Tuesday, July 3, 2018

வர்ணனை பாடல்

வர்ணனை பாடல்
+++++++++++++++

பூவே முகம் பூமொட்டே பூவே இதழ் பூவிதழே!
பூவே அகம் பூமலரே பூவே புறம் பூந்தளிரே!
பூஞ்சோலை மேனியே பூமாலை இராணியே!
பூ பூவாய் நாளும் பூப்பவளே பூ மனப் பெண்ணாய் திரிப்பவளே!

சரணம்
+++++++
பூங்கொடியே கொடிக்கு கொடியே உன் நடையே!
பூங்குழலே பிடிக்கு பிடியே உன் கூந்தலே!
பேசும் பேச்சே பூங்காற்றே காணும் அழகில் பூங்காவனமே! பூந்தோட்டமே பூவுக்கெல்லாம் பூமகளே யாவும் பெண்ணே நீதானே!

சரணம்
+++++++
பூம்பாவையே நொடிக்கு நொடியே உன் நினைவே! 
பூங்கோதையே அடிக்கு அடியே உன் பாதையே! 
பார்க்கும் பார்வை பூவிழியே தீண்டும் தீண்டல் பூந்தொட்டியே!
பூக்காரியே பூக்கலெல்லாம் சுமந்த பெண்மையே நீதானே!

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...