Monday, June 17, 2019

கவிஞனாய்...

எழுத்துக்கள் ஒவ்வொன்றாக
தேர்ந்தெடுத்து கோர்த்து வார்த்தைகளாக
எழுதுகின்றேன்.

வார்த்தைகள் வரவர
வடிகட்டி அழகு
வாக்கியமாக வார்க்கின்றேன்.

வாக்கியங்கள் அனைத்தும்
வர்ணனை பொங்க சேர்த்து
முழு பத்தியாக பார்க்கின்றேன்.

நூறு நூறு பத்திகளும்
நூறு நூறு கவிதைகளாக
அன்பே உன்னை பத்தித்தானடி...

நினைத்து பார்க்கையில்
கவிகளாய் என்னுள் நீ
பார்ப்பவர் மத்தியில்
கவிஞனாய் வெளியே நான்😍

1 comment:

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...