என்னுள் விதையாய் விழுந்த காதலே
கண்ணுள் கனவாய் மிதந்த காதலே
எண்ணில் நினைவாய் நின்ற காதலே
என்னில் உயிராய் நிறைந்த காதலே
உன்னை கண்ட நாள் முதல் நான் நானாக இல்லை
பார்க்கும் இயற்கையிடம் தூது விட்டேன்
இயல்பாய் போவதது ஏனடி
இயல்பாய் இல்லை நானடி.
சரணம்
*********
மின்னலிடம் தூது அனுப்பினேன் என் காதலை
மின்னல் திரும்பியது ஏனோ
மின்னல் உன்கண் சிமிட்டியதை பார்த்ததாலோ.
நிலவிடம் தூது அனுப்பினேன் என் காதலை
நிலவு திரும்பியது ஏனோ
நிலவு உன்அழகில் வியந்து போனதாலோ.
செடிகொடி மலர் வாசம் கூட பறைசாற்றும் என் காதலை.
இப்படி இயற்கையிடம் காதலை சொல்லி சொல்லி
இயற்கையும் இயல்பாய் இல்லையடி
இறுதியில் என் கண்களை தூது விட்டேன்
என்னவென்று கேளடி...
சரணம்
**********
காற்றிடம் தூது அனுப்பினேன் என் காதலை
காற்று திரும்பவில்லை ஏனோ
காற்றும் உன்னை பார்த்ததும் தென்றல் ஆனதாலோ.
பூவிடம் தூது அனுப்பினேன் என் காதலை
பூவும் முகமலர்ந்தது ஏனோ
பூவும் உன்னை பார்த்து பூரிப்பு அடைந்ததாலோ.
வானம் மேகம் மழை கூட பறைசாற்றும் என் காதலை
இப்படி இயற்கையிடம் காதலை சொல்லி சொல்லி
இயற்கையும் இயல்பாய் இல்லையடி
இறுதியில் என் கண்களை தூது விட்டேன்
என்னவென்று கேளடி...
No comments:
Post a Comment