அப்பா...
நான் பிறக்க
உயிரணு கொடுத்தவர்
எனக்காக வாழும் வரை தன் உயிரை அணுஅணுவாய் கொடுப்பவர்.
நான் வளர
தோளில் அமர்த்தியவர்
எனக்காக வாழும் வரை தன் தோழுக்கு தோழனாய வாழ்பவர்.
நான் பேச
மழலைமொழி பேசியவர்
எனக்காக வாழும் வரை விட்டு கொடுக்காது பிறரிடம் பேசியவர்.
நான் நடக்க
அம்பாரி சுமந்தவர்
எனக்காக வாழும் வரை தன் கால்கடுக்க பல நேரங்களில் நடந்தவர்.
நான் படிக்க
கல்விக்கூடம் பல ஏறியவர்
எனக்காக வாழும் வரை கல்விக்கடண் வாங்க இங்கும் அங்கும் ஏறியவர்.
நான் ரசிக்க
ரசனைகளை கூட்டியவர்
எனக்காக வாழும் வரை தன் ரசனைகளை மறந்து மகிழ்ச்சியை கூட்டியவர்.
நான் தவறிட
கண்டிப்பு காட்டியவர்
எனக்காக வாழும் வரை தன் வாழ்விலும் கண்டிப்போடு நடந்து காட்டியவர்.
நான் சிரிக்க
கோமாளியும் ஆனவர்
எனக்காக வாழும் வரை என் மனதினில் என்றும் கோமான் ஆனவர்.
நான் தூங்க
தாயுமானவர்
எனக்காக வாழும் வரை தன் தூக்கத்தை துறந்து தாயுமானவர்.
நான் அழ
அவர் அழுகையை மறைத்தவர்
எனக்காக வாழும் வரை தன் உள்ளத்தினுள் அழுது மறைத்தவர்.
நான் சிறக்க
நாள்தோறும் சிந்தித்தவர்
எனக்காக வாழும் வரை தன் சிந்தையில் என்னை வைத்தே சிந்தித்தவர்.
இன்று
நான் நானாக இருக்க
காரணம் ஆனவர்
தினம் உன் பாதம் தொழ
நான் செய்யும் செயல்கள் அனைத்திலும்
உயர காரணம் ஆனவர்.
நான் பிறக்க
உயிரணு கொடுத்தவர்
எனக்காக வாழும் வரை தன் உயிரை அணுஅணுவாய் கொடுப்பவர்.
நான் வளர
தோளில் அமர்த்தியவர்
எனக்காக வாழும் வரை தன் தோழுக்கு தோழனாய வாழ்பவர்.
நான் பேச
மழலைமொழி பேசியவர்
எனக்காக வாழும் வரை விட்டு கொடுக்காது பிறரிடம் பேசியவர்.
நான் நடக்க
அம்பாரி சுமந்தவர்
எனக்காக வாழும் வரை தன் கால்கடுக்க பல நேரங்களில் நடந்தவர்.
நான் படிக்க
கல்விக்கூடம் பல ஏறியவர்
எனக்காக வாழும் வரை கல்விக்கடண் வாங்க இங்கும் அங்கும் ஏறியவர்.
நான் ரசிக்க
ரசனைகளை கூட்டியவர்
எனக்காக வாழும் வரை தன் ரசனைகளை மறந்து மகிழ்ச்சியை கூட்டியவர்.
நான் தவறிட
கண்டிப்பு காட்டியவர்
எனக்காக வாழும் வரை தன் வாழ்விலும் கண்டிப்போடு நடந்து காட்டியவர்.
நான் சிரிக்க
கோமாளியும் ஆனவர்
எனக்காக வாழும் வரை என் மனதினில் என்றும் கோமான் ஆனவர்.
நான் தூங்க
தாயுமானவர்
எனக்காக வாழும் வரை தன் தூக்கத்தை துறந்து தாயுமானவர்.
நான் அழ
அவர் அழுகையை மறைத்தவர்
எனக்காக வாழும் வரை தன் உள்ளத்தினுள் அழுது மறைத்தவர்.
நான் சிறக்க
நாள்தோறும் சிந்தித்தவர்
எனக்காக வாழும் வரை தன் சிந்தையில் என்னை வைத்தே சிந்தித்தவர்.
இன்று
நான் நானாக இருக்க
காரணம் ஆனவர்
தினம் உன் பாதம் தொழ
நான் செய்யும் செயல்கள் அனைத்திலும்
உயர காரணம் ஆனவர்.
👌👌👌👌
ReplyDelete