கிறுக்கல்கள் ✍ 10.2
மக்கள் வாழ
தேவை வளர்ச்சி
மக்கள் அழிவை கொடுக்கும்
வளர்ச்சி தேவையா?
தேவை வளர்ச்சி
மக்கள் அழிவை கொடுக்கும்
வளர்ச்சி தேவையா?
வேதாந்தா ஓடடா
வேணாம்டா நோயடா
வேணும்டா எங்கள் நிலம்டா
வேடிக்கை பார்ப்பவர்கள் நாங்கள் இல்லடா.
வேணாம்டா நோயடா
வேணும்டா எங்கள் நிலம்டா
வேடிக்கை பார்ப்பவர்கள் நாங்கள் இல்லடா.
முத்தெடுக்கும் ஊரில்
மூச்செடுக்க சொல்லி
முடுக்கி விட்ட கூட்டம்
மூடர்களின் ஆட்டம்
மூச்செடுக்க சொல்லி
முடுக்கி விட்ட கூட்டம்
மூடர்களின் ஆட்டம்
எதிரியை விரட்ட சொன்னால்
எதிரியாய் பார்க்கிறான்
ஏறி மிதிக்கிறான்
ஏளனமாய் சுடுகிறான்
எதிரியாய் பார்க்கிறான்
ஏறி மிதிக்கிறான்
ஏளனமாய் சுடுகிறான்
சுட்டவனை காப்பாற்ற
செத்தவனை தீவிரவாதியென
சட்டம் இயற்ற சொல்லும்
சனநாயகம் அய்யோ?
செத்தவனை தீவிரவாதியென
சட்டம் இயற்ற சொல்லும்
சனநாயகம் அய்யோ?
மக்களாட்சி எதற்கு?
மக்களை காக்கவா?
மக்களை துரத்தவா?
மக்களை கொல்லவா?
மக்களை காக்கவா?
மக்களை துரத்தவா?
மக்களை கொல்லவா?
காக்க வேண்டிய அரசாங்கம்
காவு வாங்கிய கோலம்
கண்ணீர் அலங்கோலம்
கடவுளே இது நியாயமா?
காவு வாங்கிய கோலம்
கண்ணீர் அலங்கோலம்
கடவுளே இது நியாயமா?
No comments:
Post a Comment