Tuesday, May 29, 2018

காதல் பாடல்#2

காதல் பாடல்
+++++++++++++
தேன்மிட்டாய் கம்மர்கட்டாய் இனிக்கிறியே!
சாந்துபொட்டாய் சந்தனபொட்டாய் மணக்கிறியே!
மின்னல் வெட்டாய் உன் கண்கள் விட்டாய் பின் இதயம் தொட்டாய் அன்பே!
என்னில் இட்டாய் உன் அன்பை சொட்டாய் பின் தேகம்  சுட்டாய் அன்பே!!

சரணம்
++++++++
நெஞ்சில் பதிந்திட்டாய் அதில் ஊஞ்சல் கட்டி ஆடிட்டாய்
நாளும் என்னை ஆட்டிவிட்டாய்.
உதிரம் கலந்திட்டாய் அதில் அனுக்கள் நிறைந் திட்டாய் என்னை நீயாக மாற்றிட்டாய்.
உன்னையே நினைக்கை வைத்திட்டாய் என்னை மறக்க செய்திட்டாய்
விட்டாய் அலைய விட்டாய்
சிட்டாய் பறக்க தேன்சிட்டாய்.

சரணம்
++++++++
வானில் வட்டமிட்டாய் எனை சேர பற்றி விட்டாய் நாளும் பொழுதும் சுற்ற விட்டாய்.
திரிந்தே நோட்டமிட்டாய் உனை போல எண்ணி விட்டாய் இல்லை யாரும் அளவிட்டாய்.
நட்சத்திர பூக்களாய் ஜொலிக்கவிட்டாய் வானமே வாழ்த்த வணங்கிட்டாய்.
இட்டாய் மாலை இட்டாய்
மொட்டாய் காதல் அரும்பும்மொட்டாய்.

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...