Friday, May 11, 2018

நவீன திருக்குறள் அதிகாரம் - காலநேரம்

நவீன திருக்குறள்
அதிகாரம் - காலநேரம்
%%%%%%%%%%%%%%%%

1. இருமுள் ஆயுதங்களாய் மனிதர்களை துரத்துகிறது
பிறப்பு இறப்பு வரை.

2. விடிந்தும் விடியுமென காலங் காலமாய்
காத்திருப்பான் அவன் முட்டாள்.

3. காலம் பொன் போன்றது வருங்
காலமோ இருகண் போன்றது.

4. கடந்து போனால் திரும்ப முடியாது
முடியும் உடன் போனால்.

5. காலத்தை வென்றவன் வெற்றியாளன் கடந்த
காலத்தையே நினைப்பவன் தோல்வியாளன்.

6. காலத்தே செய் பயன் கடந்து
செய்தால் பயனும் வீண்.

7. கலிகாலத்தில் காலம் தவறினால் ஆகும்
அலங்கோலம் உன் எதிர்காலம்.

8. நம்பிக்கையோடு என்கை பற்றி சுற்று
சுற்றாவிடில் வாழ்க்கை அற்று.

9. ஆணைக்கும் பூனைக்கும் தெரியும் காலம்
அவரவர் கையில் என்று.

10. இறந்தகாலம் எடுத்து நிகழ்காலம் உடுத்து
எதிர்காலம் பொற்காலம் நடத்து.

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...