நவீன திருக்குறள்
அதிகாரம் - நண்பன்
------------------------------ -----
1. துன்பத்தில் துணை நிற்பான் இன்பத்தில்
பங்கு பெறுவான் நண்பன்.
2. அறியாததை அறிய வைப்பான் தெரியாததை
தெரிய வைப்பான் நண்பன்.
3. உதவிகள் தருவான் உதிரமும் தருவான்
உயிரையும் தருவான் நண்பன்.
4. தோள் கொடுப்பான் தோல்வியை தடுப்பான்
தோதாக நடப்பான் நண்பன்.
5. நமக்குள் விட்டுக் கொடுப்பான் பிறரிடம்
விட்டுக்கொடுக்க மாட்டான் நண்பன்.
6. தவறு நிகழ்ந்தால் அதட்டுவான் சரியாக
நடந்தால் மகிழ்வான் நண்பன்.
7. ஏணியாக தோணியாக மேனியாக ஞானியாக
உடன் இருப்பான் நண்பன்.
8. எப்போதும் சிந்திப்பான் எந்நேரமும் சந்திப்பான்
எதற்கும் சிலாகிப்பான் நண்பன்.
9. விழ கைகொடுப்பான் எழ நம்பிக்கைகொடுப்பான்
தொழ கடவுளாவான் நண்பன்.
10. மாதா பிதா குரு தெய்வம்
அதில் தெய்வமாய் நண்பன்.
No comments:
Post a Comment