பிறப்பின் விதியா?
இல்லை
நடப்பின் சதியா?
எல்லாம் கிடைத்தது என்று இருந்தேன்
இருந்தும் நான் மட்டுமே இருக்கிறேன்.
தாய் தந்தை இன்று உலகில் இல்லை
உடன்பிறப்பு இருந்தும் உறவே இல்லை
வேலை பார்க்க சென்ற இடமெல்லாம்
சேலை சற்று விலகியதும் பார்க்கும் வேலையை பார்த்தார்கள்
பெண்ணை பெண்ணாக பார்க்க கூட
எண்ணாத ஆண்கள் தான் அதிகமாக தெரிந்தார்கள்.
ஆம் தள்ளப்பட்டேன்
எனக்கும் தானே உண்டு
ஒரு ஜான் வயிறு.
நடக்கிறது நாடகம்
தினம் தினம் அரங்கேற்றம்
ஆண்களின் அணிவகுப்பு
பெண்மையின் சிதைப்பு
பால் இல்லை பழம் இல்லை
மெத்தை இல்லை பூக்கள் இல்லை
தோழிகள் இல்லை கிண்டல் இல்லை
ஊதுபத்தி இல்லை வாசனை இல்லை
மெய்யில் வலுவில்லை
பையில் பணமில்லை
வாழ நாதியில்லை
இதில் விருப்பில்லை
இருந்தும் .....
உயிருண்டு உடலுண்டு
வயிருண்டு பசியுண்டு
என்ன செய்ய சமுதாயமே
சமுதாயம் தேடுவதோ ஆதாயமே
அதுவும் பெண்ணென்றால் கற்பு மட்டும் தான்.
மஞ்சமுண்டு
புதுபுது
கணவனுண்டு
நிதம்நிதம்
காட்சியுண்டு
எனது வயிற்றுப்பசியினை போக்க
ஆண் என்று சொல்லி வரும்
இதயமற்ற ஆணின் காமப்பசியினை தீர்க்க
தயாராகினேன்.
இதோ இன்று
முதல்நாள்
முதலிரவு
முதல்கணவன்
முதல் அத்தியாயம்
தொடங்கப் போகிறது.
இருண்ட வாழ்க்கையை நினைத்து
வெளிச்சத்தில் மஞ்சத்தை பார்த்தபடி நின்று கொண்டிருந்தேன்...
இல்லை
நடப்பின் சதியா?
எல்லாம் கிடைத்தது என்று இருந்தேன்
இருந்தும் நான் மட்டுமே இருக்கிறேன்.
தாய் தந்தை இன்று உலகில் இல்லை
உடன்பிறப்பு இருந்தும் உறவே இல்லை
வேலை பார்க்க சென்ற இடமெல்லாம்
சேலை சற்று விலகியதும் பார்க்கும் வேலையை பார்த்தார்கள்
பெண்ணை பெண்ணாக பார்க்க கூட
எண்ணாத ஆண்கள் தான் அதிகமாக தெரிந்தார்கள்.
ஆம் தள்ளப்பட்டேன்
எனக்கும் தானே உண்டு
ஒரு ஜான் வயிறு.
நடக்கிறது நாடகம்
தினம் தினம் அரங்கேற்றம்
ஆண்களின் அணிவகுப்பு
பெண்மையின் சிதைப்பு
பால் இல்லை பழம் இல்லை
மெத்தை இல்லை பூக்கள் இல்லை
தோழிகள் இல்லை கிண்டல் இல்லை
ஊதுபத்தி இல்லை வாசனை இல்லை
மெய்யில் வலுவில்லை
பையில் பணமில்லை
வாழ நாதியில்லை
இதில் விருப்பில்லை
இருந்தும் .....
உயிருண்டு உடலுண்டு
வயிருண்டு பசியுண்டு
என்ன செய்ய சமுதாயமே
சமுதாயம் தேடுவதோ ஆதாயமே
அதுவும் பெண்ணென்றால் கற்பு மட்டும் தான்.
மஞ்சமுண்டு
புதுபுது
கணவனுண்டு
நிதம்நிதம்
காட்சியுண்டு
எனது வயிற்றுப்பசியினை போக்க
ஆண் என்று சொல்லி வரும்
இதயமற்ற ஆணின் காமப்பசியினை தீர்க்க
தயாராகினேன்.
இதோ இன்று
முதல்நாள்
முதலிரவு
முதல்கணவன்
முதல் அத்தியாயம்
தொடங்கப் போகிறது.
இருண்ட வாழ்க்கையை நினைத்து
வெளிச்சத்தில் மஞ்சத்தை பார்த்தபடி நின்று கொண்டிருந்தேன்...
😞😣😓😓
ReplyDelete