அமைதியாக படுக்கையின் மீது அமர்ந்தேன்
ஆனால் மனதிலோ அமைதி இல்லை
என்னடா வாழ்க்கை இது என
உருகுலைந்து சரிந்தேன்
எதிரே பார்த்தால் உருகலைந்த நிலையில் குடை.
பார்த்த படி கண்களை இறுக மூடினேன்
கண்களை குடை விரித்தது
என்னவாயிற்று ஏன் சலிப்பு என கேட்டது.
என் வாழ்க்கை மழை வெயில்னு பார்க்காம உழைச்சிகிட்டுனு புலம்பினார்.
அட பாவி மனுசா இதோ என்னையே எடுத்துக்கொள்
பிறப்போ பல நிறங்களில் இருந்தாலும்
ஜாதி மதம் கிடையாது.
தத்துப் பிள்ளையாய் இருந்தாலும் தலை காக்கும் தலைப் பிள்ளை நான்.
பணம் இருப்பவரிடம் தேவவை என்றால் சொகுசாக இருப்பேன்
லேசாக கிழிந்தாலும் குப்பைக்கு போவோன்.
மனம் இருப்பவரிடமோ கிழிந்தாலும் இருப்பேன்.
இளமையும் என்னை விரும்பும்
முதுமையும் என்னை விரும்பும்
மழை வந்தால் என்னையே நனைப்பார்கள்
வெயில் வந்தாலும் தயவின்றி சுட்டெரிப்பார்கள்
ஆண்டிக்கு மட்டுமல்ல அரசனுக்கும் மேல் நான்தான்.
வாழ்வின் தொடக்கமும் வாழ்வின் இறுதிவரை நான்தான்.
இருந்தும் தலைவணங்கி நிழல் கொடுப்பேன்.
இப்படி ஓய்வில்லா உழைப்பதனால் தான்
என்னை மகுடமாய் அனைவரும் குடை சூடுகின்றனர்.
என்ன புரிகிறா என்று குடை மூளையை திறந்து விட இமைகளை மூடியது.
சட்டென எழுந்தான் மனுசன்னா உழைப்பதே மதிப்பு என்பதை உணர்ந்தான்.
கைகளில் குடையை எடுத்து விரித்தபடி
தலை நிமிர்ந்து உழைக்க சென்றான்...
No comments:
Post a Comment