Thursday, June 27, 2019

காதல் பாடல்#40

கூடையில பழம் கொண்டு போற புள்ள
உன் கூட நான் வர சம்மதமா சொல்லு புள்ள
மீசையில ஆச வைச்ச என்ற மாமா
உன் உடன் ஆயுள் வர வாழனும் சொல்லு மாமா
நீ கண் அசைத்தா போதுமே
வேறு என்ன வேணுமே....
சரணம்
********
தாலிகட்டி உன் கூடதான் வாழ்ந்திடனும்
தங்கமே தங்கம் உன் பார்த்து ஏங்கிடனும்.
ஆசைவச்சு உன் கூடதான் சேர்ந்திடனும்
அழகே அணைக்காமலே உன் உயிரில கலந்திடனும்.
நினைத்தபடி வாழ்க்கை தான் அமைந்திடனும்
நினைத்ததற்கும் மேலாக காதல் நாம்மில் இருந்திடனும்.
இப்படியே காலமெல்லாம் ஓடிடனும்
போனா நம்ம உயிரும் சேர்ந்தேதான் உலகம் விட்டு போயிடனும்.
சரணம்
********
காசுபணம் உன் முன்னாடி தூசுபிணம்
பேசும்மனம் கொண்டாடி உன் பின்னாடி அலைந்திடுமே.
காதோரம் உன் இதழின்  முத்தம் 
காதலுக்கு கிடைத்த நம் தரச்சான்றிதழே.
வருசத்துக்கு ஒருபுள்ளதான் பெத்திடனும்
வயசானாலும் பிள்ளையா மடியினில் படுத்து தூங்கிடனும்.
இப்படியே காலமெல்லாம் ஓடிடனும்
போனா நம்ம உயிரும் சேர்ந்தேதான் உலகம் விட்டு போயிடனும்.

1 comment:

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...