Wednesday, June 19, 2019

ஒரு பக்க க(வி)தை#7

முதல் நாள் வகுப்பறை நடந்து கொண்டிருந்தது

ஆம் அன்று நான் அவளை பார்த்தேன்.

மண்டையிலும் சரி
மனதிலும் சரி பொறி தட்டியது

உடலில் ஏதோ ஒரு அதிர்வு
உள்ளத்தில் ஏனோ ஒரு வலி
உயிரினில் எகிறும் ஒரு மாற்றம்

தலை கால் புரியாமல் ஆனது
தலைக்கனம் எங்கோ போனது
தலைப்பில் எங்கும் உன் பெயர் காணுது

வகுப்பறை முடிந்ததும்
வாய் திறந்து கேட்டுவிட வேண்டும் என்று
வாய் இல்லா அறிவு சொன்னது.

எப்படியோ அவளின் கைபேசியின்
எண்ணை வாங்கிட எண்ணியது
அனைவரும் அவர்களது பெயர் மற்றும் கைபேசி எண்ணை எழுதி கொடுங்கள் என்று ஆசிரியர் காகிதத்தை அனுப்பினார்.

ஏதோ சொர்க்க வாசல் திறந்தது போல் இருந்தது.
எண்ணும் கிடைத்தது.

வகுப்பறையில் ஆசான் கேள்விக்கு
வாய் திறந்து பதிலளித்தாள்
வகுப்பறை முழுவதும் கைதட்டல்கள்
வானத்தில் மிதந்தேன் நான்.

அவளிடம் இதை எப்படியாவது கேட்டுவிட வேண்டும் என்று தோன்றியது
என்னையே பலமுறை கண்ணாடியில் பார்த்தேன்
இதை எப்படி எடுத்துக்கொள்வாள் என்று நினைத்தேன்
இப்படி கேட்கலாமா இல்லை எப்படி என்று ஒத்திகை வேறு.

கைபேசியை எடுத்தேன்
வெட்கம் பிரித்தெடுத்தது
நடுக்கம் சூழ்ந்தது
டயல் செய்தேன்
அங்கு ரிங் அடிக்க
இங்கு முகம் பிங்க் ஆனது.

அந்த முனையில் அவள் எடுத்தாள்
மௌனத்தில்... நான்.

அலோ யாரு அவள்
கேட்கலாமா என்று.. நான்.

இப்ப சொல்றீங்களா வைக்கட்டா... அவள்
இறுதியில்
கேட்டு விடலாமென
நான்தாங்க

நான்தான்னா யாரு
"அதட்டலில் அன்பு இருந்தது"🤪

உங்க வகுப்பு தான் னு

 கேட்டேவிட்டேன்.

அந்த கணக்குப்பாடம் கணக்கு எப்படி போட்டிங்க
எனக்கு சொல்லி கொடுப்பீங்களானு...🤪

கணக்கு ஆரம்பித்தது.🤔

1 comment:

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...