Friday, June 21, 2019

பெண்ணே....

பெண்களுக்கு நேரும் அநியாயங்களை தட்டி கேட்க
பெண்களே அச்சப்பட்டு முன்வர யோசிக்கிறார்கள்.

ஏன்?

பெண்ணுக்கு நிகர் பெண்தானே...

அடுப்பாங்கரையில் அடங்கியது போதும்
வீட்டுமூளையில் முடங்குவது போதும்

எழு... பெண்ணே உனக்கு அநீதி நேர்ந்தால்

காய்கறி கத்தியை வாளாக எடுத்து சொறுகி விடு

கரண்டியால் ரத்தத்தை உடலில் இருந்து எடுத்து விடு

தோசை கல்லால் பின்னால் சூடு போட்டு விடு

மாவுக்கட்டையால் மண்டையை உடைத்து விடு

முறத்தை கேடயமாய் கொண்டு எதிர்பவரை புடைத்து விடு

காய் கறிகளை அறுப்பது போல் கழுத்தை அறுத்து விடு

மாப் குச்சியால் ஓட ஓட விரட்டி அடித்து விடு

ஸ்பூன் கரண்டியால் கண்களை நோண்டி விடு

தட்டை கொண்டு முட்டியை தட்டி விடு

துணிகளை போல் தோதாக தோள்களை துவைத்து தொங்கவிடு

துடைப்பத்தை துப்பாக்கியாக ஏந்தி சுட்டு விடு

எதுவும் முடியாது போனால்

உன்னை நீயே ஆயுதமாக மாற்றி விடு.

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...