Thursday, June 20, 2019

வானமாய்...

கதிரவன் காலை உன்னை பார்க்கதான் உதிக்கிறதோ..
மேகங்கள் சூழ்ந்து கூந்தலாக உருமாறியதோ..
விண்மீன்கள் சிதறி அதில் பூக்களாக பூக்கிறதோ..
வானவில் சேர்ந்து இரண்டு புருவங்கள் ஆனதோ..
பூமியை சுற்றும் கோல்களாய் கண்கள் உருள்கிறதோ..
மூச்சுக்காற்று மேலே போய் வளிமண்டலம் ஆனதோ..
வாய் பிளக்க செவ்வாய்யும் வாய் அடைத்துப் போனதோ..
நிலவும் ஒளிந்திட நிலவாய் முகம் ஒளிர்கிறதோ..
என்றும்
வானமாய் திகழ்கிறாள் அவள்
வானம் பார்த்த விவசாயியாய் காத்துகிடக்கிறேன் நான்...!

1 comment:

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...