Saturday, July 28, 2018

நவீன திருக்குறள் அதிகாரம் - மனைவி

நவீன திருக்குறள்
அதிகாரம் - மனைவி
-----------------------------------

1. தாயின் மறுபிறவி தந்தையின் பாசம் 
அண்ணன் தம்பியின் அக்கறை.

2. தனியாய் வந்து வாழ்க்கை பயணத்தில்
துணையாய் நிற்கும் வழித்துணை.

3. எப்படி வாழ நினைத்தாயோ அதைவிட
அழகாய் வாழ செய்பவள்.

4. உருகி உருகி ஒளிதரும் மெழுகாய்
காலமும் உருகும் ஜீவன்.

5. வாழ்வில் வசந்தமாய் இருளில் வெளிச்சமாய்
தோல்வியில் வெற்றியாய் நிற்பவள்.

6. ஆதாரமாய் கரம் பிடித்து தரமும்
தராதரமும் உயர்த்திய தாரம்.

7. தந்தை எனும் விந்தை உலகம்
தந்த விந்தை மங்கை.

8. தோளோடு தோள் சாய்க்க தோழனைப்
போல் தோள் கொடுப்பவள்.

9. நிஜமாய் நிழலாய் நினைவாய் நித்தமுமாய்
நிகரற்று துணை நிற்பவள்.

10. பிறந்தமனை துறந்து இறக்கும் வரை
புகுந்தமனை தனை ஆள்பவள்.

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...