Wednesday, May 30, 2018

இது காந்தி தேசமா? பாடல்

என்னன்னவோ நடக்குது நாட்டுல
நடப்பதோ ரூபா நோட்டுல
எல்லாத்தையும் பாருடா ரோட்டுல
சொல்ல போறேன் கேளுடா பாட்டுல.
இறைவா இது காந்தி தேசமா?
இல்லை அனைவரும் போடும் வேசமா?

சரணம்
**********
கையில காசுவச்சா இடிக்கலாம் நசுக்கலாம் எப்படியும் வண்டிய ஓட்டலாம்.
பணம்னா சட்டத்தையே வளைக்கலாம் மாத்தலாம் வேறாக மாத்தி எழுதலாம்.
போகும் பெண்ணிடம் திட்டம் போட்டு அவள் நகை அல்லாது அவளையும் கொய்கிறான்.
சாகும் வரையில் அடித்து விட்டு வீட்டு நகை உடைமை அனைத்தையும் அடிக்கிறான்.
இறைவா இதென்ன கொடுமை மனிதனின் மடமை.
மனிதன் மனிதனை நேசிக்காவிடில் அழிக்காமல் இருக்கலாம் அன்றோ?

சரணம்
**********
பையில பணமிருந்தா மிரட்டலாம் விரட்டலாம் எவனையும் விலைக்கு வாங்கலாம்.
பணத்துகாக செய்யுறான் இல்லாட்டா அரைகுறை செய்யுற மாதிரி நடிக்குறான்.
பட்டினி இருந்தாலும் இருப்பான் குடிக்க கடன் கிடைச்சா பட்டினிக்கும் சேர்த்தே குடிப்பான்.
இலஞ்சம் என்பதே அரசாச்சு காரணம் அவனவன் பணிகளுக்கு அதிகாரி காசு கேட்கலாச்சு.
இறைவா இதென்ன கொடுமை மனிதனின் மடமை.
தேவைக்கு பணம் என்பதுமாறி அழிவிற்கு பணம் நியாயமா?

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...