Saturday, July 28, 2018

நவீன திருக்குறள் அதிகாரம் - மனை(வி)ளக்கம்)

நவீன திருக்குறள்
அதிகாரம் - மனை(வி)ளக்கம்) 
-------------------------------------------------------

1. எங்கும் நிழலாய் துணை நின்று
தொடர்வதால் துணைவி ஆனாள்.

2. காபி ஆத்தி கொடுத்தே காரியம்
காண்பதால் ஆத்துக்காரி ஆனாள்.

3. மந்திரம் சொல்லி மனை மனம்
புகுந்ததால் மனைவி ஆனாள்.

4. இல்லம் சிறக்க இல்லறம் கொண்டு
இயங்குவதால் இல்லாள் ஆனாள்.

5. பொன்நகை வேண்டுமென்று புன்னகை செய்தே 
வாங்குவதால் பொண்டாட்டி ஆனாள்.

6. தப்பு செஞ்சா பார்ட் பார்ட்டா
பிரிப்பதால் பார்ட்னர் ஆவாள்.

7. குடும்பம் தழைக்க எவரையும் வாத்தையால்
குத்திகாட்டுவதால் குத்துவிளக்கு ஆவாள்.

8. அஞ்சான் அரசனும் அஞ்சுவான் இல்லத்தில்
என்பதால் இல்லத்தரசி ஆவாள்.

9. உன்னில் பாதி என்னில் பாதி(ப்பு)
என்பதால் பெட்டர்அஃப் ஆவாள்.

10. தொடர்ந்து ஒய்ஃபை கொண்டு கண்காணித்து
வருவதால் ஒய்ஃப் ஆனாள்.

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...