Saturday, June 29, 2019

சுழற்சி

நீர் இல்லாது நிலம் இருக்குமா
விளைநிலம் இல்லாது விவசாயம் இருக்குமா
உழவு இல்லாது உணவு இருக்குமா
உணவு இல்லாது உயிர்கள் இருக்குமா
விதைகள் இல்லாது விருட்சங்கள் இருக்குமா
ஆணிவேர் இல்லாது ஆலமரம் இருக்குமா
மலர்கள் இல்லாது மணம் இருக்குமா
காய்கள் இல்லாது கனிகள் இருக்குமா
பழங்கள் இல்லாது பசி இருக்குமா
உணவுவேட்கை இல்லாது உழைப்பு இருக்குமா
உழைப்பு இல்லாது உயர்வாழ்க்கை இருக்குமா
உயர்வு இல்லாது வான் இருக்குமா
வான் இல்லாது நீர் இருக்குமா

Friday, June 28, 2019

தன்னம்பிக்கை

அ'கிலமே எதிர்க்க நேர்ந்தாலும்
அரணாகட்டும் உன் தன்னம்பிக்கை
நிச்சயம் ஜெய்த்திடுவாய்....!

ஆ'சைகள் வீணாக நேர்ந்தாலும்
ஆதிக்கப்படட்டும் உன் தன்னம்பிக்கை
நிச்சயம் நிறைவேற்றிடுவாய்...!

இ'ன்பங்கள் தொலைய நேர்ந்தாலும்
இருக்கட்டும் உன் தன்னம்பிக்கை
நிச்சயம் தக்கவைப்பாய்.....!

ஈ'டுபாடு குறைய நேர்ந்தாலும்
ஈட்டிடு உன் தன்னம்பிக்கை
நிச்சயம் நிறைத்திடுவாய்....!

உ'யிரே போக நேர்ந்தாலும்
உயரட்டும் உன் தன்னம்பிக்கை
நிச்சயம் உயிர்த்தெழுவாய்....!

ஊ'ரே பழிக்க நேர்ந்தாலும்
ஊனில்வை உன் தன்னம்பிக்கை
நிச்சயம் புகழப்படுவாய்...!

எ'ல்லாம் இழக்க நேர்ந்தாலும்
எழட்டும் உன் தன்னம்பிக்கை
நிச்சயம் மீட்டெடுப்பாய்...!

ஏ'ற்றம் குறைவாக நேர்ந்தாலும்
ஏணியை உன் தன்னம்பிக்கை
நிச்சயம் ஏற்றம்காண்பாய்...!

ஐ'யம் வர நேர்ந்தாலும்
ஐம்புலம்சேர் உன் தன்னம்பிக்கை
நிச்சயம் தெளிந்திடுவாய்...!

ஒ'ளித்திரை மறைக்க நேர்ந்தாலும்
ஒளிமயமாய் உன் தன்னம்பிக்கை
நிச்சயம் ஒளிர்ந்திடுவாய்...!

ஓ'டுபாதை விலக நேர்ந்தாலும்
ஓயாத உன் தன்னம்பிக்கை
நிச்சயம் உயர்ந்திடுவாய்...!

ஔ'டதம் ஏற்க நேர்ந்தாலும்
ஔடதமே உன் தன்னம்பிக்கை
நிச்சயம் நலம்பெறுவாய்...!

அஃ'து தன்னம்பிக்கை கொள் எதுவும்  சாத்தியமே....! 



MOtivation#56


Thursday, June 27, 2019

காதல் பாடல்#40

கூடையில பழம் கொண்டு போற புள்ள
உன் கூட நான் வர சம்மதமா சொல்லு புள்ள
மீசையில ஆச வைச்ச என்ற மாமா
உன் உடன் ஆயுள் வர வாழனும் சொல்லு மாமா
நீ கண் அசைத்தா போதுமே
வேறு என்ன வேணுமே....
சரணம்
********
தாலிகட்டி உன் கூடதான் வாழ்ந்திடனும்
தங்கமே தங்கம் உன் பார்த்து ஏங்கிடனும்.
ஆசைவச்சு உன் கூடதான் சேர்ந்திடனும்
அழகே அணைக்காமலே உன் உயிரில கலந்திடனும்.
நினைத்தபடி வாழ்க்கை தான் அமைந்திடனும்
நினைத்ததற்கும் மேலாக காதல் நாம்மில் இருந்திடனும்.
இப்படியே காலமெல்லாம் ஓடிடனும்
போனா நம்ம உயிரும் சேர்ந்தேதான் உலகம் விட்டு போயிடனும்.
சரணம்
********
காசுபணம் உன் முன்னாடி தூசுபிணம்
பேசும்மனம் கொண்டாடி உன் பின்னாடி அலைந்திடுமே.
காதோரம் உன் இதழின்  முத்தம் 
காதலுக்கு கிடைத்த நம் தரச்சான்றிதழே.
வருசத்துக்கு ஒருபுள்ளதான் பெத்திடனும்
வயசானாலும் பிள்ளையா மடியினில் படுத்து தூங்கிடனும்.
இப்படியே காலமெல்லாம் ஓடிடனும்
போனா நம்ம உயிரும் சேர்ந்தேதான் உலகம் விட்டு போயிடனும்.

Wednesday, June 26, 2019

ஹைக்கூ பூக்கள்#8

கலப்படம் இல்லாதவன் நான்
கலப்படம் உள்ளவன் ஆனேன்
உன் இதயம் என் இதயம் கலந்ததால்..!
*****
காதோரம் காதலை
கதைத்து கொண்டிருந்தது காதணி
ஆடிஆடி நடக்கும் என்னவளிடம்...!
*****
நிலவும் நிதானம் தவறியது
அவளின் புன்னகையால்...!
*****
அன்பே உன் ஒவ்வொரு
அசைவுகளில் தோற்றுப் போகிறது
அசையும் என் மொழி...!
*****
உன்னை பார்க்காது
தவிப்பு ஏறியது
அன்பே உன்னை பார்த்ததும்
தவிப்பு எகிறியது...!
*****
காலமும் படிக்கத் தூண்டும்
புத்தகம் இல்லாத வரிகள்
அவள் இதழ்கள்...!

Tuesday, June 25, 2019

ஹைக்கூ பூக்கள்#7

கருப்பு உடை மேகம் அணிந்து
நடத்து போராட்டம் தான் மழை
*******
தன் அழுக்கை மேகம்
தன் அழுகையால் தூய்மை
செய்வதே மழை
*******
அனைத்து மேகங்களும் சேர்ந்து
அதனதன் சோகங்களை பகிர்ந்து அழுவதே மழை
*******
இங்கும் அங்கும் ஒற்றுமை இல்ல அலைந்தாலும்
மழை என்றால் ஒற்றுமையை நிலைநாட்டும்
******
மழைகால கூட்டத்தொடர் நடத்துகிறது
அனைத்து மேகங்களும் சேர்ந்து

ஹைக்கூ பூக்கள்#6

வர வேண்டுமென ஆசைதான்
வர விடாமல் தடுப்பதும் நீங்கள்தான்
சிணுங்கும் மழை
*********
மழையே இல்லை என்றார்கள்
மழை வந்ததும் ஓடி ஒளிந்தார்கள்
*********
மழை வந்ததும்
ஆனந்தக்கண்ணீரில் விவசாயி
அறிந்து கொண்டது மண்.
**********
சமத்துவம் உணர்த்தியது
பெய்யும் மழை
**********
தொடர்மழையால் நிறுத்தப்பட்டது
எறும்பு படைக்கு அள் எடுப்பு

மழை

அடுத்த 24 மணி நேரத்தில்
இடியுடன் மழை வானிலை அறிவிப்பு

கொக்குக்கு கொண்டாட்டம்

பறவைகள் உடனடி வீடு திரும்ப உத்தரவு

தவளை கல்யாணதிற்கு  தடை

பாம்புகளுக்கு வெளியே செல்ல அனுமதி

எறும்புக்கு எல்லை மாற்றம்

தாழ்வான பகுதிவாசிகளை
மேல் நோக்கி செல்ல அறிவுறுத்தல் ..!

பெண்ணும் கவிதையும்

வெட்கத்தில் புதிதாய் மொழிபவள் பெண்
வார்த்தைகளில் புணைந்து புதிதாகுவது கவிதை...

அழகையெல்லாம் சிரிப்பில் மறைத்து வைப்பவள் பெண்
அர்த்தமெல்லாம் வார்த்தையில் பதுக்கி வைக்கும் கவிதை...

சேலையை உடுத்தினால் பேரழகு பெறுவாள் பெண்
எதுகை மோனையை சேர்த்தால் அழகுகூடும் கவிதை...

அதிசய கருவில் அடுத்த தலைமுறை தரும் மேன்மையை கொண்ட பெண்
அழகு கருவில் உதிக்கிறது பேரழகு மேன்மை கவிதை...

அழகு மாயாஜாலங்களின் அணிவகுப்பு பெண்
வார்த்தை ஜாலங்களின் தொகுப்பு கவிதை...

தாய்மையில் பெண்மை முழுமை அடைவாள் பெண்
தாய்மொழியில் மொழியின் முழுமை அடையும் கவிதை...

சொல்லில் அடங்கா சொல்லில் சொல்ல வேண்டுமாயின் பெண்ணுக்கு அச்சாரம் பெண்.
சொல்லில் அடங்கினாலும் பல சொற்களுக்கு அதன் அச்சாரம் கவியின் தலைப்பு...

பெண்ணால் கவிதை
ஆம் என்றால்
கவிதையாகும் பெண்...!

Friday, June 21, 2019

பெண்ணே....

பெண்களுக்கு நேரும் அநியாயங்களை தட்டி கேட்க
பெண்களே அச்சப்பட்டு முன்வர யோசிக்கிறார்கள்.

ஏன்?

பெண்ணுக்கு நிகர் பெண்தானே...

அடுப்பாங்கரையில் அடங்கியது போதும்
வீட்டுமூளையில் முடங்குவது போதும்

எழு... பெண்ணே உனக்கு அநீதி நேர்ந்தால்

காய்கறி கத்தியை வாளாக எடுத்து சொறுகி விடு

கரண்டியால் ரத்தத்தை உடலில் இருந்து எடுத்து விடு

தோசை கல்லால் பின்னால் சூடு போட்டு விடு

மாவுக்கட்டையால் மண்டையை உடைத்து விடு

முறத்தை கேடயமாய் கொண்டு எதிர்பவரை புடைத்து விடு

காய் கறிகளை அறுப்பது போல் கழுத்தை அறுத்து விடு

மாப் குச்சியால் ஓட ஓட விரட்டி அடித்து விடு

ஸ்பூன் கரண்டியால் கண்களை நோண்டி விடு

தட்டை கொண்டு முட்டியை தட்டி விடு

துணிகளை போல் தோதாக தோள்களை துவைத்து தொங்கவிடு

துடைப்பத்தை துப்பாக்கியாக ஏந்தி சுட்டு விடு

எதுவும் முடியாது போனால்

உன்னை நீயே ஆயுதமாக மாற்றி விடு.

காதல் பாடல்#39

உன் பார்வை பனித்துளியாய் என்னுள் விழுக காதல் காதல்
என் மனதில் பனிப்பாறையாய் என்னுள் இறுக காதல் காதல்
எங்கும் காண உந்தன் முகமே காதல் காதல்
என்னில் உன்னை உன்னில் தேட காதல் காதல்
சரணம்
********
மூச்சு காற்றாய் உள்ளே சென்று உயிர் கூற்றாய் மாறுகிறாய்
இதயம் நிரம்பி காதல் காதல் என்று லப்டப்யென துடிக்கிறாய்
நாடி நரம்பில் ஓடி சென்று ஆயுள் ரேகையை கூட்டுகிறாய் வாழ்க்கையே நீயென புரிய வைக்கிறாய்
காதல் வயப்பட்டதால் கண்ணே காதல் நோய்வாய்ப்பட்டு நிற்கிறேன் நான்.
மருத்துவம் காண வந்தால் தீராத நோய் தீர்ந்து தீராத காதல் ஏறுமடி...
சரணம்
********
கண்களில் நின்று கனவினில் சென்று தினம் தூக்கம் கலைக்கிறாய்
உணவை மறந்து உன்னை நினைத்து நித்தம் இளைத்து போகிறேன்
ரத்த நாளங்கள் சூடு ஏறிட முத்த நேரங்கள் தேடுதடா
வாழ்க்கை முழுதாக நீயே போதுமடா
உன்னை காதலித்ததால் கண்ணாலா பெண்மை முழுதானதை அறிகிறேன் நான்
காலமும் உடன் வந்திட காலம் உன்னை எதிர் பார்த்து நிற்குதடா...

Thursday, June 20, 2019

வானமாய்...

கதிரவன் காலை உன்னை பார்க்கதான் உதிக்கிறதோ..
மேகங்கள் சூழ்ந்து கூந்தலாக உருமாறியதோ..
விண்மீன்கள் சிதறி அதில் பூக்களாக பூக்கிறதோ..
வானவில் சேர்ந்து இரண்டு புருவங்கள் ஆனதோ..
பூமியை சுற்றும் கோல்களாய் கண்கள் உருள்கிறதோ..
மூச்சுக்காற்று மேலே போய் வளிமண்டலம் ஆனதோ..
வாய் பிளக்க செவ்வாய்யும் வாய் அடைத்துப் போனதோ..
நிலவும் ஒளிந்திட நிலவாய் முகம் ஒளிர்கிறதோ..
என்றும்
வானமாய் திகழ்கிறாள் அவள்
வானம் பார்த்த விவசாயியாய் காத்துகிடக்கிறேன் நான்...!

Wednesday, June 19, 2019

தண்ணீர்

வீட்டுக்குள்ள இருந்தோம்
கிணறு இருந்தது
வீட்டிலேயே தண்ணீர் கிடைத்தது

 கவல படல

வீதிக்கு வந்தோம்
குழாய் தண்ணீர் இருந்தது
வாரம் இருமுறை தண்ணீர் கிடைத்தது

கவல படல

முச்சந்தியில நின்னோம்
லாரி தண்ணீர் இருந்தது
தண்ணீர் கிடைத்தது

கவல லேசாச்சு

ஆட்சியர்கிட்ட போனோம்
தண்ணீர் வரவழைக்குறேனு சொன்னாங்க
தண்ணீர் கிடைத்தது

கவல பெருசாச்சு

முதல்வர்கிட்டேயும் மனு கொடுத்தோம்
போர்கால அடிப்படையில் தண்ணீர் வரவழைக்கப்படுனு சொன்னார்.
தண்ணீர் வந்தது?

வீட்டையே காலி பண்ணுகிற நிலைமையில்
நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

இப்படியே போனால்...
பல்துளக்க ஒரு ஊர்
காலைக்கடனுக்கு ஒரு ஊர்
குளிக்க ஒரு ஊர்
வேலை பார்க்க இன்னொரு ஊர்னு பயணிக்க வேண்டியது தான்.

போராட்டம் தான் வாழ்க்கை
அதுக்குனு இப்படி
போராடி போராடி
உயிர் காக்கும் தண்ணீருக்கும்
போராட வேண்டி நிற்கின்றோம்.

வரவழைத்தல் என்பது தற்காலிகமே
இயற்கைக்கு நாம் என்ன செய்கிறோமோ
அதுவே நமக்கு திரும்ப கிடைக்கும்.
இதுவே நிரந்தரம்.

இயற்கையை நேசிப்போம்
இயற்கையை சுவாசிப்போம்
இயற்கையோடு பயணிப்போம்.

காதல் பாடல்#38

நீயா இல்ல நானா
போட்டி போட இனி வேணா
உயிரா இல்ல மெய்யா
பிரித்து பார்க்க இனி வேணா
நீரில்லா உயிரில்லை
நீயில்லாது நானில்லை
வேறு வேறு ஆனாலும் நானும் நீயும் ஒன்றே...
சரணம்
********
வானும் ஆகாயமும் வேறு வேறு சொல்லானாலும்
நீரும் தண்ணீரும் வேறு வேறு சொல்லானாலும்
காற்றும் தென்றலும் வேறு வேறு சொல்லானாலும்
பூமியும் நிலமும் வேறு வேறு சொல்லானாலும்
தீயும் நெருப்பும் வேறு வேறு சொல்லானாலும்
இவ்விரண்டு சொற்கள் குறிப்பிடும் பொருள் ஒன்றையே
அதுபோல் அன்பே நீயும் நானும் வேறு வேறு உடலானாலும் உயிர் ஒன்றே....
சரணம்
********
பேசும் பேச்சு வேறு வேறு மொழியானாலும்
பார்க்கும் பார்வை வேறு வேறு விதமானாலும்
செய்யும் செயல்கள் வேறு வேறு வேலையானாலும்
நடக்கும் பாதை வேறு வேறு இடமானாலும்
உடுத்தும் ஆடைவேறு வேறு வகையானாலும்
இருவரும் செய்திடும் செயல்கள் காலத்தின் தேவையே
அதனால் கண்ணே நீயும் நானும் காணும் கனவுகள் ஒன்றே...

ஒரு பக்க க(வி)தை#7

முதல் நாள் வகுப்பறை நடந்து கொண்டிருந்தது

ஆம் அன்று நான் அவளை பார்த்தேன்.

மண்டையிலும் சரி
மனதிலும் சரி பொறி தட்டியது

உடலில் ஏதோ ஒரு அதிர்வு
உள்ளத்தில் ஏனோ ஒரு வலி
உயிரினில் எகிறும் ஒரு மாற்றம்

தலை கால் புரியாமல் ஆனது
தலைக்கனம் எங்கோ போனது
தலைப்பில் எங்கும் உன் பெயர் காணுது

வகுப்பறை முடிந்ததும்
வாய் திறந்து கேட்டுவிட வேண்டும் என்று
வாய் இல்லா அறிவு சொன்னது.

எப்படியோ அவளின் கைபேசியின்
எண்ணை வாங்கிட எண்ணியது
அனைவரும் அவர்களது பெயர் மற்றும் கைபேசி எண்ணை எழுதி கொடுங்கள் என்று ஆசிரியர் காகிதத்தை அனுப்பினார்.

ஏதோ சொர்க்க வாசல் திறந்தது போல் இருந்தது.
எண்ணும் கிடைத்தது.

வகுப்பறையில் ஆசான் கேள்விக்கு
வாய் திறந்து பதிலளித்தாள்
வகுப்பறை முழுவதும் கைதட்டல்கள்
வானத்தில் மிதந்தேன் நான்.

அவளிடம் இதை எப்படியாவது கேட்டுவிட வேண்டும் என்று தோன்றியது
என்னையே பலமுறை கண்ணாடியில் பார்த்தேன்
இதை எப்படி எடுத்துக்கொள்வாள் என்று நினைத்தேன்
இப்படி கேட்கலாமா இல்லை எப்படி என்று ஒத்திகை வேறு.

கைபேசியை எடுத்தேன்
வெட்கம் பிரித்தெடுத்தது
நடுக்கம் சூழ்ந்தது
டயல் செய்தேன்
அங்கு ரிங் அடிக்க
இங்கு முகம் பிங்க் ஆனது.

அந்த முனையில் அவள் எடுத்தாள்
மௌனத்தில்... நான்.

அலோ யாரு அவள்
கேட்கலாமா என்று.. நான்.

இப்ப சொல்றீங்களா வைக்கட்டா... அவள்
இறுதியில்
கேட்டு விடலாமென
நான்தாங்க

நான்தான்னா யாரு
"அதட்டலில் அன்பு இருந்தது"🤪

உங்க வகுப்பு தான் னு

 கேட்டேவிட்டேன்.

அந்த கணக்குப்பாடம் கணக்கு எப்படி போட்டிங்க
எனக்கு சொல்லி கொடுப்பீங்களானு...🤪

கணக்கு ஆரம்பித்தது.🤔

Monday, June 17, 2019

கவிஞனாய்...

எழுத்துக்கள் ஒவ்வொன்றாக
தேர்ந்தெடுத்து கோர்த்து வார்த்தைகளாக
எழுதுகின்றேன்.

வார்த்தைகள் வரவர
வடிகட்டி அழகு
வாக்கியமாக வார்க்கின்றேன்.

வாக்கியங்கள் அனைத்தும்
வர்ணனை பொங்க சேர்த்து
முழு பத்தியாக பார்க்கின்றேன்.

நூறு நூறு பத்திகளும்
நூறு நூறு கவிதைகளாக
அன்பே உன்னை பத்தித்தானடி...

நினைத்து பார்க்கையில்
கவிகளாய் என்னுள் நீ
பார்ப்பவர் மத்தியில்
கவிஞனாய் வெளியே நான்😍

பிறந்தநாள் வாழ்த்து

தமிழ் கண்ட கலைகள் எத்தனையோ

அதில் ஆயகலைகள் அறுபத்திநான்கை அறிவோம்.

இதுவரை தமிழே கண்டிடாத கலை ஒன்று உண்டு என்றால்

அது இன்று புதிதாய் பூத்த

எங்கள் குடும்பம் கண்ட 'கலை"யரசி' தான்.

ஆம் அந்த 64 கலைகளுக்கும் அரசியாக விளங்கும் எங்கள் கலை'யரசி தான்.

பிறந்தநாள் வாழ்த்துகள்
கலை"யரசி 💐💐💐

அப்பா ...

அப்பா...

நான் பிறக்க
உயிரணு கொடுத்தவர்
எனக்காக வாழும் வரை தன் உயிரை அணுஅணுவாய் கொடுப்பவர்.

நான் வளர
தோளில் அமர்த்தியவர்
எனக்காக வாழும் வரை தன் தோழுக்கு தோழனாய வாழ்பவர்.

நான் பேச
மழலைமொழி பேசியவர்
எனக்காக வாழும் வரை விட்டு கொடுக்காது பிறரிடம் பேசியவர்.

நான் நடக்க
அம்பாரி சுமந்தவர்
எனக்காக வாழும் வரை தன் கால்கடுக்க பல நேரங்களில் நடந்தவர்.

நான் படிக்க
கல்விக்கூடம் பல ஏறியவர்
எனக்காக வாழும் வரை கல்விக்கடண் வாங்க இங்கும் அங்கும் ஏறியவர்.

நான் ரசிக்க
ரசனைகளை கூட்டியவர்
எனக்காக வாழும் வரை தன் ரசனைகளை மறந்து மகிழ்ச்சியை கூட்டியவர்.

நான் தவறிட
கண்டிப்பு காட்டியவர்
எனக்காக வாழும் வரை தன் வாழ்விலும் கண்டிப்போடு நடந்து காட்டியவர்.

நான் சிரிக்க
கோமாளியும் ஆனவர்
எனக்காக வாழும் வரை என் மனதினில் என்றும் கோமான் ஆனவர்.

நான் தூங்க
தாயுமானவர்
எனக்காக வாழும் வரை தன் தூக்கத்தை துறந்து தாயுமானவர்.

நான் அழ
அவர் அழுகையை மறைத்தவர்
எனக்காக வாழும் வரை தன் உள்ளத்தினுள் அழுது மறைத்தவர்.

நான் சிறக்க
நாள்தோறும் சிந்தித்தவர்
எனக்காக வாழும் வரை தன் சிந்தையில் என்னை வைத்தே சிந்தித்தவர்.

இன்று
நான் நானாக இருக்க
காரணம் ஆனவர்
தினம் உன் பாதம் தொழ
நான் செய்யும் செயல்கள் அனைத்திலும்
உயர காரணம் ஆனவர்.

ஒரு பக்க க(வி)தை#6

பிறப்பின் விதியா?
இல்லை
நடப்பின் சதியா?

எல்லாம் கிடைத்தது என்று இருந்தேன்
இருந்தும் நான் மட்டுமே இருக்கிறேன்.

தாய் தந்தை இன்று உலகில் இல்லை
உடன்பிறப்பு இருந்தும் உறவே இல்லை

வேலை பார்க்க சென்ற இடமெல்லாம்
சேலை சற்று விலகியதும் பார்க்கும் வேலையை பார்த்தார்கள்

பெண்ணை பெண்ணாக பார்க்க கூட
எண்ணாத ஆண்கள் தான் அதிகமாக தெரிந்தார்கள்.

ஆம் தள்ளப்பட்டேன்
எனக்கும் தானே உண்டு
ஒரு ஜான் வயிறு.

நடக்கிறது நாடகம்
தினம் தினம் அரங்கேற்றம்
ஆண்களின் அணிவகுப்பு
பெண்மையின் சிதைப்பு

பால் இல்லை பழம் இல்லை
மெத்தை இல்லை பூக்கள் இல்லை
தோழிகள் இல்லை கிண்டல் இல்லை
ஊதுபத்தி இல்லை வாசனை இல்லை

மெய்யில் வலுவில்லை
பையில் பணமில்லை
வாழ நாதியில்லை
இதில் விருப்பில்லை

இருந்தும் .....

உயிருண்டு உடலுண்டு
வயிருண்டு பசியுண்டு

என்ன செய்ய சமுதாயமே
சமுதாயம் தேடுவதோ ஆதாயமே
அதுவும் பெண்ணென்றால் கற்பு மட்டும் தான்.

மஞ்சமுண்டு
புதுபுது
கணவனுண்டு
நிதம்நிதம்
காட்சியுண்டு

எனது வயிற்றுப்பசியினை போக்க
ஆண் என்று சொல்லி வரும்
இதயமற்ற ஆணின் காமப்பசியினை தீர்க்க

தயாராகினேன்.

இதோ இன்று

முதல்நாள்

முதலிரவு

முதல்கணவன்

முதல் அத்தியாயம்
தொடங்கப் போகிறது.

இருண்ட வாழ்க்கையை நினைத்து
வெளிச்சத்தில் மஞ்சத்தை பார்த்தபடி நின்று கொண்டிருந்தேன்...

Friday, June 14, 2019

ஆசை😍

மண்டைக்கு முடியாய்
தலைக்கு கிரீடமாய்
நெற்றிக்கு பொட்டாய்
கண்ணுக்கு இமையாய்
நாசிக்கு சுவாசமாய்
இதழுக்கு சுவையாய்
செவிக்கு இசையாய்
கன்னத்திற்கு குழியாய்
கழுத்திற்கு மணியாய்
தோளுக்கு துணையாய்
நெஞ்சுக்கு நிஜமாய்
கைகளுக்கு பிடியாய்
உள்ளங்கைக்கு ரேகையாய்
விரலுக்கு நகமாய்
கால்களுக்கு பாதையாய்
பாதத்திற்கு பாதுகாப்பாய்
நரம்புக்கு சதையாய்
உடலுக்கு உயிராய்
....
அன்பே
இப்படி சாகும்வரை இல்ல
சாவே வராதபடி நீயும் நானும்
நானும் நீயும் இருக்க ஆசை.😍😘

Thursday, June 13, 2019

தேன்நிலவு வாழ்த்துகள்

கைபேசியை கழட்டிவிடுங்கள்
மின்பொருட்களை மிதித்துவிடுங்கள்
தொல்லைகளை தொலைத்துவிடுங்கள்
பணிசுமையை பறக்கவிடுங்கள்
மனவலிகளை மறந்துவிடுங்கள்
சுமைகளை சுகமாக்கிவிடுங்கள்

நீங்கள் இருவர் இருப்பதை மட்டும்
நீங்கள் உணர்ந்துவிடுங்கள்

வெளிச்சத்தை எடுத்துவிடுங்கள்
காற்றையும் கடத்திவிடுங்கள்
இடைவெளியை குறைத்துவிடுங்கள்
நட்சத்திரங்களை ஜொலிக்கவிடுங்கள்
மேகத்தை போர்த்திவிடுங்கள்
தென்றலை உலவவிடுங்கள்

வெட்கத்தை வெறுத்துவிடுங்கள்
மெத்தையை பூக்கவிடுங்கள்
மௌனத்தை கலைத்துவிடுங்கள்
முத்தத்தால் சத்தம்விடுங்கள்
காதலை கலந்துவிடுங்கள்
காமத்தை கடந்துவிடுங்கள்

வான்நிலவு மட்டும் குடை பிடிக்க
தேன்நிலவு தேனாக இனிக்க வாழ்த்துகள்.

Sunday, June 9, 2019

வர்ணனை பாடல்

அழகு அவளழகு 
அவளால் அழகும் பெறும் அழகு
அழகு பெயரழகு
அவளால் பெயர் பெறும் அழகு
அழகு அழகு  உனது படைப்பால் பெண்மை அழகு
அழகு அழகு உனது ஈப்ப்பால் பிறர் படைப்பும் அழகு 
சரணம்
*********
பார்த்தவுடன் மயக்கும் உந்தன் முகம் அழகு
மாசில்லா மழலை மனம் அழகு
கார்மேகக் குயில் கருங்கூந்தல் அழகு
வளைமதி வந்தொன்றிய வானவில் நுதல் அழகு
அதிலேற்றிய கோபுர திலகம் அழகு
பெண்ணுலகம் பிரம்மிக்கும் உன் பேரழகு 

சரணம்
*********
மாந்தோப்பு மாங்குயிலும் ஏங்கும் பேச்சு அழகு
தேனீக்கள் மொய்க்க தேனிதழ் அழகு
சங்குகள் ஓலமில சங்குகழுத்து அழகு 
சிரிப்பதை பார்த்ததிலிருந்து மின்னலும் முறைப்பது அழகு 
வண்ணமெல்லாம் உடல் ஏந்தி தோகைமயில் தோற்குதடி உனது தோள் அழகு 

ஹைக்கூ பூக்கள்#5

பல'கார இரவு பூஜை 
பற்பல' விசயங்களால் சிக்கினார் 
சபல' சாமியார்! 
**********
விடுமுறை இல்லை
பணி ஓய்வு இல்லை
பென்ஷன் இல்லை 
"இல்லத்தரசி"
***********
பிச்சைப் பாத்திரம் நிரம்புகிறது 
கொடுப்பவனால் அல்ல
எடுப்பவனின் பெருமூச்சால்..!
***********
வெட்டுங்கள் தருவேன் என்கிறது குளம்
வெட்டாதீர்கள் தருவேன் என்கிறது மரம்.
*************
கடைத்தெருவில் பார்த்துக்கொண்டிருந்தேன் அவள்
கடைக்கண் பார்வை கிடைக்குமா என்று.

Saturday, June 8, 2019

ஒரு பக்க க(வி)தை#5

அமைதியாக படுக்கையின் மீது அமர்ந்தேன்
ஆனால் மனதிலோ அமைதி இல்லை
என்னடா வாழ்க்கை இது என 
உருகுலைந்து சரிந்தேன்
எதிரே பார்த்தால் உருகலைந்த நிலையில் குடை.

பார்த்த படி கண்களை இறுக மூடினேன்
கண்களை குடை விரித்தது
என்னவாயிற்று ஏன் சலிப்பு என கேட்டது.
என் வாழ்க்கை மழை வெயில்னு பார்க்காம உழைச்சிகிட்டுனு புலம்பினார்.
அட பாவி மனுசா இதோ என்னையே எடுத்துக்கொள்
பிறப்போ பல நிறங்களில் இருந்தாலும்
ஜாதி மதம் கிடையாது.
தத்துப் பிள்ளையாய் இருந்தாலும் தலை காக்கும் தலைப் பிள்ளை நான்.

பணம் இருப்பவரிடம் தேவவை என்றால் சொகுசாக இருப்பேன்
லேசாக கிழிந்தாலும் குப்பைக்கு போவோன்.
மனம் இருப்பவரிடமோ கிழிந்தாலும் இருப்பேன்.

இளமையும் என்னை விரும்பும்
முதுமையும் என்னை விரும்பும்
மழை வந்தால் என்னையே நனைப்பார்கள்
வெயில் வந்தாலும் தயவின்றி சுட்டெரிப்பார்கள்

ஆண்டிக்கு மட்டுமல்ல அரசனுக்கும் மேல் நான்தான்.
வாழ்வின் தொடக்கமும் வாழ்வின் இறுதிவரை நான்தான்.
இருந்தும் தலைவணங்கி நிழல் கொடுப்பேன்.
இப்படி ஓய்வில்லா உழைப்பதனால் தான் 
என்னை மகுடமாய் அனைவரும் குடை சூடுகின்றனர்.

என்ன புரிகிறா என்று குடை மூளையை திறந்து விட இமைகளை மூடியது.

சட்டென எழுந்தான் மனுசன்னா உழைப்பதே மதிப்பு என்பதை உணர்ந்தான்.

கைகளில் குடையை எடுத்து விரித்தபடி
தலை நிமிர்ந்து உழைக்க சென்றான்...

பிரிவு மடல்

கருவறை வந்தது வேரானாலும்
கருவிழியால் ஒன்றானோம் இங்கேதான்.
குடும்ப பின்புலம் வேரானாலும்
ஜேப்பியார் குழுமத்தில் ஒன்றானது இங்கேதான்.

ஜேப்பியார் பலருக்கு கைகொடுத்து ஏற்றி விட்டார்
பலர் வாழ்க்கை ஒளிர ஏற்றியும் விட்டார்
பலருக்கு வாழ்க்கை தொடங்கியதும் இங்கேதான்
சிலருக்கு வழுக்கையும் விழ தொடங்கியதும் இங்கேதான்

நட்பின் நாடகம் தொடங்கியதும்
நாடகத்தில் நட்பே நிரம்பியதும்
வேலையில் நடிக்க முடியாததும்
வேலையே இதயதுடிப்பு ஆகியதும் இங்கேதான்.

சின்ன சின்ன பல அரட்டைகள்
வண்ண வண்ண சில சிரிப்புகள்
குழப்பம் இடையே வரும் புரிதல்கள்
குடும்பம் இடையே தரும் நொறுக்கல்கள் இங்கேதான்.

குறும்பு எனும் குற்றாலத்தில் நனைந்தோம்
அன்பு எனும் சோலையில் அலைந்தோம்
பண்பு எனும் பாடம்சொல்லி மகிழ்ந்தோம்
மாண்பு எனும் பெயர்பெற்று திகழ்ந்தது இங்கேதான்.

இயந்திரமும் இப்படி இருந்திருக்குமோ தெரியாது
இயங்கிய நாமோ இயந்திரமாய் இருந்திருப்போம்
இருந்ததில்லை வேலையை கண்டு பயந்து
இணைந்து பயத்தை கொன்று வேலையை முடித்ததும் இங்கேதான்.

இருவேளை காலையிலும் மாலையிலும் பேருந்து
இடைவேளை வேளையில் சமோசா உணவுவிருந்து
இல்லத்து உணவையே இருந்தோம் மறந்து
இல்லமே வந்து உணவருந்திய காலமும் இங்கேதான்.

அண்ணா Curriculum படிக்க வைத்ததும்
ஒண்ணா கறிக்குழம்பு ருசிக்க வைத்ததும்
எண்ணா செயல்களை செய்ய வைத்ததும்
பண்ணா திறமைகளை  பண்ண வைத்ததும் இங்கேதான்.

தவறுகள் என்று தெரிந்தால்
தட்டி கேட்க தயங்கியதில்லை
மானம் பெரிதென தன்மானம் உயிரென
மன்றாடும் கூட்டம் ஐடி கூட்டணி இங்கேதான்.

இறுதில் பாடப்பிரிவை எடுத்து சேர்ந்திருந்தாலும்
இறுதியாண்டில் கால்தடம் பதிக்கும் ஐடி மாணவ கூட்டம்
இறுக்கமாய் பாடத்தில் நடக்க சொன்னாலும்
இணக்கமாய் வழிநடத்தும் ஐடி ஆசிரிய கூட்டம் இங்கேதான்.

பல ஏற்றங்களை சந்தித்த நாம்
சில மாற்றங்களை சந்தித்துதானே ஆகனும்
நினைத்திருக்க மாட்டோம்
நினைக்காததும் நடக்குமென்று
நினைத்து இருந்தோம்
நடப்பவை நீளுமென்று
இறுதியில்
நினைவுகளே நிஜம் இன்று..
இனி
வலைதளமே பாலமாய்...
வார்த்தைகளே பார்வையாய்..
புகைப்படமே உறவாய்..

All the best my friends
வாழ்க வளர்க
Keep in Touch

வாழ்த்து மடல் : மருத்துவ பட்டம் முடித்ததற்கு

வாழ்த்து மடல் : மருத்துவ பட்டம் முடித்ததற்கு

நவீன குறள்:
மருத்துவத்தில் மதிநுட்பங்கொண்டு மருத்துவரானாய்
மருத்துவமே இனிகாணாய் மகத்துவம்.

வாழ்த்துகள் மருத்துவரே....

கையில் பட்டத்தை வாங்கிவிடு
பயத்தை தூர பறக்கவிடு

பொறுத்தது போதும்,  இனி..

கையில் கத்தியை எடு
கிழித்து தைத்துவிடு

கையில் ஊசியை எடு
அழுத்தி போட்டுவிடு

கையில் மருந்துசீட்டு எடு
கைராசி உள்ளவர் ஆகிவிடு

கையில் stethoscope எடு
இதயமதை அறிந்துவிடு

கையில் மாத்திரை எடு
நோயை மாற்றி விடு

கையில் வருவாய் எடு
நோய் வராது காத்து விடு

(நம்பிக்)கையில் வாழ்ந்துவிடு
நாடி வருபவரை வாழவிடு

காதல் பாடல்#37

வா வா இதயமே வா 
காதல் உதயமே வா
வா வா வாழ்வே வா
வாழ்வில் மகிழ்வே வா
உன்னோடு இறுதிவரை வாழ வேண்டும் வா வா
இறக்கும் தறுவாயிலும் உன் மடிதனில் இருக்க வேண்டும் வா வா

சரணம்
*********
நீ என்னை எடுத்துக்கொள் இதயம் தவிர அன்பே தேவையது நேசிக்க.
என் பணிகளை மறந்து உனை நினைப்பதே பணியாகி போனதே.
பார்க்க பார்க்க நீயோ புதிர் ஆகிறாய்
பார்த்த பின் என்னை புதிதாய் புரிய வைக்கிறாய்
என்னை இவ் உலகில் புதிதாய் அறிய வைக்கிறாய்.

சரணம்
*********
நீ பார்க்கும் பார்வையில்
என்னுள் ஏதோ மின்னல்ஒளி பரவிடுதே
கண் இமைகளை திறந்து மூடும் 
வேளைதனில் மின்வெட்டு ஆகிடுதே
காதல் காதல் என்று பதற வைத்தாய்
காதல் தீ எங்கும் பற்றி எரிய வைத்தாய்
என்னை உன் இதயத்தில் என்றும் சிக்க வைத்தாய்.

Friday, June 7, 2019

ஒரு பக்க க(வி)தை#4

என்னவளை படத்தில் பார்த்த பின்
படித்தும் பாடம் ஏறவில்லை
காரணம் மனப்பாடமாய் அவள்

நாளை கல்லுரியில் தேர்வு வேறு
ஆனால் அவளிடம் தேர்வாகி விட்டேன் இன்று என்பதால்
இனி என்ன நடந்தால் என்ன..

விடிந்தது..
காலை என்பதாலும் என்னுள்
காதல் என்பதாலும் 

கல்லூரிக்கு சென்றேன் 

நேரம் வந்தது தேர்விற்கு
கேள்விதாள் என்னிடம்
அறியாதவர்கள் பாவம்
பதில் இருப்பதோ அவளிடம் என்று

கேள்வியை படித்தேன் நினைத்தேன்
விடை எழுத துவங்கினேன்

"பட்டாம்பூச்சி இமைகள்
மீன்கொண்ட கண்கள்
எடுப்பான நாசி
உடுப்பான இதழ்
பிடிப்பான கன்னம்
தடிப்பான தாடை

துடிப்பான இதயம் 
இடிப்பான இடை
நடிப்பான நடை
..................
.................."

கேள்வி இதுதான்
"கோலார் தங்கச்சுரங்கத்தை பற்றி குறிப்பு எழுதுக" என்று

பாரதியை போல் மிடுக்காய் விடைத்தாளை
கொடுத்து விட்டு 
தேர்வறையில் இருந்து விடை பெற்றேன்.

நேரம் முடிந்து மணி அடித்தார்கள்
அவன் காதில் காதல் மணியாய் ஒலித்தது
பாடத்திற்கு அது சங்கு என்பதை அறியாதவனாய் சிரித்தபடி சென்றான்.

நம்பிக்கை பாடல்

யார் உன்னுடன் வந்த என்ன போனா என்ன
மேலே பார் வானம் உண்டு
கீழே பார் பூமி உண்டு
திரும்பும் பக்கங்கள் எல்லாம் திசைகள் உண்டு
தன்னம்பிக்கை கொண்டு நடடா
பாதைகள் உருவாகும் பாரடா
பின்னாள் மக்கள் வரக்கூடும்டா.
சரணம்
*********
தோற்கடிக்கப்படுவாய் என்று எண்ணும் போதே நீ தோற்றுவிட்டாயடா
உன்னால் முடியும் என்று மனஉறுதியோடு போராடு
வலிகள் பெரியதாகின் வரும்
வெற்றியும் பெரும் வெற்றிதானடா
புரிந்துகொள் வலிகள் உடலுக்கு தானே தவிர உள்ளத்திற்கு அல்ல என்று....

சரணம்
*********
முடியவில்லை என்று எண்ணி கொண்டால் நீ மடிந்துபோவாயடா
முடியும் முடியும் என்று தன்னம்பிக்கை கொள்ளடா
வலிகள் கண்டபின் வரும் வெற்றி வாழ்க்கையை கற்றுத்தருமடா
புரிந்துகொள் இருண்ட வலிகளுக்கு பிறகு தானே பிரகாசமான வெற்றிப் பாதை...

Thursday, June 6, 2019

காதல் பாடல்#36

வளரும் சிலையோ வளைந்த நதியோ
உன்னை பார்க்க கழரும் மனதோ
மோக கொடியோ முல்லை மலரோ
உன்னை பார்க்க உளரும் நாவோ
இயற்கை ஈன்ற இறைவன் மகளோ
சரணம்
*********
அழகு தங்கம் 
உன்னை வெட்டி எடுத்து உரசிட ஏங்கும் அங்கம்
பெண் சிங்கம்
கர்ஜிக்க உருவம் பெற்று விளங்கும் தமிழ் சங்கம்
கவிதை தமிழும் குலையும் தேன் இதழ் அமுதென வழிந்தோடும்.
ஈர்க்கும் அவள் இடை செழிவில் இதயமது உடைந்தொடும்...
சரணம்
*********
தங்கம் விளையும்
உனது அங்கம் எங்கும் தாகம் தீர்க்கும் பாகம்.
அசைவில் நடக்கும்
தேர்நீ பேச்சில் சாந்தம் ஈர்ப்பில் இழுக்கும் காந்தம்.
நடக்கும் போது ஆழிப்பெருங் கடல் இடையோ இடையிடை சேரும்திடல்.
உடன்வரும் அவள் நிழல் உலகமது வரைபடம் சொர்க்கம்... 

காதல் பாடல்#35

என்னுள் விதையாய் விழுந்த காதலே
கண்ணுள் கனவாய் மிதந்த காதலே
எண்ணில் நினைவாய் நின்ற காதலே
என்னில் உயிராய் நிறைந்த காதலே
உன்னை கண்ட நாள் முதல் நான் நானாக இல்லை
பார்க்கும் இயற்கையிடம் தூது விட்டேன் 
இயல்பாய் போவதது ஏனடி
இயல்பாய் இல்லை நானடி.
சரணம்
*********
மின்னலிடம் தூது அனுப்பினேன் என் காதலை
மின்னல் திரும்பியது ஏனோ
மின்னல் உன்கண் சிமிட்டியதை பார்த்ததாலோ.
நிலவிடம் தூது அனுப்பினேன் என் காதலை
நிலவு திரும்பியது ஏனோ
நிலவு உன்அழகில் வியந்து போனதாலோ.
செடிகொடி மலர் வாசம் கூட பறைசாற்றும் என் காதலை.
இப்படி இயற்கையிடம் காதலை சொல்லி சொல்லி
இயற்கையும் இயல்பாய் இல்லையடி
இறுதியில் என் கண்களை தூது விட்டேன் 
என்னவென்று கேளடி...
சரணம்
**********
காற்றிடம் தூது அனுப்பினேன் என் காதலை
காற்று திரும்பவில்லை ஏனோ
காற்றும் உன்னை பார்த்ததும் தென்றல் ஆனதாலோ.
பூவிடம் தூது அனுப்பினேன் என் காதலை
பூவும் முகமலர்ந்தது ஏனோ
பூவும் உன்னை பார்த்து பூரிப்பு அடைந்ததாலோ.
வானம் மேகம் மழை கூட பறைசாற்றும் என் காதலை
இப்படி இயற்கையிடம் காதலை சொல்லி சொல்லி
இயற்கையும் இயல்பாய் இல்லையடி
இறுதியில் என் கண்களை தூது விட்டேன் 
என்னவென்று கேளடி...

Tuesday, June 4, 2019

ஒரு பக்க க(வி)தை#3

பேச்சுப் போட்டி தொடங்கவிருக்கிறது.

தலைப்போ "பெண் சுதந்திரம்" பற்றியது
தலைகுள்ளே பேசவேண்டியதெல்லாம் சுற்றியது

தான் எழுதி வைத்திருந்ததை
மடித்து வைத்து
மைக்கை பிடித்தாள்
பேச தொடங்கினாள்...

என்ன பேசுவது
நாட்டில்
சுதந்திரம் இருக்கிறதா?
அதுவும் பெண் சுதந்திரம்
உண்மையில் இருக்கிறதா?

அனைத்து உயிர்களும் சமம்னு சொல்றோம்
பிறப்பிலேயே பிரித்துதான் பார்க்கிறோம்
ஒரே மார்புல குடித்து வளர்கிற ஆண் பெண்ணை
வேற வேற விதமா வளர்க்கின்றோம்.

இதுதான் அடிப்படை பிரச்சனை
சரியா இருந்தா
வந்திருக்காது பிரச்சனை

பெண்கள் நாட்டின் கண்கள்னு சொல்லிகிட்டு
ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பு சமன் என்பதை
உணராமல் கண்களை திருடுவது ஏனோ?

பெண்....

சிறுமினா சின்னாபின்னமா சிதைக்கபடுகிறாள்.
குமரினா குள்ளநரியா குதறப்படுகிறாள்
கிழவினாலும் கிறுக்குபிடிச்சி கிழிக்கப்படுகிறாள்.
பெண்களின் வயதுதான் பிரச்சனையா?

கருப்பா இருந்தாலும் கற்பழிக்கபடுகிறாள்.
கலராய் இருந்தாலும் கற்பழிக்கபடுகிறாள்.
கலந்தமாதிரி இருந்தாலும் கற்பழிக்கபடுகிறாள்.
பெண்களின் நிறம்தான் பிரச்சினையா?

இந்துவாக இருந்தாலும் கற்பழிக்கபடுகிறாள்
இஸ்லாமாக இருந்தாலும் கற்பழிக்கபடுகிறாள்
கிறித்தவமாக இருந்தாலும் கற்பழிக்கபடுகிறாள்.
பெண்களின் மதம்தான் பிரச்சினையா?

சுடிதாரில் இருந்தாலும் கற்பழிக்கபடுகிறாள்
சேலையில் இருந்தாலும் கற்பழிக்கபடுகிறாள்
நவீன உடையிலும் இருந்தாலும் கற்பழிக்கபடுகிறாள்.
பெண்களின் ஆடைதான் பிரச்சினையா?

சாந்தசொருபியாக இருந்தாலும்  கற்பழிக்கபடுகிறாள்
சாமிகோவில்னு இருந்தாலும் கற்பழிக்கபடுகிறாள்
சமையல்குடும்பமாக இருந்தாலும் கற்பழிக்கபடுகிறாள்
பெண்களின் செயல்தான் பிரச்சினையா?

இல்லை
பெண் பெண்ணாக பிறந்தது தான் பிரச்சினையா?
அது படைத்தவன் நடத்திய நாடகம் சதி
மீதம் நாம் அரங்கேற்றுகின்ற நாடகம் விதி

இல்லை
ஆண் என்ற எல்லையை மீறினால்
பெண் பெண்ணாகவே இருப்பதுதான் பிரச்சினையா?
அவனுள் மிருகம் வெறி கொள்ள
பெண்ணே மிருகமாய் வெறி கொள் கொல்.

உறைந்த பார்வையாளர்களுக்கு மத்தியில்

உறைத்திருக்குமென உரையை முடித்தாள்.

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...