Tuesday, July 31, 2018

மழை பாடல்

மழை பாடல்
------------------------

மழையின் சிறுதுளி மணிகள் தேகம் நனைத்திட
அய்யோ அம்மா என்றே நெஞ்சம் குதித்திட
சொர்க்கம் இதுவோ என்றே மனதால் நினைத்திட
மழையே மழையே வா வா வா
உயிரை உரசியே போ போ போ

சரணம்
-------------

உலகம் பசிதனை மறந்திட செய்தவள் விவசாயம் தலை நிமிர்ந்திட  செய்தவள்.
ஏழையின் வீட்டிலும் உறவோடி நுழைந்தவள்.
பாலையின் மண்மீதும் சிலநேரம் உலவியவள்.
நன்மைகள் பிழையின்றி நமக்கென்றும் அளிப்பவள்.
உண்மையாய் என்றும் உரிமையாய் நனைக்கும் பாகுபாடு என்றும் எங்கும்  பார்க்காத மழையே. 
மழையே மழையே வா வா வா
உயிரை உரசியே போ போ போ.

சரணம்
--------------

உன்னை வேண்டாம் என்பவர் இங்கில்லை வெறுத்தவர் உலகில் வாழ்ந்ததே இல்லை.
சிகரங்கள் தொட்டுத்தான் தினம்தினமும் பொழியும்.
சிரமங்கள் பார்க்காமல் சரிசமமாய் தூறும்.
அதரங்கள் தானாக பலகவிகள் பாடும்.
ஆழ்மனதின் துன்பங்கள் தொலைதூரம் ஓடோடிட பாகுபாடு என்றும் எங்கும் பார்க்காத மழையே. 
மழையே மழையே வா வா வா
உயிரை உரசியே போ போ போ.

Monday, July 30, 2018

காதல் பாடல்#11

காதல் பாடல்#11
*****************

யோசித்து யோசித்து பார்க்கிறேன்
பெண்ணே உன் நினைவன்றி வேறேதும் வரவில்லை.
மூலையில் உட்கார்ந்து யோசித்தேன்
பெண்ணே உன் நினைவுகளே மூளையில் உட்கார்ந்ததால் வேறேதும் யோசனை வரவில்லை.
பெண்ணே சொல் பெண்ணே பெண்ணே
யாவிலும் வந்து நின்றாய் முன்னே முன்னே.

சரணம்
*********

தமிழ் கணம் கணமே என் மனதை நச்சரிக்கிறது.
இதழ் தினம் தினமே உன் பெயரை உச்சரிக்கிறது.
பேச்சில் யாவும் நீதானே பெண்ணே மூச்சில் நீயே நிறைந்தாயே.
கூச்சல் போட மறந்தேனே பெண்ணே நீச்சல் காதல் அடிப்பேனே.
பெண்ணே சொல் பெண்ணே பெண்ணே
யாவிலும் வந்து நின்றாய் முன்னே முன்னே.

சரணம்
*********
இனம் புரியா தெரியா வரும் இன்பம் இழைகிறது.
மனம் அறிய அறியா வர காதல் தழைக்கிறது.
கண்களில் வித்தை நீதானே பெண்ணே பெண்களில் நீயே சிறந்தாயே.
மண்ணில் மறைய நேர்ந்தாலும் பெண்ணே உன்னில் மறைய செய்வேனே.
பெண்ணே சொல் பெண்ணே பெண்ணே
யாவிலும் வந்து நின்றாய் முன்னே முன்னே.

Saturday, July 28, 2018

நவீன திருக்குறள் அதிகாரம் - மனைவி

நவீன திருக்குறள்
அதிகாரம் - மனைவி
-----------------------------------

1. தாயின் மறுபிறவி தந்தையின் பாசம் 
அண்ணன் தம்பியின் அக்கறை.

2. தனியாய் வந்து வாழ்க்கை பயணத்தில்
துணையாய் நிற்கும் வழித்துணை.

3. எப்படி வாழ நினைத்தாயோ அதைவிட
அழகாய் வாழ செய்பவள்.

4. உருகி உருகி ஒளிதரும் மெழுகாய்
காலமும் உருகும் ஜீவன்.

5. வாழ்வில் வசந்தமாய் இருளில் வெளிச்சமாய்
தோல்வியில் வெற்றியாய் நிற்பவள்.

6. ஆதாரமாய் கரம் பிடித்து தரமும்
தராதரமும் உயர்த்திய தாரம்.

7. தந்தை எனும் விந்தை உலகம்
தந்த விந்தை மங்கை.

8. தோளோடு தோள் சாய்க்க தோழனைப்
போல் தோள் கொடுப்பவள்.

9. நிஜமாய் நிழலாய் நினைவாய் நித்தமுமாய்
நிகரற்று துணை நிற்பவள்.

10. பிறந்தமனை துறந்து இறக்கும் வரை
புகுந்தமனை தனை ஆள்பவள்.

நவீன திருக்குறள் அதிகாரம் - மனை(வி)ளக்கம்)

நவீன திருக்குறள்
அதிகாரம் - மனை(வி)ளக்கம்) 
-------------------------------------------------------

1. எங்கும் நிழலாய் துணை நின்று
தொடர்வதால் துணைவி ஆனாள்.

2. காபி ஆத்தி கொடுத்தே காரியம்
காண்பதால் ஆத்துக்காரி ஆனாள்.

3. மந்திரம் சொல்லி மனை மனம்
புகுந்ததால் மனைவி ஆனாள்.

4. இல்லம் சிறக்க இல்லறம் கொண்டு
இயங்குவதால் இல்லாள் ஆனாள்.

5. பொன்நகை வேண்டுமென்று புன்னகை செய்தே 
வாங்குவதால் பொண்டாட்டி ஆனாள்.

6. தப்பு செஞ்சா பார்ட் பார்ட்டா
பிரிப்பதால் பார்ட்னர் ஆவாள்.

7. குடும்பம் தழைக்க எவரையும் வாத்தையால்
குத்திகாட்டுவதால் குத்துவிளக்கு ஆவாள்.

8. அஞ்சான் அரசனும் அஞ்சுவான் இல்லத்தில்
என்பதால் இல்லத்தரசி ஆவாள்.

9. உன்னில் பாதி என்னில் பாதி(ப்பு)
என்பதால் பெட்டர்அஃப் ஆவாள்.

10. தொடர்ந்து ஒய்ஃபை கொண்டு கண்காணித்து
வருவதால் ஒய்ஃப் ஆனாள்.

Friday, July 27, 2018

காதல் டூயட்#10

காதல் டூயட்#10
*****************

புஜ்ஜுகுட்டி அம்முகுட்டி 
உன்ன கொஞ்ச போறேன் செல்லகுட்டி.
அச்சுவெல்லம் கருப்பட்டி
உன்ன திங்க போறேன் மல்லுக்கட்டி.
மேனியோ தங்கக்கட்டி உரசிட வாரேன்குட்டி.
நீயோ சிங்கக்குட்டி தாங்குமோ சொல்லுகுட்டி.

சரணம்
*********
துள்ளி வரும் கண்ணுக்குட்டி அணைக்க தூண்டும் கண்ணகட்டி.
பார்த்தா ஜில்லு ஐஸ்கட்டி தொட்டா உருக்கும் நெருப்புகட்டி.
பேச்சோ ரெம்ப படுசுட்டி பேசாம செய்ற ரெம்பவாட்டி.
ஆயிரம் வந்தாலும் போனாலும் நீதானே எந்தன் அழகுக்குட்டி நானே என்றும் உந்தன் அடிமைகுட்டி.

சரணம்
*********
சுவை தரும் சக்கரகட்டி மினுக்கும் உடல் சந்தனபெட்டி.
பிரம்மன் வரைந்த சித்திரகுட்டி அம்மன் தொழும் சாமிக்குட்டி.
நம்மை இணைக்க  காதலேகெட்டி காதலே சொல்லும் ஊரகூட்டி.
ஆயிரம் வந்தாலும் போனாலும் நீதானே எந்தன் அழகுக்குட்டி நானே என்றும் உந்தன் அடிமைகுட்டி.

நிலா!!!


Thursday, July 26, 2018

நவீன திருக்குறள் அதிகாரம் - பணம்

நவீன திருக்குறள்
அதிகாரம் - பணம்
********************

1. அன்று பணம் படைத்தான் மனிதன்  
இன்று பணம் படைக்கிறது.

2. பணமறிந்து பயன்படுத்து பணமோ ஆயுதத்தை
விட மிக பலமுடைத்தது.

3. போதும் என்று சொல்ல வைக்காது
போதிய கையிருப்பு இருந்தாலும்.

4. பணக்காரனின் கடவுள் ஏழைகளின் எட்டாக்கனி
அனைவரின் அன்றாட தேவை.

5. மனிதனை மாற்றும் இயக்கும் ஆட்டிபடைக்கும்
மாந்திரீ சக்தி பணம். 

6. படிக்காதவன் முதலாளி படித்தவன் தொழிலாளி
பணம் படுத்தும் பாடு.

7. பணமென்பது வெறும் எண்ணிக்கைதான் பாசமென்பது 
இறுதி வரை எண்ணத்தான்.

8. இருந்தால் வாழ்வு இல்லையேல் தாழ்வு
இரந்தால் பிச்சை பணம்.

9. ஒருவரின் நடத்தை இடத்தை பொருத்தல்ல 
பணமிருக்கும் இடத்தை பொருத்தது.

10. மனமென்பது பணமானா குணம் கெட்டு
வாழ்க்கை மணம் இழக்கும்.

புதுமை


Wednesday, July 25, 2018

புல்லட்..


புல்லட் காதலி..


வைத்தியம்


பணம் பணம் பணம் !!!

பணம் பணம் பணம் எத எடுத்தாலும் பணம்.
பணம் பணம் பணம் எத செஞ்சாலும் பணம்.
பணம்னா வாய பிளக்கும் பிணம்
பாதாளம் பாய வைக்கும் குணம்
ஜனனம் முதல் மரணம் வரை அதுதானே எல்லாத்துக்கும் காரணம்.

சரணம்
************
பிரசவம் பார்த்தாலும் பணம் பரவசம் அடைந்தாலும் பணம்
கல்லாமை போக்கிட பணம் கல்யாணம் பண்ணிட பணம்
உறவுகள் வந்தாலும் பணம் உலகம் சென்றாலும் பணம்
பகைமைக்கு காரணம் பணம் பந்த பாசத்திற்கு பணம்
பலரை காட்டி கொடுக்கவும் பணம் சிலரை கூட்டி கொடுக்கவும் பணம்
எங்கும் பணம் எதிலும் பணம் எதற்கும் பணம் எல்லாம் பணம்
பணம் பணம் பணம்னு பேய்யா அலையுற கூட்டம்
நாலு காலு தூக்கிகிட்டு போகையில ஊரு போடும் ஆட்டம்
ஒரு ரூபா காட்டிட்டு திரும்ப எடுக்கும் ஆடுற அதே கூட்டம்


சரணம்
***********
தண்ணிக்கும் காத்துக்கும் பணம் மூத்திரத்துக்கும் ஆத்திரத்துக்கும் பணம்
தண்ணிபாலுக்கும் தாய்ப்பாலுக்கும் பணம் தங்கத்துக்கும் தராதரத்துக்கும் பணம்
தேர்வுக்கும் தேர்தலுக்கும் பணம் ஓட்டு போட்டிட பணம்
கடமைக்கும் காரியத்திற்கும் பணம் லஞ்சம் ஊழல் பணம்
நல்லது நடக்க பணம் கெட்டது செய்திட பணம்
எங்கும் பணம் எதிலும் பணம் எதற்கும் பணம் எல்லாம் பணம்
பணம் பணம் பணம்னு பேய்யா அலையுற கூட்டம்
நாலு காலு தூக்கிகிட்டு போகையில ஊரு போடும் ஆட்டம்
ஒரு ரூபா காட்டிட்டு திரும்ப எடுக்கும் ஆடுற அதே கூட்டம்

Sunday, July 22, 2018

காதல் பாடல்#9

காதல் பாடல்#9
*****************

கண்ஜாடை காட்டி பெண்ணே நீயும் போன 
நெஞ்சோட மாட்டி ஒண்ணா நீயும் ஆனா 
என்னோட பியூட்டி எப்பவுமே நாட்டி
செய்யலாம் லூட்டி அதுதானே டியுட்டி
நமக்குள் வேணாம் போட்டி வைப்போம் காதல் பார்ட்டி

சரணம்
********
கண்ண கண்ண காட்டி செஞ்சுபுட்டா சீமாட்டி
இதழ இதழ ஆட்டி மடக்கிபுட்டா சுருட்டி
நரம்புகளை வீணையாய் மீட்டி ஆட்டுவிக்குறா பலவாட்டி
என்னை எனக்கே காட்டி காட்டி என்னில் உன்னை கூட்டி கூட்டி 
ஆயுள்தனை நீட்டி போறாளே.

சரணம்
*********
சின்ன இடை ஆட்டி நடக்கிறா தலையாட்டி
வண்ண முகம் காட்டி மயக்கிட்டாளே பூசூட்டி
நெஞ்சுகுள்ள அழகா பூட்டி வைச்சிருக்கேன் தாலாட்டி
காதலா என்று திட்டி திட்டி ஆமென்று வர்ணம் தீட்டி தீட்டி
உயிருக்கே உயிரூட்டி போறாளே.

Saturday, July 21, 2018

நவீன திருக்குறள் அதிகாரம் - கண்ணாடி

நவீன திருக்குறள்
அதிகாரம் - கண்ணாடி 
---------------------------------------

1. தவறு செய்தாலும் தவறி செய்தாலும் 
தவறாமல் காட்டும் நண்பன்.

2. நமது பிழைகளை சுட்டிக் காட்டும்
பிழைகளை திருத்தும் ஆசான்.

3. அழுதாலும் சிரித்தாலும் உதைத்தாலும் உடைத்தாலும்
உந்தன் பிம்பம் காட்டுவேன்.

4. அரிச்சந்திரன் நானென்று சொல்லலாம் உண்மையான
அரிச்சந்திரன் இவன் மட்டுமே.

5. என்னை போல் ஒருவன் என்னை 
காட்டும் இன்னொருவன் கண்ணாடி.

6. இருப்பதை இருக்கும்படி உள்ளதை உள்ளபடி
சிறிதும் மாறாமல் காட்டுபவன்.

7. என்னை எனக்கே அறிமுகம் செய்யும்
எதிர்பார்பில்லா உண்மை உறவு. 

8. உனது சிதறல்கள் காயம் தரலாம்
பிம்பம்ங்கள் மாயம் செய்யும்.

9. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
கண்ணாடி பார் புரியும்.

10. கண்ணாடி பட்டால் உண்மை பேசும்
கண்ணடிபட ஊரே பேசும்.

அழகோவியம் !!!


Thursday, July 19, 2018

நவீன திருக்குறள் அதிகாரம் - நண்பன்

நவீன திருக்குறள்
அதிகாரம் - நண்பன்
-----------------------------------

1. துன்பத்தில் துணை நிற்பான் இன்பத்தில்
பங்கு பெறுவான் நண்பன்.

2. அறியாததை அறிய வைப்பான் தெரியாததை 
தெரிய வைப்பான் நண்பன். 

3. உதவிகள் தருவான் உதிரமும் தருவான்
உயிரையும் தருவான் நண்பன். 

4. தோள் கொடுப்பான் தோல்வியை தடுப்பான்
தோதாக நடப்பான் நண்பன்.

5. நமக்குள் விட்டுக் கொடுப்பான் பிறரிடம்
விட்டுக்கொடுக்க மாட்டான் நண்பன்.

6. தவறு நிகழ்ந்தால் அதட்டுவான் சரியாக 
நடந்தால் மகிழ்வான் நண்பன்.

7. ஏணியாக தோணியாக மேனியாக ஞானியாக
உடன் இருப்பான் நண்பன்.

8. எப்போதும் சிந்திப்பான் எந்நேரமும் சந்திப்பான்
எதற்கும் சிலாகிப்பான் நண்பன்.

9. விழ கைகொடுப்பான்  எழ நம்பிக்கைகொடுப்பான்
தொழ கடவுளாவான் நண்பன்.

10. மாதா பிதா குரு தெய்வம்
அதில் தெய்வமாய் நண்பன்.

Wednesday, July 18, 2018

கேள்வி-பதில்?????

கேள்வி-பதில்?பாடல்
&&&&&&&&&&&&
மலரிடம் தென்றல் கோபம் கொள்ளுமா?
வானம் நிலவை கேலி பேசுமா?
பூவே வண்டை விரட்டி அடிக்குமா
உயிரே உடலிடம் சண்டை போடுமா?
அன்பே நீ வேற நான் வேறென்று ஆகுமா சொல் சொல்...
சரணம்
&&&&&&
கடல் கலங்கி கலங்கி அடிக்க கரைத்தான் ஒதுங்கிடுமோ
மழை கொட்டி கொட்டி தீர்க்க பூமிதான் எதிர்த்திடுமோ
தமிழும் பேச இனிக்க மறுத்திடுமோ கவிஞன் எழுத கவிதை நின்றிடுமோ
மீனும் தண்ணீரில் தத்தளித்திடுமோ பிறப்பில் அழுகை மாறிடுமோ
இயற்க்கை நம்மை பிரித்திடுமோ சொல் அன்பே சொல்.
சரணம்
&&&&&&
எறும்பு வரிசையை கலைக்க கலைக்க போதுமென்று நின்றிடுமோ
சிலையை உளிகள் அடிக்க போதும் என்றுதான் ஓடிடுமோ
காலம் சுழல தாமதம் செய்திடுமோ காக்கை தனியே உண்ண எண்ணிடுமோ
தாமரை சூரியனை வெறுத்திடுமோ தங்கம் நாள்பட கருத்திடுமோ
இயற்க்கை நம்மை பிரித்திடுமோ சொல் அன்பே சொல்.

காதல் என்பது


Monday, July 16, 2018

காதல்


கர்மவீரரே காமராஜரே

கர்மவீரரே காமராஜரே
************************

தமிழகம் கண்ட ஒரு தலைவரே
தலைவர்கள் போற்றும் பெருந் தலைவரே
உலகம் வியக்கும் நம் தலைவரே
உயர்ந்த செயல்கள் செய்த தலைவரே
உன்னை போல் இனி வருபவர் உண்டோ?
உன்னை பேசாது தனி அரசியல் உண்டோ?
இராஜராஜரே எங்கள் மாகாராஜரே! கர்மவீரரே எங்கள் காமராஜரே!

சரணம்
********
ஆடுமாடு மேய்த்த பிள்ளைகளை ஏட்டுக்கல்வி கற்க சொன்னவர்
ஊர்ச்சுற்றி திரிந்த பிள்ளைகளை பள்ளிக்கூடம் போக சொன்னவர்
பள்ளிச்சிறார்களுக்கு பசியினை போக்கியவர் மதியஉணவு திட்டத்தை கண்டவர்
எளிமை வாழ்விற்கு வழிகாட்டியவர் ஏற்றமிகு எண்ணத்திற்கு சொந்தமவர்
சமூகநீதிக்கு அடித்தளம் அமைத்தவர் சமுதாயமே குடும்பமென வாழ்ந்தவர் 
சுயநலம் அறிந்திடா சுந்தரபுருஷர் சுற்றங்களை மறந்த முதல்அமைச்சர்
மண்ணிலே மாணிக்கம் அவரோ! மறைந்திட்ட மனிதநேயம் அவரே!
இராஜராஜரே எங்கள் மாகாராஜரே! கர்மவீரரே எங்கள் காமராஜரே!

சரணம்
********
அணைகள் பலது கட்டச்சொல்லி தண்ணீரை சேர்க்க செய்தவர்
தொழில்கள் பலது கொண்டுவந்து நகரங்கள் செய்த வல்லவர்
ஏழைகள் முன்னேற பாடுபட்டவர் நாடு முன்னேற பாடாய்ப்பட்டவர்
திட்டங்கள் பலதீட்டிய தீர்க்கதரிசியவர் அறியாமை இருள்தனை அகற்றியவர்
பதவிமோகம் எள்ளளவும் இல்லாதவர் பணம்பவிசுகளை கண்டு மயங்காதவர்
இருண்ட கிராமங்களுக்கு ஒளியேற்றியவர் சமுதாய மாற்றத்தின் சமூக விஞஞானியவர்
மண்ணிலே மாணிக்கம் அவரோ! மறைந்திட்ட மனிதநேயம் அவரே!
இராஜராஜரே எங்கள் மாகாராஜரே! கர்மவீரரே எங்கள் காமராஜரே!

பூந்தோட்டம் அவள்!!!


Saturday, July 14, 2018

இயற்கையை பற்றி பாடல்

இயற்கையை பற்றி பாடல்
%%%%%%%%%%%%%%%%%

இயற்கையில் என்னென்ன அதிசயம்
ஒவ்வொன்றிலும் உள்ளது இரகசியம்
அறிய ஆவலாய்  துடிக்கும் மனசு
தெரிய தெளிய யாவும் புதுசு
யார்தான் முழுதும் அறிவாரோ அறிந்தவர் ஒருவர் இருப்பாரோ

சரணம்
%%%%%

காடுகளும் மலைகளும் அதிசயம்
அதில் மரம் செடிகொடிகளும் அதிசயம் அதிசயம்.
மழையும் அருவியும் அதிசயம்
அதில் நதிகளும் கடல்களும் அதிசயம் அதிசயம்.
சுட்டுவிடும் நெருப்பும் அதிசயம் பட்டுவிடும் தென்றலும் அதிசயம்.
கட்டிவிடும் இசையும் அதிசயம் மொட்டுவிடும் மலரும் அதிசயம்.
பறவைகளும் பட்சிகளும் அதிசயம் வானவில் வர்ணம் அதிசயம்
மூடுபனியும் பனித்துளியும் வயல்வெளியும் அதிசயம் அதிசயம்.    
காணும் யாவும் அதிசயம் அதிசயம்.
படைப்பிலே இவைகள் கொண்டன இரகசியம்.

சரணம்
%%%%%%
வானமும் நட்சத்திரமும் அதிசயம்
அதில் சூரியன் சந்திரன்   அதிசயம் அதிசயம்.
பூமியும் உயிர்களும் அதிசயம்
அதில் மனிதனும் மிருகங்களும் அதிசயம் அதிசயம்.
சுட்டிசுட்டி மழலை அதிசயம் குட்டிகுட்டி கருணை அதிசயம்.
வெட்டவெட்ட வாழை  அதிசயம் கட்டகட்ட உறவு அதிசயம். 
அன்பும் அறனும் அதிசயம் பண்பும் பாசமும் அதிசயம்.
சிரிப்பும் சிந்தனையும் சித்தாந்தமும் அதிசயம் அதிசயம்.    
காணும் யாவும் அதிசயம் அதிசயம்.
படைப்பிலே இவைகள் கொண்டன இரகசியம்.

Tuesday, July 10, 2018

அவள் ஒரு...


காதல் ஏக்கம் பாடல்#8

காதல் ஏக்கம் பாடல்#8
++++++++++++++++++++

வீச்சரிவாள் வேல்கம்புனு தூக்கிக்கிட்டு சுத்துறவன்
ஊர்வம்பு பேசாமல் நியாயத்தை மட்டும் பேசுறவன்
என் மனச காணலையே மச்சான் எங்க கொண்டு வச்சுகிட்ட?
உன் நெனப்ப நெஞ்சுகுள்ள தச்சி தச்சி மாயம் செஞ்சுபுட்ட.
ஊருக்கே விருமாண்டி தான் ஆனாலும் நான்தானே உனக்கு ஏத்த பொண்டாட்டி.
சொல்லு மாமா சம்மதம் சொல்லு மாமா.

சரணம்
+++++++

உயிரை கையில புடிச்சிகிட்டு உன்ன மட்டும் நெனச்சிருக்கேன்.
உடம்பை ஏதோ உனக்காக கொடுக்க மட்டும் வச்சிருக்கேன்.
நீ இல்லா வாழ்க்கை நெனச்சி பார்க்க முடியலையே.
நீ மட்டுமே வாழ்க்கை என்றே நித்தம் உயிர் சத்தம் சொல்லுதே
சொல்லு மாமா சம்மதம் சொல்லு மாமா.

சரணம்
+++++++

கத்தி முனையும் கத்திகத்தி உந்தன் பெயரை சொல்லிடுமே.
புத்தி முழுதும் முக்திமுக்தி சிறுக்கி மவகிறுக்கி ஆகிட்டேனே.
நீ ஊருக்கு சண்டியரா இருந்துக்கோ கவலை எனக்கில்ல.
என் கழுத்துக்கு தாலியை சேர்த்து உன்னில் கோர்த்து கொண்டுபோ
சொல்லு மாமா சம்மதம் சொல்லு மாமா.

Monday, July 9, 2018

விவசாயி பற்றி பாடல்

விவசாயி பற்றி பாடல்
###################

நீயின்றி உணவு இல்லை
உணவின்றி உயிர்கள் இல்லை
உலகில் உயிர்கள் வாழ உழவனன்றி எவருமில்லை
உழவா உழவா உனைநான் தொழவா!
தொழுதிட உலகின் கடவுள் நீயே அல்லவா!

சரணம்
######
விடியும்முன்பு ஏர்பூட்டி வானம் பார்த்து நிலத்திற்கு உயிர் கொடுப்பவன். 
காலம் பார்த்து எதையும் நினையாது அயராமல் உழைப்பவன்.
உமது பசியினை மறந்து நமது பசியை நினைப்பவன்.
உணவு எனும் நீங்கா அமிர்தத்தை நமக்கு அளிப்பவன்.
மருத நிலத்தை ஆளும் அரசன். 
மனதில் நிலைக்கும் ஆருயிர் கள்வன்.
மழைத்துளிகளை கண்டால் கண்துளிகள் இருந்தாலும் மகிழ்ச்சி கொள்பவன்.
உழவா உழவா உனைநான் தொழவா!
தொழுதிட உலகின் கடவுள் நீயே அல்லவா!

சரணம்
######
மண்ணோடு உறவாடி பயிரோடு பேசியே உலகிற்கே சோறு போடுபவன்.
நோயால் படுத்தாலும் பயிரை நோய் அண்டாமல் காப்பவன்.
தனது உடலினை வருத்தி நமது உள்ளத்தில் நிற்ப்பவன்.
பலர் வாழ்க்கை செழிக்க அவன்வாழ்வை நமக்கு தருபவன்.
உணவு படைப்பாளி நீயே கடவுள்.
உயிர் காவலாளி நீயே இறைவன்.
உழுபனோ உழுதே உழைப்பவனோ யாராகினும் பயனுற வேண்டும்.
உழவா உழவா உனைநான் தொழவா!
தொழுதிட உலகின் கடவுள் நீயே அல்லவா!

நவீன திருக்குறள் அதிகாரம் - தொடர் முயற்சி

நவீன திருக்குறள்
அதிகாரம் - தொடர் முயற்சி
+++++++++++++++++++++++++

1. கற்களும் காலம்மாற பயனுள்ள பாதைகளாகும் 
கால்கள் தொடர்ந்து நடக்கையில்.

2. துன்பஇருளில் நம்பிக்கை ஒளியை தொடர்ந்து
ஏந்திடு ஆவாய் நட்சத்திரம்.

3. தோல்வியெனும் காயத்திற்கு தொடர்ந்து முயற்சியெனும்
மருந்திடு வெற்றியின்வடு பதியும்.

4. செய்யும் செயலை முழுமனதுடன் தொடர்ந்து 
செய்திடு செழிக்கும் வாழ்க்கை.

5. எந்நிலையே நீயும் குலைந்திடாமல் படைக்கும் 
முயற்சிகள் தொடர்ந்து செய்திடு. 

6. தொடர்ந்து உழை தொடராது பிழை
தொடர்ந்திடும் வெற்றி மழை.

7. முடியுமென தொடர்ந்து சிந்திக்க பழகு
தொட்ட தெல்லாம் ஆகுமழகு.

8. முன்னோக்கி தொடர்ந்து முன்னேற செல்
காத்திருக்கலாம் அழகான வாழ்வு.

9. தொடர்ந்து முடியுமென்பாய் உதடுகள் மட்டுமல்ல
தொட்ட காரியங்களும் கூடும்.

10. நம்மால் முடியாவிட்டால் யாரால் முடியும்
போராடு தொடர்ந்து துணிவோடு.

Sunday, July 8, 2018

சம்'மதம் பாடல்

சம்'மதம் பாடல் 
==============

யானைக்கு டேய் அப்பப்பத்தான் மதம்
மனுஷனுக்கு உள்ள எப்போவுமே மதம் 
மதம் மனிதனை பிடித்தது மனிதனுக்கோ மதம் மட்டுமே பிடித்தது 
பிறகென்னடா மனிதனுக்கு மனிதனையே பிடிக்கவில்லடா
யோசிச்சி பாருடா  மதங்கள் எதுக்குடா 

சரணம்
=======
கீதையில் உள்ளதெல்லாம் வெறும் கிறுக்கலாய் ஆனதோ 
பைபிளில் சொன்னதெல்லாம் வெறும் பஞ்சாய் போனதோ
குரானில் கூறியதெல்லாம் வெறும் கூற்றாய் நிற்குதோ 
வானவில்லில் பலவண்ணம் இருந்தாலும் கண்டாலும் அதன் மூலகாரணம் ஒன்றுதானே.
ஆயிரம் வழிகள் வகுத்தாலும் சொன்னாலும் நாம் சேருமிடம் ஒன்றுதானே.
இந்தமதம் அந்தமதம் எந்தமதம் ஆனாலும் தேவையில்லை சொல்லுங்கடா சம்மதம்.
நீயென்ன நானென்ன ஆனாலும் வேறில்லை ஒன்றுதான் பாடுங்கடா சமத்துவம்.

சரணம்
=======
கதிரும் காற்றும் புனலும் அனலும் பேதம் பார்க்குதோ.
ஆடும் மாடும் மண்ணும் மழையும் பேதம் பார்க்குதோ.
மயிலும் கிளியும் எலியும் புலியும் பேதம் பார்க்குதோ.
இதற்க்கெல்லாம் தெரிந்த ஒற்றுமை நமக்குள் ஏன் தெரியாமல் போனதேனோ.
பலதிசை நதிகள் சென்றாலும் வளைந்தாலும் அதன் முடியுமிடம் ஒன்றுதானே.
இந்தமதம் அந்தமதம் எந்தமதம் ஆனாலும் தேவையில்லை சொல்லுங்கடா சம்மதம்.
நீயென்ன நானென்ன ஆனாலும் வேறில்லை ஒன்றுதான் பாடுங்கடா சமத்துவம்.

Friday, July 6, 2018

கிழவன் கிழவி காதல்

கிழவன் கிழவி காதல்
--------------------------------------

மனுஷா ஏய் பெரிய மனுஷா
பார்க்காதே ஒரு தினுஷா
தரிசான பின் காதல் பரிசா
பண்ண இது வயசா
பொக்க வாய வைச்சுக்கிட்டு காதல் அச போடுற
நடக்க முடியா வயதிலும் நாடகம் தான் நடத்துற 
(பெண் குரலில்)

மனுஷி ஏய் பெரிய மனுஷி
பார்த்தாலே உள் ஆகும்குஷி.
வயசு கூட காதல் கூடுதே
மனசு சேர பாடுதே.
வெத்தல உதட்ட சுழிச்சிகிட்டு காதல் கலர் காட்டுற
அறுபது வயது ஆனாலும் இருபது போல சுத்துற.
(ஆண் குரலில்)

சரணம் (பெண்)
---------------------------
தாடை சுருங்கிய போதும் காதலின் வாழ்க்கை சுருங்கவில்லை.
பருவம் போன போதும் காதலின் உருவம் மாறவில்லை.
கூன் விழுந்த போதிலும் அழகுக் கிழவனே.
ஆயிரம் பல ஜென்மங்களிலும் நீயே என் துணைவனே வேறு என்ன அன்பான காதலனே.

சரணம் (ஆண்)
---------------------------
நரை விழுந்த போதும் காதலில் குறை விழுகவில்லை.
பல் விழுந்த போதும் பாசத்தில் பஞ்சம் வந்ததில்லை.
நான் தடுமாற தடுமாறாமல் தாங்கும் கிழவியே.
வருடங்கள் பல ஓடினாலும் ஓடும் என் வாழ்க்கையின் மீதம் உன்னாலே கிழவியான பொண்டாட்டியே.

Thursday, July 5, 2018

நவீன திருக்குறள் அதிகாரம் - இயற்கையும் பெண்ணும்

நவீன திருக்குறள்
அதிகாரம் - இயற்கையும் பெண்ணும்
####################################

1. விண்ணுக்கு நிலவு அழகு போல்
மண்ணுக்கு பெண் அழகே.

2. நதி நடந்தால் அலை பெண்
ஜதியுடன் நடந்தால் சிலை.

3. பாக்கள் படிக்க அழகு பாவை
பார்க்க பார்க்க அழகு.

4. பூக்கள் பூத்திட அழகு பூவையர்
பூப்பெய்திட மென்மேலும் அழகு.

5. ஓவியம் வரைந்திட அழகு படைப்பிலே
ஓவியமான பெண்மை அழகு.

6. பொன்நகை அழகுதான் இருப்பினும் பெண்மையில்
புன்னகை அழகோ அழகுதான்.

7. தொட்டாற்சிணுங்கி அழகு தொட்டாலும் விட்டாலும் 
சிணுங்கும் பெண் பேரழகு.

8. தென்றல் அழகாய் வீசும் பெண்கள் 
விழி அழகாய் பேசும்.

9. கறுப்பு தோகைமயில் கண்டதில்லை பெண்ணே
கண்டேன் உந்தன் கார்கூந்தலில்.

10. மகுடிஇசையும் மூங்கிலிசையும் தோற்றுநிற்கும் பெண்ணவள்
குரலோசையை எத்திசையும் கேட்டு.

Tuesday, July 3, 2018

வர்ணனை பாடல்

வர்ணனை பாடல்
+++++++++++++++

பூவே முகம் பூமொட்டே பூவே இதழ் பூவிதழே!
பூவே அகம் பூமலரே பூவே புறம் பூந்தளிரே!
பூஞ்சோலை மேனியே பூமாலை இராணியே!
பூ பூவாய் நாளும் பூப்பவளே பூ மனப் பெண்ணாய் திரிப்பவளே!

சரணம்
+++++++
பூங்கொடியே கொடிக்கு கொடியே உன் நடையே!
பூங்குழலே பிடிக்கு பிடியே உன் கூந்தலே!
பேசும் பேச்சே பூங்காற்றே காணும் அழகில் பூங்காவனமே! பூந்தோட்டமே பூவுக்கெல்லாம் பூமகளே யாவும் பெண்ணே நீதானே!

சரணம்
+++++++
பூம்பாவையே நொடிக்கு நொடியே உன் நினைவே! 
பூங்கோதையே அடிக்கு அடியே உன் பாதையே! 
பார்க்கும் பார்வை பூவிழியே தீண்டும் தீண்டல் பூந்தொட்டியே!
பூக்காரியே பூக்கலெல்லாம் சுமந்த பெண்மையே நீதானே!

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...