வீட்டுக்குள்ள இருந்தோம்
கிணறு இருந்தது
வீட்டிலேயே தண்ணீர் கிடைத்தது
கவல படல
வீதிக்கு வந்தோம்
குழாய் தண்ணீர் இருந்தது
வாரம் இருமுறை தண்ணீர் கிடைத்தது
கவல படல
முச்சந்தியில நின்னோம்
லாரி தண்ணீர் இருந்தது
தண்ணீர் கிடைத்தது
கவல லேசாச்சு
ஆட்சியர்கிட்ட போனோம்
தண்ணீர் வரவழைக்குறேனு சொன்னாங்க
தண்ணீர் கிடைத்தது
கவல பெருசாச்சு
முதல்வர்கிட்டேயும் மனு கொடுத்தோம்
போர்கால அடிப்படையில் தண்ணீர் வரவழைக்கப்படுனு சொன்னார்.
தண்ணீர் வந்தது?
வீட்டையே காலி பண்ணுகிற நிலைமையில்
நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
இப்படியே போனால்...
பல்துளக்க ஒரு ஊர்
காலைக்கடனுக்கு ஒரு ஊர்
குளிக்க ஒரு ஊர்
வேலை பார்க்க இன்னொரு ஊர்னு பயணிக்க வேண்டியது தான்.
போராட்டம் தான் வாழ்க்கை
அதுக்குனு இப்படி
போராடி போராடி
உயிர் காக்கும் தண்ணீருக்கும்
போராட வேண்டி நிற்கின்றோம்.
வரவழைத்தல் என்பது தற்காலிகமே
இயற்கைக்கு நாம் என்ன செய்கிறோமோ
அதுவே நமக்கு திரும்ப கிடைக்கும்.
இதுவே நிரந்தரம்.
இயற்கையை நேசிப்போம்
இயற்கையை சுவாசிப்போம்
இயற்கையோடு பயணிப்போம்.
கிணறு இருந்தது
வீட்டிலேயே தண்ணீர் கிடைத்தது
கவல படல
வீதிக்கு வந்தோம்
குழாய் தண்ணீர் இருந்தது
வாரம் இருமுறை தண்ணீர் கிடைத்தது
கவல படல
முச்சந்தியில நின்னோம்
லாரி தண்ணீர் இருந்தது
தண்ணீர் கிடைத்தது
கவல லேசாச்சு
ஆட்சியர்கிட்ட போனோம்
தண்ணீர் வரவழைக்குறேனு சொன்னாங்க
தண்ணீர் கிடைத்தது
கவல பெருசாச்சு
முதல்வர்கிட்டேயும் மனு கொடுத்தோம்
போர்கால அடிப்படையில் தண்ணீர் வரவழைக்கப்படுனு சொன்னார்.
தண்ணீர் வந்தது?
வீட்டையே காலி பண்ணுகிற நிலைமையில்
நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
இப்படியே போனால்...
பல்துளக்க ஒரு ஊர்
காலைக்கடனுக்கு ஒரு ஊர்
குளிக்க ஒரு ஊர்
வேலை பார்க்க இன்னொரு ஊர்னு பயணிக்க வேண்டியது தான்.
போராட்டம் தான் வாழ்க்கை
அதுக்குனு இப்படி
போராடி போராடி
உயிர் காக்கும் தண்ணீருக்கும்
போராட வேண்டி நிற்கின்றோம்.
வரவழைத்தல் என்பது தற்காலிகமே
இயற்கைக்கு நாம் என்ன செய்கிறோமோ
அதுவே நமக்கு திரும்ப கிடைக்கும்.
இதுவே நிரந்தரம்.
இயற்கையை நேசிப்போம்
இயற்கையை சுவாசிப்போம்
இயற்கையோடு பயணிப்போம்.
💯💯💯
ReplyDelete