலாட்டும்
கிழவன் செத்தா ஒப்பாரியும்னு கேட்டு நின்னோம்.

சுட்டெரிக்கும் வெயிலுதான் ஆனா
இதமான கிராமத்து காத்தும் சுத்தமான சுவாசமும் இரைச்சல் அற்ற வாழுவும்
சுத்தமான மனங்களும் இருக்கும்.
ஆனால்
இன்று ஓசியில் கிடைத்த காற்றுக்கும்
ஈசியாக கிடைத்த நீருக்கும்
காசு கொடுத்து வாழ நரகமான வாழ்க்கை வாழ்ந்திட்டு இருக்கோம்...

வாழ்க்கை ThaThThuvam#5


வாழ்க்கை ThaThThuvam#4


Sunday, July 28, 2019

வெற்றி நிச்சயம்

சோகத்தை கூட்டிட
சோதனைகள் பெருகி நிற்க்கும்..

தயக்கத்தை சேர்த்திட
தாமதங்கள் வளர்ந்து நிற்கும்..

பயத்தை பற்றிட
பண்ணும் செயலும் சிதறி போகும்..

தோல்வியை அணைத்திட
வெற்றி உதறி போகும்..

நினைவில் கொள்

சோர்ந்தே இருந்திட
சோறும் இல்லாது போகும் ஒருநாள்...

ஆகையால்

சோகத்தை சுகமாக்கு
தயக்கத்தை தவிடாக்கு
பயத்தை பதராக்கு
தோல்வியை உரமாக்கு
சோர்வை வியர்வையாக்கு

இவைகளுக்கு மேல்

செயலை உனதாக்கு

வெற்றி நிச்சயம்

நாளை?

அன்று
கிராமத்தில் இருந்தோம்
பூக்களை ரசித்தோம்
புல்வெளியில் விளையாடினோம்
உறவுகளை நேசித்தோம்
ஊரை கொண்டாடினோம்
பயிர்கள் செய்தோம்
உயிர்கள் காத்தோம்
இயற்கையை வளர்த்தோம்..!

இன்று

அடுக்குமாடி குடியிருப்பு  வந்தது
அக்கம்பக்கம் பேசும் பழக்கம் போனது

தொலைக்காட்சி வந்தது
செய்தித்தாள் பார்க்கும் பழக்கம் போனது

கணினி வந்தது
புத்தகம் படிக்கும் பழக்கம் போனது

கைப்பேசி வந்தது
கடிதம் எழுதும் பழக்கம் போனது

செயலிகள் வந்தது
செயல்கள் செய்யும் பழக்கம் போனது

வாகனம் வந்தது
நடைபயிற்சி போகும் பழக்கம் போனது

குளிர்சாதனம் வந்தது
இயற்கை காற்றை ரசிக்கும் பழக்கம் போனது

வாசனை திரவியம் வந்தது
பூக்களின் வாசம் உணரும் பழக்கம் போனது

துரிதஉணவு வந்தது
பாரம்பரிய உணவு பழக்கம் போனது

பணம் பதவி வந்தது
பாசம் நேசம் அனாதையாக போனது

நகர வாழ்க்கையில் அனைத்தும் வந்தது
நகரும் வாழ்க்கை நரகம் போல ஆனது...!

அன்று அறிவியல் செய்தோம்..
இன்று அரசியல் செய்கின்றோம்...
நாளை...?

மேரா ப்யாரி...

பார்வையால் அஞ்சவும் இல்லை 
மொழிகளால் கொஞ்சவும் இல்லை 
தேவையென கெஞ்சவும் இல்லை 
கோபமென மிஞ்சவும் இல்லை
ஆசைக்கோ பஞ்சமும் இல்லை 

உறவும் இல்லை ஊடலும் இல்லை 
தொடவும் இல்லை விடவும் இல்லை 

இருந்தும் ...

கண்ணில் படாது கனவில் வரும் மாயக்காரி 
இதயத்தை அவள் வசமாக்கிய வசியக்காரி 
அவளையே நினைத்து இயங்கவைக்கும் எந்திரக்காரி 
எனது இதயத்தில் வந்தமர்ந்து ஆட்சி செய்யும் மந்திரக்காரி 
வாழ்க்கையையே பூந்தோட்டமாக மாற்றிய வசந்தக்காரி
காதல் இதுதான் என அறியவைத்த தந்திரக்காரி  

ஆம் அவள் காதல் கைகாரி 
ஒய்யாரி சிங்காரி மேரா ப்யாரி...

Friday, July 26, 2019

ஆடும் மனிதா...

ஆடும் மனிதா ஆடும் மனிதா அடங்கிவிடு
உனது ஆட்டமும் ஓர்நாள் அடங்கிவிடும் என்பதை உணர்ந்துவிடு
கருவில் உதித்த யாவர்க்கும் ஓர்நாள் மரணம் உண்டு
இதை கருத்தில் நிறைத்து அடக்கம் கொண்டால் உயர்வு உண்டு
சரணம்
********
பணம் என்பது வெற்றுக்காகிதம்
இதுதானே இன்றைய உலகின் ஆயுதம்
இதனால் ஆங்காங்கே விவாதம் வீண்வாதம் நடக்குது பல வதம்.
கைகளுக்கு கை மாறும் பணம்
நிரந்தரம் தானே உனது மனம்
இதை ஏற்க மறுக்கிறதா பிடிவாத குணம்.

ஒரே ஒரு நாளில் ஏழை பணக்காரனாவான்
அதே நாளில் பணம் இருந்தவன் ஏழை ஆவான்

இயற்கை பல வகையில் நமக்கு சொல்லியதை மறக்காதே

ஒருபோதும் மறந்து ஆட்டம் ஆடாதே..

Wednesday, July 24, 2019

ஒரு பக்க க(வி)தை#8


கணவனும் மனைவியும் அழகான காலை பொழுதில்
படகு சவாரி செய்தபடி இருந்தனர்.
 கணவன் தன் மனைவியை பார்த்து இயற்கையோடு
ரசித்தபடி படகை ஓட்டிக்கொண்டிருந்தான்
அப்பொழுது மனைவியிடம் கணவன் கேட்டான்
கண்ணே நாம் நடுக்கடலில் சவாரி செய்கின்றோம்
உனக்கு பயம் ஏதும் இல்லையா என வினவினான்?

அதற்கு அவள் கண்ணால இங்கு
அலை வந்து என்னை இழுத்தாலும்
மீன்  வந்து என்னை கடித்தாலும்
சுறா வந்து என்னை விழுங்கினாலும்
சுனாமி வந்து என்னை சுற்றி அடித்தாலும்
நீங்கள் இருக்கிறீர்கள் என்று பயம் இல்லாமல் இருக்கிறேன் என்றாள்.

அதே கேள்வியை அவனிடமும் கேட்டாள்

அவனும் சற்று புன்முறுவலுடன் சொன்னான்

வானம் மேலிருக்க பூமி கீழிருக்க
நெஞ்சில் துணிவிருக்க கண்ணில் நீயிருக்க
அனைத்திற்கும் மேல் கட'வுள் நம்பிக்கை இருக்க
என்ன நேர்ந்தாலும் உன்னையும் என்னையும்
மீட்டெடுப்பேன் என கூறினான்.

கண்கலங்கியபடி மெல்லிய சிரிப்புடன் காதல் கொடுத்தாள்.
அவனும் சிரித்தே காதலை பருகினான்.

வாழ்க்கை - ThaThThuvam#3


MOtivation#60


MOtivation#59


Monday, July 22, 2019

காதல் பாடல்#50

பூக்களின் காடே புதையலின் வீடே
கவிகளின் நாடே கலைகளின் கூடே
தங்கச் சிலையே தாவனி நிலவே
தரையினில் நடக்கும் சங்கத் தமிழே
புதுக்கவிதை பாடும் புன்னகை இதழே
சரணம்
********
எண்ணில் அடங்கா தமிழ் சொற்களை சேகரிக்கிறேன்
உன்னை பற்றி தேன்தமிழ் பாடிட அதில் சிலசில வார்த்தைகளை மட்டும் கோர்கின்றேன்
நெஞ்சம் கொஞ்சி கொஞ்சி படித்திட நிற்காது சங்கத்தமிழ் வளருதே..
என்னுள் பட்டிமன்றம் தினம் தினம் உன்னை பற்றி நிகழுதே..
சரணம்
********
முகத்தில் தோன்றும் அழகு புன்னகையை சேகரிக்கிறேன்
உன்னை மோதி அழகாய் சிரித்திட அதில் நித்தமும் கரைந்து போய் தோற்கிறேன்.. 
சிரித்து சிரித்து கொன்டே இருக்க எனது ஆயுட்காலம் நீளுதே..
இதற்காக உன்னிடம் தினம் தினம் தோற்று நான் ஜெயித்தே வாழுவேன்..

Wednesday, July 17, 2019

காதல் பாடல்#49

கைவீசி நடக்கும் தேரா
கவிகள் நிறைந்த ஊரா
மனம் கொள்ளை கொண்ட டோரா
உள்ளம் கவர்ந்த வீரா
உயிரில் கலந்த சீரா
காதல் கனைகள் தொடுக்கிற நேரா

சரணம்
*********
நான் கொஞ்ச மடியினில் நீ டெடியாக வேண்டும்
நீ கெஞ்ச மெத்தையில் நான் பஞ்சாக வேண்டும்
திகட்டாத அமுல்பேபியே
குறையாத அமுதசுரபியே
என்னை மயக்கிய மந்திரவாதியே
உன்னையே நாடும் நான் ஒரு சந்தர்ப்பவாதியே...
சரணம்
********
நான் பொம்மையாக இருந்திட நீ விளையாட வேண்டும்
நீ பிராமிட் மம்மியாக நான் பயந்திட வேண்டும்
உருகும் பனிமலையே
உருக்கும் தங்கசிலையே
என்னை கூகுள் செய்தபடியே உன்னையே தேடும் நீயும் ஒரு கூகுள்பிச்சையே...

MOtivation#58


காதல் பாடல்#48

கவிதையே கவிதையே
கவிதைகெல்லாம் தலைவியே
பாரதியின் தமிழ் மொத்தம்
நீ பேச ஒற்றை வார்த்தையில் கொட்டும்

தலைவனே தலைவனே
உள்ளம்கொண்ட அரசனே
தமிழின் புகழ் மொத்தம்
நீ கட்டி ஆள அகிலமெங்கும் முட்டும்
சரணம்
********
முச்சங்கம் வளர்த்த தமிழெலாம்
உன் மொழியில் தினமும் பொழியுதே..
உன் அங்கம் கொண்ட அழகெலாம்
எனை மூர்ச்சையாக்கி கொல்லுதே..
என் கவிதை கொண்ட பொருளையெல்லாம்
உன் ஒற்றை சொற்கள் வெல்லுதே..
சரணம்
********
எத்திக்கும் நொடி பொழுதெல்லாம் உன் நினைவில் தினமும் வாழுதே
உன் பெயர் கொண்ட இடமெல்லாம் எனை நிற்கச் சொல்லுதே..
என் உலகம் யாவும் நீயென்பதை உன் ஒற்றை முகம் காட்டுதே..

காதல் பாடல்#47

செல்லம் கெஞ்சும் பூவே நீதானே
உன் உள்ளம் கொள்ளை கொண்டது நான்தானே
நெஞ்சம் கொஞ்சும் இதயம் நீதானே
உன் அர்த்தம் கொண்ட வாழ்க்கை நான்தானே
நீயே நீயே என்னில் பாதி
நானே நானே உன்னில் மீதி
சரணம்
*********
ஆளுமை கொண்டெனை காலமும் ஆளாப்பிறந்தாயடா
என்னிடை உன்கரம் பற்ற ஏங்குகிறதே வா அருகில் நீயும் நானும் நாமாகும் நேரம் இது தான் என்பேனே.
இதழ் இதழ்களால் கவிதை எழுதும் ஒத்திகை பார்ப்போமா கேட்கிறதே மனமது சொல்லடா என் கண்ணாளா..
சரணம்
********
உந்தன் கண்ணிமை படபடக்கும் வண்ணத்துப்பூச்சியடி
கண்களே மதுக்கடை அதில் கருமணியோ மது உண்டு உருளும் இங்கும் அங்கும் போல் நான் ஆனேனடி.
அந்த கண்களால் பார்த்து பார்த்து
என்னை மீண்டும் விழுங்குவது நியாயமா சொல்லடி என் செல்லமே....

Tuesday, July 16, 2019

இசைஞானியார்

ராகங்கள் பதினாறு
ராகதேவனின் இசையில் ஆகும் பலநூறு..

இசையில் ஏழு ஸ்வரங்கள்
இசைஞானிக்கு பாட போதும் ஒரு ஸ்வரம்..

மெல்லிசை இன்னிசை உண்டு
மெஸ்ட்ரோவின் இசையில் இவ்விரண்டுடன் இடையிசையும் உண்டு..

தூக்கத்தில் தாலாட்டாய்
மகிழ்ச்சியில் காதலாய்
தோல்வியில் ஆறுதலாய்
வெற்றியில் ஆனந்தமாய்
சோகத்தில் சுகமாய்
ஏக்கத்தில் துணையாய்
வலியில் ஆறுதலாய்
ஆட்டத்தில் துள்ளளாய்
மனஅழுத்தத்தில் மருந்தாய்
பயணத்தில் வழித்துணையாய்

அவர் இசை இல்லாத இடங்களே இல்லை

அன்று அன்னக்கிளி தொடங்கி
இன்றும் ராகநடை போட்டு இளையராஜாங்கம் நடத்தி கொண்டிருக்கிறார்..

மருத்துவன் கண்டிடாத அருமருந்து
இசைஞானியார் அவர்களின் இசை விருந்து

ஆம் உலகம் பார்த்து
வியந்த மனிதருள் முதன்மையானவர்
இசைஞானி இளையராஜா.

அவர் வாழ்கிற கட்டத்தில் வாழ்கிறோம்
என்பதே நமக்கு பெருமை!

காதல் பாடல்#46

நெனச்சு பார்கையில
நான் நானாக இல்ல காரணம் நீயான புள்ள
காதலாய் நீயே உள்ள
புகுந்தாயே நல்ல
உன்னையே நினைக்கையிலே
உயிரே எனது இல்ல
உயிராய் நீயான மாமா
காதலாய் நீயே உயிரில் கலந்தாயே..

சரணம்
********
வெற்று காகிதமாக இருந்தேன் மாமா
உன்னை அதில் அழியாத காதல் ஓவியமா நெஞ்சில் வரைந்து மாட்டிப்புட்ட
அறியாத பிள்ளையா இருந்தேன் புள்ள
உன்னை எனக்கு காட்டி என்னை நொடியில் எனக்கே அறிய வைச்சுபுட்ட
தினம் தினம் கத்துக்கிறேன்
மனசுகுள்ள வச்சுக்கிறேன்
உன்னை தவிர ஏதுமில்ல வாழ்க்கை நீயே ஒத்துக்கிறேன்.

சரணம்
********
தெளிந்த நீரோடையாக இருந்தேன் புள்ள
கண்ணால் கல்ல எறிஞ்சு காதல் கலக்கம் என்னில் வாச்சுபுட்ட
தரிசு நிலமாக இருந்தேன் மாமா
உன்னை விதையை எறிஞ்சு உடலில் முழுவதும் உன்றி பரவிபுட்ட
எப்ப வந்து சேர்ந்திடுவ
வேருக்குநீர் ஊத்திடுவ
பட்டு போகும் தேகமடா தொட்டு தீர வேணுமடா

Sunday, July 14, 2019

இன்னும் என்ன தோழா

இன்னும் என்ன தோழா

புதியதொர் சுதந்திரம் பெற
இனியொரு பிறந்து காந்தி வரமாட்டார்
சத்தியாகிரகம் செய் சுதந்திரம் பெறுதற்கு...

புதியதொரு புரட்சி செய்ய
இனியொரு  பாரதி பிறந்து வரமாட்டார்
முண்டாசு கட்டு
எழுச்சி புரட்சி பாடுதற்கு...

புதியதொர் சட்டங்கள் சொல்ல இனியொரு  அம்பேத்கார் பிறந்து வரமாட்டார்
சட்டம் படி
குற்றங்கள் குறைக்க..

புதியதொர் சமத்துவம் பிறக்க இனியொரு பெரியார் வரமாட்டார்
யாவரும் சமமென நினை
ஒற்றுமை நிலைக்க..

புதியதொர் திட்டங்கள் போட இனியொரு காமராஜர் பிறந்து வரமாட்டார்
திட்டங்கள் தீட்டு
மக்கள் நலம் பெற..

புதியதொர் வளர்ச்சியை காண இனியொரு நம்மாழ்வார் பிறந்து வரமாட்டார்
விவசாயம் செய்
 உயிர்கள் உயிர் வாழ..

எதற்கும் எவரையும்
எதிர்பார்க்காதே
நீயே தொழிலாளி
நீயே முதலாளி
தோழா
இறங்கு செய் உயர் உயர்த்து...

Saturday, July 13, 2019

என்ன சம்மதமா?

அன்பே..😍

நீ பார்த்தால்
நான் பறந்து போகின்றேன்.
நீ அழுதால்
நான் நனைந்து போகின்றேன்.
நீ அசைந்தால்
நான் அசந்து போகின்றேன்.
நீ சிரித்தால்
நான் சிதறி போகின்றேன்.
நீ பேசினால்
நான் வியந்து போகின்றேன்.
நீ முறைத்தால்
நான் உறைந்து போகின்றேன்.
நீ குழைந்தால்
நான் உருகி போகின்றேன்.
நீ நடந்தால்
நான் தொலைந்து போகின்றேன்.

அன்பே என் காதலை
நீ மறுத்தால்
நான் உன்னில் மரித்து போய்விடுவேன்.

அன்பே என் காதலை
நீ ஏற்றால்
நான் கண்ணுக்கு இமையாக காலமும் காத்துக்கொள்வேன்.

என்ன சம்மதமா?

வெற்றி நிச்சயம்

அன்புத்தோழா...

இன்னும் என்னடா

மூளையில் முடங்கி இருந்தது போதும்
எழுந்து நாற்புறமும் பார்
நம்பிக்கை தரும் திசைகள்
பாதை கண்டு நட
பின்நாளில் உன்னையும் பின் தொடரலாம் பலர்..

போகும் பாதையில் தடைகள் வரலாம்

கற்களாக இருந்தால் துகள்களாக மாற்று ஏறி மிதித்துப் போ..
முட்களாக இருந்தால் கிரீடமாக மாற்று சூடி கொண்டு போ..
பள்ளமாக இருந்தால் படிகளாக மாற்று
கைப்பிடியாக பிடித்து போ..
மேடாக இருந்தால் ஏணியாக மாற்று ஏறி நின்று போ..
வேகதடையாக இருந்தால் பந்தாய் மாற்று துள்ளி குதித்து போ..
மலையாக இருந்தால் பறவையாக மாற்று தாவி பறந்து போ..

தடையாக எவரெனும் இருந்தால்
உன்னையே ஆயுதமாக மாற்று
தகர்த்தெறிந்து போ..

இலட்சியமே உனது
இலக்காக கொண்டு
இறுதிவரை முன்னேறு
வெற்றி நிச்சயம்...!

Friday, July 12, 2019

காதல் பாடல்#45

அன்பே அன்பே என் அன்பே
என்னில் உன்னை பார் அன்பே
மெல்ல மெல்ல என்னை உன்னில் கரைத்தேனடி
கிள்ள கிள்ள நெஞ்சில் காதல் வளர்த்தேனடி
Oh my love oh my love oh oh my love
சரணம்
********
காலையில் கண் விழிக்கும் வேளைதனிலே சூரியனாய் தெரிகிறாய்
மாலையில் கண் உறங்கும் போதினிலே சந்திரனாய் ஒளிர்கிறாய்
நாள்தோறும் உள்ளிருந்து இங்கும் அங்கும் ஓடிஆடி வேளைதனில் உறுதியினை ஊட்டுகிறாய்..
Oh my love oh my love oh oh my love
சரணம்
********
 உந்தன் கோல விழிப்பார்வையில் வயமிழந்து செயலிழந்து போகிறேன்
 என்னையே
காணிக்கையாய் என்மீது கொண்ட காதலுக்கு கட்டுண்டு கிடக்கிறேன்
என்னை அணைத்தால் கட்டிலிருந்து விடுபட்டு உடன்படுவேன் உந்தன் ஆருயிர்க் காதலனாய்..
Oh my love oh my love oh oh my love

Thursday, July 11, 2019

வாழ்க தமிழ் வளர்க தமிழ்

எனக்கு உயிர் கொடுத்தவர் அப்பா
என்னை அழகுஓவியமாய் தீட்டியவள் அம்மா
உலகம் அறியச்செய்தவர் எனது ஆசான்கள்

வாழ உயிர் மூச்சாக இருப்பது அன்னைத்தமிழ்
நீ இல்லது போனால் மூச்சு இல்லாது போகும்

தமிழை படிக்கவோ எழுதவோ பேசவோ கூட தேவை இல்லை
தமிழை நினைத்தாலே போதும்
தமிழன் தலைமுடிகூட திமிறாய் தலைநிமிர்ந்து நிற்கும்

பிறந்தது முதல்

அ'என்பதில் தொடங்கி
ஆவென்று கூச்சலிட்டு
இதழ்களால் பேசி
ஈர்ப்பால் கவர்ந்து
உச்சரிப்பில் சுழன்று
ஊனுயிரில் கலந்து
எட்டுத்திக்கும் பரவி
ஏறி உச்சசியில் நின்று
ஐயமில்லாமல்
ஒன்றாய்
ஓவென ஓலமிட்டு
அவ்வை தமிழ் வணங்கி
அஃதே நம்மை உச்சம் கொண்டு செல்லும் தமிழ்...

வாழ்க தமிழ் வளர்க தமிழ்  

Wednesday, July 10, 2019

காதல் பாடல்#44

மலரே மலரே
உன் வாசம் என் சுவாசம்
மழையே மழையே
மண் நேசம் என் பாசம்
மௌனமாய் புன்னகை பூக்கின்றாய்
மலர்ந்து சிரிக்கின்றாய்
மண்ணில் உதிர்ந்த மேலும் மணம் கமழ்கின்றாய்
சரணம்
********
தென்றல் தொட தலை அசைத்து பார்க்கிறாய்
வண்டுகள் பாட உடல் புல்லரித்து நிற்கிறாய்
இதழ்கள் சுழிக்க மண்துகள்களாக சுழல்கிறேன்
மண்ணாசை மறைந்து பெண்ணாசையாக உருபெறுகிறதே..
தலைகவிழ்ந்து என்னை கவிழ்த்து காதல் வலுபெறுகிறதே..

இது நியாயமா சொல் சொல்
மலரே மலரே
உன் வாசம் என் சுவாசம்
மழையே மழையே
மண் நேசம் என் பாசம்
மௌனமாய் புன்னகை பூக்கின்றாய்
மலர்ந்து சிரிக்கின்றாய்
மண்ணில் உதிர்ந்த மேலும் மணம் கமழ்கின்றாய்
(மண் மலரிடம் காதல் கொண்டால்.....)

Tuesday, July 9, 2019

MOtivation#57


சீருடை

பள்ளி என்று சொன்னாலே
துள்ளி வரும் நினைவுகள்..

மனம் அள்ளி கொண்ட நண்பர்கள்
தினம் சொல்லி கொடுத்த ஆசான்கள்

இடங்கள் வேறுவேறு ஆனாலும்
உடனிருந்த இடம் பள்ளிதான்..
வசதி வேறுவேறு ஆனாலும்
வசமிருந்த வசதி பள்ளிதான்..
குலங்கள் வேறுவேறு ஆனாலும்
ஒன்றாயிருந்த குலம் பள்ளிதான்..
பின்புலம் வேறுவேறு ஆனாலும்
நட்பின் பக்கபலம் பள்ளிதான்..
படிப்பு வேறுவேறு ஆனாலும்
நடிப்பில்லா பிடிப்பு பள்ளிதான்..

இப்படி பல வேறு ஆனாலும்
நாங்கள் இங்கே ஒன்றுதான்
காரணம்
வேற்றுமை இல்லா பள்ளி சீருடை தான்....

Monday, July 8, 2019

காதல் பாடல்#43

கண்களால் வித்தை புரிகிறாய்
பார்வையால் கவிதை வடிக்கிறாய்
விழிகளால் காதல் வதை செய்கிறாய்
நெஞ்சில் மணி மணி விதைகளாய் விழுந்து முளைக்கிறாய்
சரணம்
********
உன் இதயம் மோதிட அணைத்து விடு
என் முடியை கோதிட முத்தம் இடு
செவ்விதழ்கள் இனிக்க ஒத்தடம் கொடு
அன்பினால் வாழ்க்கையை மூழ்க விடு
சரணம்
********
உன் வெட்கத்தால் வெட்கம்தனை தொலைத்து விடு
என் மேனியை மேலாடையாக அணிந்து விடு
குருதியினை சூடாக்க உடம்பில் ஓடவிடு
நீநானாக நான் நீயாக விடு

மகளை பற்றிய பாடல்

சுற்றும் பூமிதனில் சுழலும் வாழ்க்கையிது
அற்றும் உறவுதனில் பற்றும் பாசமிது
மகளே பாச மகளே என் பிறப்பின் அர்த்தம் உன் பிறப்பே
மகளே நேச மகளே என் செயலின் தொடக்கம் உன் சிரிப்பே
சரணம்
********
ஓடி ஓடி உழைத்தாலும் கோடி கோடி சேர்த்தாலும் எதற்கும் ஈடில்லா பிள்ளை செல்வம் நீதானே ...
உன் மழலை மொழி கேட்க வரும் கவலைகள் கலைந்தோடுமே..
உன் செல்ல சிணுங்கலை பார்க்க வரும் தொல்லைகள் தொலைந்தோடுமே..
வாழ்வில் நாங்கள் கண்ட வசந்தம் நீதானே மகளே..
பூமியில் எவரும் கண்டிடாத நாங்கள் கண்ட சொர்க்கம் நீதானே மகளே...
சரணம்
********
அள்ள அள்ள குறையாத சொல்ல சொல்ல திகட்டாத எதற்கும் ஈடில்லா தமிழை போன்றவள் நீதானே..
உன் கைகள் பிடித்து நடக்க நான் தவழும் பிள்ளையாகிறேன்..
உன் எச்சில் சோறு உண்ண நான் அமுதம்தனை காண்கிறேன்..
மடியில் தலை வைத்து உறங்கிட பிள்ளை ஆகிறாய்
மகளே உனது மடிதனில் தலை வைத்து உறங்கிட தாயும் ஆகிறாய்..

Friday, July 5, 2019

தமிழே....

தமிழை பேச..

நா நடனமிட்டு ஆடும்!
நரம்புகள் புடைத்து எழும்!
உள்ளம் உவகை கொள்ளும்!
இதயம் மெட்டெடுத்து பாடும்!
இரத்தம் கும்மாளத்தில் கொப்பளிக்கும்!
கைகள் ஓங்கி நிற்கும்!
கால்கள் உரைநடை போடும்!
உடல் சிலிர்த்து நிற்கும்!
உறுப்பெல்லாம் பேருவகை கொள்ளும்!
மூளையில் கர்வம் குடிபுகும்!
சிந்தை சீர்பட்டு போகும்!

மண்டியிட்டு வணங்குகிறேன் தமிழ் அன்னையே
மண்டியிட எங்கும் விடமாட்டாய் என்னையே
மண்ணில் இட்ட போதும் என்னையே
மங்காது ஓங்கும் உன் புகழ் தமிழ் அன்னையே...

Thursday, July 4, 2019

அன்பே...

உன் முகம் பார்த்து திருத்தி கொண்டது நிலா..
உன் கார்கூந்தல் பார்த்து விழ கற்றது அருவி..
உன் கண்கள் பார்த்து தெளிவு பெற்றது வானம்..
உன் சுவாசம் பார்த்து தென்றல் யாதென புரிந்துகொண்டது காற்று..
உன் கண் சிமிட்டல் பார்த்து மின்னி காட்டியது மின்னல்..
உன் சிரிப்பை பார்த்து பூத்து குலுங்க கற்றது பூக்கள்..
உன் கோபம் பார்த்து சுடுவதுயாதென அறிந்து கொண்டது சூரியன்..
உன் நெஞ்சம் பார்த்து மலைமுகடுகள் சூழ்ந்து காட்டி நின்றது..
உன் இடை பார்த்து தலை அசைத்தது மரம்..
உன் நடை பார்த்து நடை பயின்றது நதி..
உன் உடை பார்த்து போர்த்தி கொண்டது புல்வெளி..
அன்பே.. இப்படி உன்னை பார்த்த பின்புதான்
இயற்கை தன்னை உருவாக்கிக் கொண்டதோ...!😍

Wednesday, July 3, 2019

காதல் பாடல்#42

அல்லியே மல்லியே
மனம் கவர்ந்த கள்ளியே
கன்னனே மன்னனே
உள்ளம் நுழைந்த கள்வனே
காலங்கள் நீதானே காலம் இறுதிவரை நான்தானே
பூதானே தேன்தானே உன்னை சுற்றும் தேனீ நான்தானே
சரணம்
********
வாசம் வாய்ந்த மல்லி நீயே
சுவாசம் தேடும் உயிராய் ஆனேன்
பாசம் பொதிந்த கள்ளி நீயே
நேசம் தேடும் கள்வன் ஆனேன்
ஆகாசம் நிறைந்த அழகு நீயே
இதிகாசம் தேடும் புதுமை நீயே
உலகம் வியக்கும் அழகு நீயே
உன்னை தேடிட அழகன் ஆனேன்.

சரணம்
********
மணம் மிகுந்த மாங்கனி நீயே
துளைக்க வரும் வண்டாய் ஆனேன்
கனம் மிகுந்த தேன்சுளை நீயே
சுவைக்க வரும் நண்டாய் ஆனேன்
வனம் பொதிந்த வாழை நீயே
கலைக்க வரும் சிண்டாய் ஆனேன்
உலகம் போற்றும் முக்கனி நீயே
உன்னை தொழும் பக்தன் ஆனேன்.

Tuesday, July 2, 2019

காதல் பாடல்#41

என்ன செய்தாய் என்னை என்ன செய்தாய்
காதல் செய்தாய் என்னை காதல் செய்தாய்
மாயை மாயை பார்ப்பதெல்லாம் மாயை
பார்க்கும் உன்னை தவிர எல்லாம் மாயை மாயை
சரணம்
********
மேனியில் தொட்டு செல்லும் ஈக்களும் அணுகுண்டாய் வலிக்க செய்யுதே..
ஊறும் எறும்பும் யானை பிளிறி  நடந்துசெல்வதாய் அறிய தோனுதே..
உண்ணும் உணவும் கீழே இறங்கி தொண்டைகுழியில் நகர மறுக்கிறதே..
காரணம் நீ பார்த்த பார்வையோ
காதலால் நான் கொண்ட மாயையோ
சரணம்
********
கடல்நீரில் நீந்தும் மீன்கள் எல்லாம் விண்மீன்களாய் வானில் நீந்துதே..
வானில் வந்திடும் மின்னல் எல்லாம் மண்புழுக்களாய் மண்ணில் ஓடுதே..
வீசும் தென்றலும் மேனி எங்கும் புயல்காற்றாய் வீசிச் செல்லுதே..
காரணம் நீ பார்த்த பார்வையோ
காதலால் நான் கொண்ட மாயையோ

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...