அப்பாவை பற்றிய பாடல்
******************************
******************************
பல்லவி
**********
**********
நான் போற்றும் தெய்வம் அப்பா நீதானே.
தெய்வங்கள் போற்றும் தெய்வமும் நீதானே.
நீதானே என் கோயில் நீதானே.
நீதானே நான் வணங்கும் தெய்வம் நீதானே.
தேடிதேடி உலகில் எங்கு பார்த்தாலும் அப்பாவுக்கு நிகர் அப்பாதானே.
தெய்வங்கள் போற்றும் தெய்வமும் நீதானே.
நீதானே என் கோயில் நீதானே.
நீதானே நான் வணங்கும் தெய்வம் நீதானே.
தேடிதேடி உலகில் எங்கு பார்த்தாலும் அப்பாவுக்கு நிகர் அப்பாதானே.
சரணம்
**********
நடை அறியா பருவத்திலே நடக்க செய்தது நீதானே
விடை தெரியா விடலையிலே உரக்க உரைத்தது நீதானே.
கவலைகளில் சிக்காமல் வாழ்வின் வழிகளை வகுத்து கொடுத்தது நீதானே.
கோடிகள் கொட்டினாலும் மாடிகள் கட்டினாலும் ஈடில்லா வரம் அப்பா நீதானே.
ஆயிரம் உன்னால் கிடைத்தாலும் என் முதல் உலகம் முதல் தோழன் நீதானே.
**********
நடை அறியா பருவத்திலே நடக்க செய்தது நீதானே
விடை தெரியா விடலையிலே உரக்க உரைத்தது நீதானே.
கவலைகளில் சிக்காமல் வாழ்வின் வழிகளை வகுத்து கொடுத்தது நீதானே.
கோடிகள் கொட்டினாலும் மாடிகள் கட்டினாலும் ஈடில்லா வரம் அப்பா நீதானே.
ஆயிரம் உன்னால் கிடைத்தாலும் என் முதல் உலகம் முதல் தோழன் நீதானே.
சரணம்
**********
தோல்வி எனை நெருங்கயிலே அணைத்து தேற்றியது நீதானே.
தோளுக்கு தோள் கொடுத்து தூக்கி விட்டது நீதானே.
கேட்காமலே நினைத்ததை வாங்கி கொடுத்து அழகு பார்த்தது நீதானே.
ஊரில் தலைவன்னாலும் உலகில் அறிஞன்னாலும் என்றும் ஆசான் அப்பா நீதானே.
உலகம் என்பின் நின்றாலும் அதன் முதற் காரணம் மனம் மகிழ்பவன் நீதானே.
**********
தோல்வி எனை நெருங்கயிலே அணைத்து தேற்றியது நீதானே.
தோளுக்கு தோள் கொடுத்து தூக்கி விட்டது நீதானே.
கேட்காமலே நினைத்ததை வாங்கி கொடுத்து அழகு பார்த்தது நீதானே.
ஊரில் தலைவன்னாலும் உலகில் அறிஞன்னாலும் என்றும் ஆசான் அப்பா நீதானே.
உலகம் என்பின் நின்றாலும் அதன் முதற் காரணம் மனம் மகிழ்பவன் நீதானே.
No comments:
Post a Comment