Monday, July 30, 2018

காதல் பாடல்#11

காதல் பாடல்#11
*****************

யோசித்து யோசித்து பார்க்கிறேன்
பெண்ணே உன் நினைவன்றி வேறேதும் வரவில்லை.
மூலையில் உட்கார்ந்து யோசித்தேன்
பெண்ணே உன் நினைவுகளே மூளையில் உட்கார்ந்ததால் வேறேதும் யோசனை வரவில்லை.
பெண்ணே சொல் பெண்ணே பெண்ணே
யாவிலும் வந்து நின்றாய் முன்னே முன்னே.

சரணம்
*********

தமிழ் கணம் கணமே என் மனதை நச்சரிக்கிறது.
இதழ் தினம் தினமே உன் பெயரை உச்சரிக்கிறது.
பேச்சில் யாவும் நீதானே பெண்ணே மூச்சில் நீயே நிறைந்தாயே.
கூச்சல் போட மறந்தேனே பெண்ணே நீச்சல் காதல் அடிப்பேனே.
பெண்ணே சொல் பெண்ணே பெண்ணே
யாவிலும் வந்து நின்றாய் முன்னே முன்னே.

சரணம்
*********
இனம் புரியா தெரியா வரும் இன்பம் இழைகிறது.
மனம் அறிய அறியா வர காதல் தழைக்கிறது.
கண்களில் வித்தை நீதானே பெண்ணே பெண்களில் நீயே சிறந்தாயே.
மண்ணில் மறைய நேர்ந்தாலும் பெண்ணே உன்னில் மறைய செய்வேனே.
பெண்ணே சொல் பெண்ணே பெண்ணே
யாவிலும் வந்து நின்றாய் முன்னே முன்னே.

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...