பேச்சுப் போட்டி தொடங்கவிருக்கிறது.
தலைப்போ "பெண் சுதந்திரம்" பற்றியது
தலைகுள்ளே பேசவேண்டியதெல்லாம் சுற்றியது
தான் எழுதி வைத்திருந்ததை
மடித்து வைத்து
மைக்கை பிடித்தாள்
பேச தொடங்கினாள்...
என்ன பேசுவது
நாட்டில்
சுதந்திரம் இருக்கிறதா?
அதுவும் பெண் சுதந்திரம்
உண்மையில் இருக்கிறதா?
அனைத்து உயிர்களும் சமம்னு சொல்றோம்
பிறப்பிலேயே பிரித்துதான் பார்க்கிறோம்
ஒரே மார்புல குடித்து வளர்கிற ஆண் பெண்ணை
வேற வேற விதமா வளர்க்கின்றோம்.
இதுதான் அடிப்படை பிரச்சனை
சரியா இருந்தா
வந்திருக்காது பிரச்சனை
பெண்கள் நாட்டின் கண்கள்னு சொல்லிகிட்டு
ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பு சமன் என்பதை
உணராமல் கண்களை திருடுவது ஏனோ?
பெண்....
சிறுமினா சின்னாபின்னமா சிதைக்கபடுகிறாள்.
குமரினா குள்ளநரியா குதறப்படுகிறாள்
கிழவினாலும் கிறுக்குபிடிச்சி கிழிக்கப்படுகிறாள்.
பெண்களின் வயதுதான் பிரச்சனையா?
கருப்பா இருந்தாலும் கற்பழிக்கபடுகிறாள்.
கலராய் இருந்தாலும் கற்பழிக்கபடுகிறாள்.
கலந்தமாதிரி இருந்தாலும் கற்பழிக்கபடுகிறாள்.
பெண்களின் நிறம்தான் பிரச்சினையா?
இந்துவாக இருந்தாலும் கற்பழிக்கபடுகிறாள்
இஸ்லாமாக இருந்தாலும் கற்பழிக்கபடுகிறாள்
கிறித்தவமாக இருந்தாலும் கற்பழிக்கபடுகிறாள்.
பெண்களின் மதம்தான் பிரச்சினையா?
சுடிதாரில் இருந்தாலும் கற்பழிக்கபடுகிறாள்
சேலையில் இருந்தாலும் கற்பழிக்கபடுகிறாள்
நவீன உடையிலும் இருந்தாலும் கற்பழிக்கபடுகிறாள்.
பெண்களின் ஆடைதான் பிரச்சினையா?
சாந்தசொருபியாக இருந்தாலும் கற்பழிக்கபடுகிறாள்
சாமிகோவில்னு இருந்தாலும் கற்பழிக்கபடுகிறாள்
சமையல்குடும்பமாக இருந்தாலும் கற்பழிக்கபடுகிறாள்
பெண்களின் செயல்தான் பிரச்சினையா?
இல்லை
பெண் பெண்ணாக பிறந்தது தான் பிரச்சினையா?
அது படைத்தவன் நடத்திய நாடகம் சதி
மீதம் நாம் அரங்கேற்றுகின்ற நாடகம் விதி
இல்லை
ஆண் என்ற எல்லையை மீறினால்
பெண் பெண்ணாகவே இருப்பதுதான் பிரச்சினையா?
அவனுள் மிருகம் வெறி கொள்ள
பெண்ணே மிருகமாய் வெறி கொள் கொல்.
உறைந்த பார்வையாளர்களுக்கு மத்தியில்
உறைத்திருக்குமென உரையை முடித்தாள்.
தலைப்போ "பெண் சுதந்திரம்" பற்றியது
தலைகுள்ளே பேசவேண்டியதெல்லாம் சுற்றியது
தான் எழுதி வைத்திருந்ததை
மடித்து வைத்து
மைக்கை பிடித்தாள்
பேச தொடங்கினாள்...
என்ன பேசுவது
நாட்டில்
சுதந்திரம் இருக்கிறதா?
அதுவும் பெண் சுதந்திரம்
உண்மையில் இருக்கிறதா?
அனைத்து உயிர்களும் சமம்னு சொல்றோம்
பிறப்பிலேயே பிரித்துதான் பார்க்கிறோம்
ஒரே மார்புல குடித்து வளர்கிற ஆண் பெண்ணை
வேற வேற விதமா வளர்க்கின்றோம்.
இதுதான் அடிப்படை பிரச்சனை
சரியா இருந்தா
வந்திருக்காது பிரச்சனை
பெண்கள் நாட்டின் கண்கள்னு சொல்லிகிட்டு
ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பு சமன் என்பதை
உணராமல் கண்களை திருடுவது ஏனோ?
பெண்....
சிறுமினா சின்னாபின்னமா சிதைக்கபடுகிறாள்.
குமரினா குள்ளநரியா குதறப்படுகிறாள்
கிழவினாலும் கிறுக்குபிடிச்சி கிழிக்கப்படுகிறாள்.
பெண்களின் வயதுதான் பிரச்சனையா?
கருப்பா இருந்தாலும் கற்பழிக்கபடுகிறாள்.
கலராய் இருந்தாலும் கற்பழிக்கபடுகிறாள்.
கலந்தமாதிரி இருந்தாலும் கற்பழிக்கபடுகிறாள்.
பெண்களின் நிறம்தான் பிரச்சினையா?
இந்துவாக இருந்தாலும் கற்பழிக்கபடுகிறாள்
இஸ்லாமாக இருந்தாலும் கற்பழிக்கபடுகிறாள்
கிறித்தவமாக இருந்தாலும் கற்பழிக்கபடுகிறாள்.
பெண்களின் மதம்தான் பிரச்சினையா?
சுடிதாரில் இருந்தாலும் கற்பழிக்கபடுகிறாள்
சேலையில் இருந்தாலும் கற்பழிக்கபடுகிறாள்
நவீன உடையிலும் இருந்தாலும் கற்பழிக்கபடுகிறாள்.
பெண்களின் ஆடைதான் பிரச்சினையா?
சாந்தசொருபியாக இருந்தாலும் கற்பழிக்கபடுகிறாள்
சாமிகோவில்னு இருந்தாலும் கற்பழிக்கபடுகிறாள்
சமையல்குடும்பமாக இருந்தாலும் கற்பழிக்கபடுகிறாள்
பெண்களின் செயல்தான் பிரச்சினையா?
இல்லை
பெண் பெண்ணாக பிறந்தது தான் பிரச்சினையா?
அது படைத்தவன் நடத்திய நாடகம் சதி
மீதம் நாம் அரங்கேற்றுகின்ற நாடகம் விதி
இல்லை
ஆண் என்ற எல்லையை மீறினால்
பெண் பெண்ணாகவே இருப்பதுதான் பிரச்சினையா?
அவனுள் மிருகம் வெறி கொள்ள
பெண்ணே மிருகமாய் வெறி கொள் கொல்.
உறைந்த பார்வையாளர்களுக்கு மத்தியில்
உறைத்திருக்குமென உரையை முடித்தாள்.
Excellent sir...Super ah iruku👌👏👏👏
ReplyDelete