விவசாயி பற்றி பாடல்
###################
நீயின்றி உணவு இல்லை
உணவின்றி உயிர்கள் இல்லை
உலகில் உயிர்கள் வாழ உழவனன்றி எவருமில்லை
உழவா உழவா உனைநான் தொழவா!
தொழுதிட உலகின் கடவுள் நீயே அல்லவா!
சரணம்
######
விடியும்முன்பு ஏர்பூட்டி வானம் பார்த்து நிலத்திற்கு உயிர் கொடுப்பவன்.
காலம் பார்த்து எதையும் நினையாது அயராமல் உழைப்பவன்.
உமது பசியினை மறந்து நமது பசியை நினைப்பவன்.
உணவு எனும் நீங்கா அமிர்தத்தை நமக்கு அளிப்பவன்.
மருத நிலத்தை ஆளும் அரசன்.
மனதில் நிலைக்கும் ஆருயிர் கள்வன்.
மழைத்துளிகளை கண்டால் கண்துளிகள் இருந்தாலும் மகிழ்ச்சி கொள்பவன்.
உழவா உழவா உனைநான் தொழவா!
தொழுதிட உலகின் கடவுள் நீயே அல்லவா!
சரணம்
######
மண்ணோடு உறவாடி பயிரோடு பேசியே உலகிற்கே சோறு போடுபவன்.
நோயால் படுத்தாலும் பயிரை நோய் அண்டாமல் காப்பவன்.
தனது உடலினை வருத்தி நமது உள்ளத்தில் நிற்ப்பவன்.
பலர் வாழ்க்கை செழிக்க அவன்வாழ்வை நமக்கு தருபவன்.
உணவு படைப்பாளி நீயே கடவுள்.
உயிர் காவலாளி நீயே இறைவன்.
உழுபனோ உழுதே உழைப்பவனோ யாராகினும் பயனுற வேண்டும்.
உழவா உழவா உனைநான் தொழவா!
தொழுதிட உலகின் கடவுள் நீயே அல்லவா!
No comments:
Post a Comment