வா வா இதயமே வா
காதல் உதயமே வா
வா வா வாழ்வே வா
வாழ்வில் மகிழ்வே வா
உன்னோடு இறுதிவரை வாழ வேண்டும் வா வா
இறக்கும் தறுவாயிலும் உன் மடிதனில் இருக்க வேண்டும் வா வா
சரணம்
*********
நீ என்னை எடுத்துக்கொள் இதயம் தவிர அன்பே தேவையது நேசிக்க.
என் பணிகளை மறந்து உனை நினைப்பதே பணியாகி போனதே.
பார்க்க பார்க்க நீயோ புதிர் ஆகிறாய்
பார்த்த பின் என்னை புதிதாய் புரிய வைக்கிறாய்
என்னை இவ் உலகில் புதிதாய் அறிய வைக்கிறாய்.
சரணம்
*********
நீ பார்க்கும் பார்வையில்
என்னுள் ஏதோ மின்னல்ஒளி பரவிடுதே
கண் இமைகளை திறந்து மூடும்
வேளைதனில் மின்வெட்டு ஆகிடுதே
காதல் காதல் என்று பதற வைத்தாய்
காதல் தீ எங்கும் பற்றி எரிய வைத்தாய்
என்னை உன் இதயத்தில் என்றும் சிக்க வைத்தாய்.
❤️❤️❤️❤️❤️
ReplyDelete