காதல் ஏக்கம் பாடல்#8
++++++++++++++++++++
வீச்சரிவாள் வேல்கம்புனு தூக்கிக்கிட்டு சுத்துறவன்
ஊர்வம்பு பேசாமல் நியாயத்தை மட்டும் பேசுறவன்
என் மனச காணலையே மச்சான் எங்க கொண்டு வச்சுகிட்ட?
உன் நெனப்ப நெஞ்சுகுள்ள தச்சி தச்சி மாயம் செஞ்சுபுட்ட.
ஊருக்கே விருமாண்டி தான் ஆனாலும் நான்தானே உனக்கு ஏத்த பொண்டாட்டி.
சொல்லு மாமா சம்மதம் சொல்லு மாமா.
சரணம்
+++++++
உயிரை கையில புடிச்சிகிட்டு உன்ன மட்டும் நெனச்சிருக்கேன்.
உடம்பை ஏதோ உனக்காக கொடுக்க மட்டும் வச்சிருக்கேன்.
நீ இல்லா வாழ்க்கை நெனச்சி பார்க்க முடியலையே.
நீ மட்டுமே வாழ்க்கை என்றே நித்தம் உயிர் சத்தம் சொல்லுதே
சொல்லு மாமா சம்மதம் சொல்லு மாமா.
சரணம்
+++++++
கத்தி முனையும் கத்திகத்தி உந்தன் பெயரை சொல்லிடுமே.
புத்தி முழுதும் முக்திமுக்தி சிறுக்கி மவகிறுக்கி ஆகிட்டேனே.
நீ ஊருக்கு சண்டியரா இருந்துக்கோ கவலை எனக்கில்ல.
என் கழுத்துக்கு தாலியை சேர்த்து உன்னில் கோர்த்து கொண்டுபோ
சொல்லு மாமா சம்மதம் சொல்லு மாமா.
No comments:
Post a Comment