சம்'மதம் பாடல்
==============
யானைக்கு டேய் அப்பப்பத்தான் மதம்
மனுஷனுக்கு உள்ள எப்போவுமே மதம்
மதம் மனிதனை பிடித்தது மனிதனுக்கோ மதம் மட்டுமே பிடித்தது
பிறகென்னடா மனிதனுக்கு மனிதனையே பிடிக்கவில்லடா
யோசிச்சி பாருடா மதங்கள் எதுக்குடா
சரணம்
=======
கீதையில் உள்ளதெல்லாம் வெறும் கிறுக்கலாய் ஆனதோ
பைபிளில் சொன்னதெல்லாம் வெறும் பஞ்சாய் போனதோ
குரானில் கூறியதெல்லாம் வெறும் கூற்றாய் நிற்குதோ
வானவில்லில் பலவண்ணம் இருந்தாலும் கண்டாலும் அதன் மூலகாரணம் ஒன்றுதானே.
ஆயிரம் வழிகள் வகுத்தாலும் சொன்னாலும் நாம் சேருமிடம் ஒன்றுதானே.
இந்தமதம் அந்தமதம் எந்தமதம் ஆனாலும் தேவையில்லை சொல்லுங்கடா சம்மதம்.
நீயென்ன நானென்ன ஆனாலும் வேறில்லை ஒன்றுதான் பாடுங்கடா சமத்துவம்.
சரணம்
=======
கதிரும் காற்றும் புனலும் அனலும் பேதம் பார்க்குதோ.
ஆடும் மாடும் மண்ணும் மழையும் பேதம் பார்க்குதோ.
மயிலும் கிளியும் எலியும் புலியும் பேதம் பார்க்குதோ.
இதற்க்கெல்லாம் தெரிந்த ஒற்றுமை நமக்குள் ஏன் தெரியாமல் போனதேனோ.
பலதிசை நதிகள் சென்றாலும் வளைந்தாலும் அதன் முடியுமிடம் ஒன்றுதானே.
இந்தமதம் அந்தமதம் எந்தமதம் ஆனாலும் தேவையில்லை சொல்லுங்கடா சம்மதம்.
நீயென்ன நானென்ன ஆனாலும் வேறில்லை ஒன்றுதான் பாடுங்கடா சமத்துவம்.
No comments:
Post a Comment