மழை பாடல்
------------------------
மழையின் சிறுதுளி மணிகள் தேகம் நனைத்திட
அய்யோ அம்மா என்றே நெஞ்சம் குதித்திட
சொர்க்கம் இதுவோ என்றே மனதால் நினைத்திட
மழையே மழையே வா வா வா
உயிரை உரசியே போ போ போ
சரணம்
-------------
உலகம் பசிதனை மறந்திட செய்தவள் விவசாயம் தலை நிமிர்ந்திட செய்தவள்.
ஏழையின் வீட்டிலும் உறவோடி நுழைந்தவள்.
பாலையின் மண்மீதும் சிலநேரம் உலவியவள்.
நன்மைகள் பிழையின்றி நமக்கென்றும் அளிப்பவள்.
உண்மையாய் என்றும் உரிமையாய் நனைக்கும் பாகுபாடு என்றும் எங்கும் பார்க்காத மழையே.
மழையே மழையே வா வா வா
உயிரை உரசியே போ போ போ.
சரணம்
--------------
உன்னை வேண்டாம் என்பவர் இங்கில்லை வெறுத்தவர் உலகில் வாழ்ந்ததே இல்லை.
சிகரங்கள் தொட்டுத்தான் தினம்தினமும் பொழியும்.
சிரமங்கள் பார்க்காமல் சரிசமமாய் தூறும்.
அதரங்கள் தானாக பலகவிகள் பாடும்.
ஆழ்மனதின் துன்பங்கள் தொலைதூரம் ஓடோடிட பாகுபாடு என்றும் எங்கும் பார்க்காத மழையே.
மழையே மழையே வா வா வா
உயிரை உரசியே போ போ போ.
No comments:
Post a Comment