Wednesday, June 19, 2019

காதல் பாடல்#38

நீயா இல்ல நானா
போட்டி போட இனி வேணா
உயிரா இல்ல மெய்யா
பிரித்து பார்க்க இனி வேணா
நீரில்லா உயிரில்லை
நீயில்லாது நானில்லை
வேறு வேறு ஆனாலும் நானும் நீயும் ஒன்றே...
சரணம்
********
வானும் ஆகாயமும் வேறு வேறு சொல்லானாலும்
நீரும் தண்ணீரும் வேறு வேறு சொல்லானாலும்
காற்றும் தென்றலும் வேறு வேறு சொல்லானாலும்
பூமியும் நிலமும் வேறு வேறு சொல்லானாலும்
தீயும் நெருப்பும் வேறு வேறு சொல்லானாலும்
இவ்விரண்டு சொற்கள் குறிப்பிடும் பொருள் ஒன்றையே
அதுபோல் அன்பே நீயும் நானும் வேறு வேறு உடலானாலும் உயிர் ஒன்றே....
சரணம்
********
பேசும் பேச்சு வேறு வேறு மொழியானாலும்
பார்க்கும் பார்வை வேறு வேறு விதமானாலும்
செய்யும் செயல்கள் வேறு வேறு வேலையானாலும்
நடக்கும் பாதை வேறு வேறு இடமானாலும்
உடுத்தும் ஆடைவேறு வேறு வகையானாலும்
இருவரும் செய்திடும் செயல்கள் காலத்தின் தேவையே
அதனால் கண்ணே நீயும் நானும் காணும் கனவுகள் ஒன்றே...

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...