வர்ணனை பாடல் பல்லவி ######## அழகும் உன்னை அழகென கொஞ்சும் அந்த ஆகாய நிலவின் அழகை மிஞ்சும் வானும் உன்னை ஏந்திட கெஞ்சும் அந்த மேக கூட்டங்கள் நெருங்கிட அஞ்சும் நட்சத்திர அந்தஸ்துக்கு வருமே பஞ்சம் எல்லாம் உன்னிடம் வருமே தஞ்சம் பெண்ணே நீதான் இயற்கையா இல்லை இயற்கை தான் பெண்ணா சரணம் ####### பார்த்து பார்த்து படைத்தவனும் ஏங்குவான் வானில் ஏறியே விண்ணை ஆளுவான் தூக்கம் இன்றியே அவனும் தூங்குவான் சிறகு இன்றியே காற்றில் கலக்குவான் காரணம் வேறல்ல பெண்ணே நீயேதான் இயற்கையே! உதாரணமும் தேவையல்ல இயற்கையே நீயேதான் பெண்மையே! சரணம் ####### மழையும் துளியும் என்றே நனைப்பவள் மண்ணும் மணமும் சேர்ந்தே இனிப்பவள் நகமும் சதையென கலந்தே வளர்பவள் உயிரும் உடலென இணைந்தே நகர்பவள் உயிரின்றி ஊன்னல்ல மண்ணே நீயேநான் பெண்ணே! நீயின்றி நானல்ல பெண்ணே நீயேநான் கண்ணே!
Sunday, May 6, 2018
வர்ணனை பாடல்
Subscribe to:
Post Comments (Atom)
கல்வி
ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த, நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...
-
உயிரெழுத்து V 0.1 அ'ம்மா அனைத்திற்கும் ஆ'தாரம் அடிப்படை.. இ'கழ்ந்தால் நீ இழப்பாய் ஈ'ட்டிய செல்வங்களை.. உ'யிராய் உச்சி...
-
ரொமான்ஸ் 😉 V 0.1 அன்பே.. நட்பே.. நகம் இழந்தபோது விரலாய் இருக்கிறாய்.. விரல் இழந்தபோது கையாய் இருக்கிறாய்.. கை இழந்தபோது ...
No comments:
Post a Comment