நவீன திருக்குறள்
அதிகாரம் - பணம்
********************
1. அன்று பணம் படைத்தான் மனிதன்
இன்று பணம் படைக்கிறது.
2. பணமறிந்து பயன்படுத்து பணமோ ஆயுதத்தை
விட மிக பலமுடைத்தது.
3. போதும் என்று சொல்ல வைக்காது
போதிய கையிருப்பு இருந்தாலும்.
4. பணக்காரனின் கடவுள் ஏழைகளின் எட்டாக்கனி
அனைவரின் அன்றாட தேவை.
5. மனிதனை மாற்றும் இயக்கும் ஆட்டிபடைக்கும்
மாந்திரீ சக்தி பணம்.
6. படிக்காதவன் முதலாளி படித்தவன் தொழிலாளி
பணம் படுத்தும் பாடு.
7. பணமென்பது வெறும் எண்ணிக்கைதான் பாசமென்பது
இறுதி வரை எண்ணத்தான்.
8. இருந்தால் வாழ்வு இல்லையேல் தாழ்வு
இரந்தால் பிச்சை பணம்.
9. ஒருவரின் நடத்தை இடத்தை பொருத்தல்ல
பணமிருக்கும் இடத்தை பொருத்தது.
பணமிருக்கும் இடத்தை பொருத்தது.
10. மனமென்பது பணமானா குணம் கெட்டு
வாழ்க்கை மணம் இழக்கும்.
No comments:
Post a Comment