Thursday, May 31, 2018

தாலாட்டு பாடல்

தாலாட்டு பாடல்
""""""""""""""""""""""

பல்லவி
"""""""""""""""
மேகத்தை எடுத்து மெத்தை செய்தேன் நீ உறங்க.
வானத்தை குடை பிடிக்க சொன்னேன் நீ கிறங்க.
அழகே கண்ணே ஆராரோ ஆரிரரோ.
அமுதே பொன்னே ஆரிரரோ ஆராரோ.

சரணம்
"""""""""""""""
காற்று வந்து கீதம் பாடும்
நிலவும் சேர்ந்து வேதம் ஓதும்
செல்லமே கண்ணுறங்கு ஆராரோ ஆரிரரோ.
வானவில் புதிய வர்ணம் சேர்க்கும்
நட்சத்திரம் எல்லாம் கூடி பேசும்
செல்வமே கண்ணுறங்கு ஆராரோ ஆரிரரோ.

சரணம்
"""""""""""""""
பாட்டி வந்து கதைகள் சொல்ல
தாத்தா அம்பாரை கூட்டி செல்ல
செல்வமே கண்ணுறங்கு ஆராரோ ஆரிரரோ.
அப்பா உன்னை அள்ளி அணைக்க
அம்மா என்றும் உன்னருகினில் இருக்க
செல்லமே கண்ணுறங்கு ஆராரோ ஆரிரரோ.

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...