Friday, June 1, 2018

நவீன திருக்குறள் அதிகாரம் - அப்பாவும் அம்மாவும்

நவீன திருக்குறள்
அதிகாரம் - அப்பாவும் அம்மாவும்
#################################

1. உலகத்தை அறிமுகப்படுத்தியவள் அம்மா உலகம்யாதென
தெரிய செய்தவர் அப்பா.

2. உயிர்மெய் கொடுத்தாள் அம்மா உயிருடன்
வாழ்க்கையும் கொடுத்தவர் அப்பா.

3. பட்டினிகிடக்க விடமாட்டாள் அம்மா உணவினருமை
புரிய வைப்பார் அப்பா.

4. விழுந்தால் தூக்கிவிடுவாள் அம்மா விழுந்தால்
முயன்று எழுயென்பார் அப்பா.

5. கடமையை கூடவிடென்பாள் அம்மா ஒழுங்காக
கடமையாற்று என்பார் அப்பா.

6. வயிற்றில் சுமந்தவள்அம்மா காலமும்
வாழ்க்கையில் சுமப்பவர் அப்பா.

7. நடைபழக சொல்வாள் அம்மா எப்படி
நடக்க வேண்டுமென்பார் அப்பா.

8. அனுபவத்தை சொல்வாள் அம்மா அனுபவத்தில்
கற்றுக்கொள் என்பார் அப்பா.

9. பாசத்தில் பறிதவிப்பாள் அம்மா பாசமிருப்பின்
காட்டிக்கொள்ள மாட்டார் அப்பா.

10. குடும்பம் பிள்ளையென்பாள் அம்மா சமுதாயத்தில்
குடும்பம் எப்படியென்பார் அப்பா.

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...