Thursday, July 5, 2018

நவீன திருக்குறள் அதிகாரம் - இயற்கையும் பெண்ணும்

நவீன திருக்குறள்
அதிகாரம் - இயற்கையும் பெண்ணும்
####################################

1. விண்ணுக்கு நிலவு அழகு போல்
மண்ணுக்கு பெண் அழகே.

2. நதி நடந்தால் அலை பெண்
ஜதியுடன் நடந்தால் சிலை.

3. பாக்கள் படிக்க அழகு பாவை
பார்க்க பார்க்க அழகு.

4. பூக்கள் பூத்திட அழகு பூவையர்
பூப்பெய்திட மென்மேலும் அழகு.

5. ஓவியம் வரைந்திட அழகு படைப்பிலே
ஓவியமான பெண்மை அழகு.

6. பொன்நகை அழகுதான் இருப்பினும் பெண்மையில்
புன்னகை அழகோ அழகுதான்.

7. தொட்டாற்சிணுங்கி அழகு தொட்டாலும் விட்டாலும் 
சிணுங்கும் பெண் பேரழகு.

8. தென்றல் அழகாய் வீசும் பெண்கள் 
விழி அழகாய் பேசும்.

9. கறுப்பு தோகைமயில் கண்டதில்லை பெண்ணே
கண்டேன் உந்தன் கார்கூந்தலில்.

10. மகுடிஇசையும் மூங்கிலிசையும் தோற்றுநிற்கும் பெண்ணவள்
குரலோசையை எத்திசையும் கேட்டு.

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...