Sunday, June 9, 2019

ஹைக்கூ பூக்கள்#5

பல'கார இரவு பூஜை 
பற்பல' விசயங்களால் சிக்கினார் 
சபல' சாமியார்! 
**********
விடுமுறை இல்லை
பணி ஓய்வு இல்லை
பென்ஷன் இல்லை 
"இல்லத்தரசி"
***********
பிச்சைப் பாத்திரம் நிரம்புகிறது 
கொடுப்பவனால் அல்ல
எடுப்பவனின் பெருமூச்சால்..!
***********
வெட்டுங்கள் தருவேன் என்கிறது குளம்
வெட்டாதீர்கள் தருவேன் என்கிறது மரம்.
*************
கடைத்தெருவில் பார்த்துக்கொண்டிருந்தேன் அவள்
கடைக்கண் பார்வை கிடைக்குமா என்று.

1 comment:

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...