Wednesday, May 9, 2018

மனிதனா நீ மனிதனா பாடல்

மனிதனா நீ மனிதனா பாடல்
#########################

பல்லவி
########

தேடி தேடி பார்க்குறேன்
மனிதர்கள் காணல.
ஓடி ஓடி ஒழியுறேன்
ஓநாய்கள் நடுவுல.
என்ன சொல்ல எப்படி சொல்ல தாங்கவில்ல.
மனுஷன் மனுஷனை கெடுக்குற காலம் ஓயவில்ல.
மாற்றம் மாற்றம் என்று சொன்னால் போகுமோ நிலை மாறுமோ?
மனிதன் தானாய் மனம் மாறினால் தான் போகுமே நீங்குமே?

சரணம்
########

நேரம் பார்த்து திட்டங்கள் பலது போடுறான்.
நேரா வந்தா கழுத்தில் மாலை சூடுறான்.
முகம் பார்த்து சிரிக்குறான் பின் முதுகில் ஏறி குத்துறான்.
வேலையை மறந்து அடுத்தவரிடம் மூக்கை நுழைக்குறான்.
வேவு பார்த்தே உடம்பு வெந்து சாகுறான்.
நல்லவன் போல் பேசுறான் பின் படுங் குழியில் தள்ளுறான்.
மனுஷன மனுஷன் புரளி பேசி அரளி வீசி தேவை இல்லாதத கிளரி ஏசுறான்.
மனிதா இது நியாயமா தர்மமா இது இப்படியே போகுமா முடிவாய் சொல் சொல்!.

சரணம்
########

காலம் பார்த்து கொள்ளை பலது அடிக்குறான்.
காமம் கொண்டு புள்ளையை கூட்டி கொடுக்குறான்.
காவல் போனா அடக்குறான் பின் நம்மில் பணம் பறிக்குறான்.
கட்சி தாவி காட்சிகள் பேசி நிற்குறான்.
ஏதோ பண்ணி காய்களை நல்லா நகர்துறான்.
அவனோ இவனோ பதுங்குறான் பின் ஒருவரை ஒருவர் தாக்குறான்.
ஏன்னு கேட்க ஆள போட்டு காலி பண்ணி இருக்குற இடம் இல்லா போக்குறான்.
மனிதா இது நியாயமா சொல்லடா நீ மனிதனா மிருகமா முடிவாய் சொல் சொல்!.

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...