நவீன திருக்குறள்
அதிகாரம் - பொது(சுய)நலம்
****************************** ****
அதிகாரம் - பொது(சுய)நலம்
******************************
1. சுயநலம் விடுத்து பொதுநலம் காண்கின்
நரகம் ஆகும் சொர்க்கம்.
நரகம் ஆகும் சொர்க்கம்.
2. இருந்தால் புல்லாங்குழலாய் இருந்திடு கால்பந்தாய்
இருக்காதே உதை படுவாய்.
இருக்காதே உதை படுவாய்.
3. அன்று பொதுநலத்தின் எச்சம் இன்று
தன்னலத்தின் உச்சம் அரசியல்.
தன்னலத்தின் உச்சம் அரசியல்.
4. நட்பென்று பழகுவர் சிரிப்பர் வாய்ப்பென்றால்
மறைப்பர் சுயநலமாய் கழன்றிருப்பர்
மறைப்பர் சுயநலமாய் கழன்றிருப்பர்
5. குன்றின் மேலெரியும் விளக்கு பொதுநலம்
குன்றிதன்னுள் மறைப்பது சுயநலம்.
குன்றிதன்னுள் மறைப்பது சுயநலம்.
6. பிறர்நலம் தரும் பொதுநலம் அதில்
சுயநலம் கேடு தரும்.
சுயநலம் கேடு தரும்.
7. சுயநலம் மட்டும் கசடு கற்றோற்கு
பொதுநலம் இருந்தென்ன பயன்.
பொதுநலம் இருந்தென்ன பயன்.
8. தன்னலம் இல்லாதார் பொதுநலம் காண்பர்
அவன்நலம் யாரும் காணார்.
அவன்நலம் யாரும் காணார்.
9. பொதுநலம் என்பது தாகமில்லாத தண்ணீர்குடம்
குடிக்கும் பிறர் தாகத்திற்காக.
குடிக்கும் பிறர் தாகத்திற்காக.
10. நோயெல்லாம் நோயெல்ல மருந்திட மாறும்
சுயநலம் மாறா மனநோய்.
சுயநலம் மாறா மனநோய்.
No comments:
Post a Comment