Monday, May 21, 2018

நாடா இது நாடா பாடல்

நாடா இது நாடா பாடல்
****************************
பல்லவி
#######
நாடா இது நாடா
ஏதோ நடக்குது போடா
கூடி கூடி போடுறான் திட்டம்
தனி தனி ஆளுக்கொரு சட்டம்
கையில தராச தந்துப்புட்டு
கண்கள தான் கட்டிபுட்டு வீதியில நீதி தேவதைய விட்டுட்டான்டா நம்ம ஆளு டோய்!

சரணம்
#######
நாடு முன்னேற சட்டங்கள வகுத்து பல திட்டங்கள் கொடுத்தான் அன்றைக்கு.
வீடு முன்னேற சட்டங்களை வளைத்து பல திட்டங்களில் அமுக்குறான் இன்றைக்கு.
வழக்குகள் மேல வழக்குகள் சேர தவறுகள் குறையல.
ஊருக்கு ஊர் தெருக்கு தெரு நீதிமன்றங்கள் பத்தல.
முடியும்னு போனா முடிந்த பாடல்ல எதிலும் நியாயம் கிடைத்த பாடல்ல.

சரணம்
#######
பீஸ்சு கிடைச்சா குற்றமே இல்லை என ஆக்கிடுவான் நம்மாளு தெரிஞ்சுக்கோ.
காசு கொடுத்தா நீதிமான் நீயே என எழுதி விடுவான் புரிஞ்சுக்கோ.
ஆளுக்கு ஆள் பதவிக்கு பதவி தண்டனை மாறுது.
தீர்ப்புக்கு மாறி தீர்ப்புனு சொல்ல தவறா நடக்குது.
கண்கள் திறந்து தண்டிக்க நீதிதேவதையே வாம்மா நியாயம் தந்துகண் பாரம்மா.

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...