கேள்வி-பதில்?பாடல்
&&&&&&&&&&&&
மலரிடம் தென்றல் கோபம் கொள்ளுமா?
வானம் நிலவை கேலி பேசுமா?பூவே வண்டை விரட்டி அடிக்குமா
உயிரே உடலிடம் சண்டை போடுமா?
அன்பே நீ வேற நான் வேறென்று ஆகுமா சொல் சொல்...
சரணம்
&&&&&&
கடல் கலங்கி கலங்கி அடிக்க கரைத்தான் ஒதுங்கிடுமோ
மழை கொட்டி கொட்டி தீர்க்க பூமிதான் எதிர்த்திடுமோ
தமிழும் பேச இனிக்க மறுத்திடுமோ கவிஞன் எழுத கவிதை நின்றிடுமோ
மீனும் தண்ணீரில் தத்தளித்திடுமோ பிறப்பில் அழுகை மாறிடுமோ
இயற்க்கை நம்மை பிரித்திடுமோ சொல் அன்பே சொல்.
மழை கொட்டி கொட்டி தீர்க்க பூமிதான் எதிர்த்திடுமோ
தமிழும் பேச இனிக்க மறுத்திடுமோ கவிஞன் எழுத கவிதை நின்றிடுமோ
மீனும் தண்ணீரில் தத்தளித்திடுமோ பிறப்பில் அழுகை மாறிடுமோ
இயற்க்கை நம்மை பிரித்திடுமோ சொல் அன்பே சொல்.
சரணம்
&&&&&&
எறும்பு வரிசையை கலைக்க கலைக்க போதுமென்று நின்றிடுமோ
சிலையை உளிகள் அடிக்க போதும் என்றுதான் ஓடிடுமோ
காலம் சுழல தாமதம் செய்திடுமோ காக்கை தனியே உண்ண எண்ணிடுமோ
தாமரை சூரியனை வெறுத்திடுமோ தங்கம் நாள்பட கருத்திடுமோ
இயற்க்கை நம்மை பிரித்திடுமோ சொல் அன்பே சொல்.
&&&&&&
எறும்பு வரிசையை கலைக்க கலைக்க போதுமென்று நின்றிடுமோ
சிலையை உளிகள் அடிக்க போதும் என்றுதான் ஓடிடுமோ
காலம் சுழல தாமதம் செய்திடுமோ காக்கை தனியே உண்ண எண்ணிடுமோ
தாமரை சூரியனை வெறுத்திடுமோ தங்கம் நாள்பட கருத்திடுமோ
இயற்க்கை நம்மை பிரித்திடுமோ சொல் அன்பே சொல்.
No comments:
Post a Comment