Tuesday, June 25, 2019

பெண்ணும் கவிதையும்

வெட்கத்தில் புதிதாய் மொழிபவள் பெண்
வார்த்தைகளில் புணைந்து புதிதாகுவது கவிதை...

அழகையெல்லாம் சிரிப்பில் மறைத்து வைப்பவள் பெண்
அர்த்தமெல்லாம் வார்த்தையில் பதுக்கி வைக்கும் கவிதை...

சேலையை உடுத்தினால் பேரழகு பெறுவாள் பெண்
எதுகை மோனையை சேர்த்தால் அழகுகூடும் கவிதை...

அதிசய கருவில் அடுத்த தலைமுறை தரும் மேன்மையை கொண்ட பெண்
அழகு கருவில் உதிக்கிறது பேரழகு மேன்மை கவிதை...

அழகு மாயாஜாலங்களின் அணிவகுப்பு பெண்
வார்த்தை ஜாலங்களின் தொகுப்பு கவிதை...

தாய்மையில் பெண்மை முழுமை அடைவாள் பெண்
தாய்மொழியில் மொழியின் முழுமை அடையும் கவிதை...

சொல்லில் அடங்கா சொல்லில் சொல்ல வேண்டுமாயின் பெண்ணுக்கு அச்சாரம் பெண்.
சொல்லில் அடங்கினாலும் பல சொற்களுக்கு அதன் அச்சாரம் கவியின் தலைப்பு...

பெண்ணால் கவிதை
ஆம் என்றால்
கவிதையாகும் பெண்...!

1 comment:

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...