நவீன திருக்குறள்
அதிகாரம் - கண்ணாடி
------------------------------ ---------
1. தவறு செய்தாலும் தவறி செய்தாலும்
தவறாமல் காட்டும் நண்பன்.
2. நமது பிழைகளை சுட்டிக் காட்டும்
பிழைகளை திருத்தும் ஆசான்.
3. அழுதாலும் சிரித்தாலும் உதைத்தாலும் உடைத்தாலும்
உந்தன் பிம்பம் காட்டுவேன்.
4. அரிச்சந்திரன் நானென்று சொல்லலாம் உண்மையான
அரிச்சந்திரன் இவன் மட்டுமே.
5. என்னை போல் ஒருவன் என்னை
காட்டும் இன்னொருவன் கண்ணாடி.
6. இருப்பதை இருக்கும்படி உள்ளதை உள்ளபடி
சிறிதும் மாறாமல் காட்டுபவன்.
7. என்னை எனக்கே அறிமுகம் செய்யும்
எதிர்பார்பில்லா உண்மை உறவு.
8. உனது சிதறல்கள் காயம் தரலாம்
பிம்பம்ங்கள் மாயம் செய்யும்.
9. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
கண்ணாடி பார் புரியும்.
10. கண்ணாடி பட்டால் உண்மை பேசும்
கண்ணடிபட ஊரே பேசும்.
No comments:
Post a Comment