Monday, December 31, 2018

MOtivation#13


வேண்டுமா வேண்டாமா


MOtivation#12


வாடா தம்பி வாடா

வாடா தம்பி வாடா
முன்னே முன்னே வாடா
பழமை ஏற்று வாடா
புதுமை கண்டு வாடா
நேற்று என்பது நம் கையில் இல்லடா
நாளை என்பது நம் யூகம் தானடா
இன்று மட்டுமே உண்மை என்பதை உணர்ந்து நீயும் வாடா.....

சரணம்
********

நேற்றில் இருந்து கொண்டு நாளையை பற்றி யோசிக்காதடா 
வெற்றி பெற்றிட முடியாதடா... 
இன்றில் இருந்து கொண்டு நாளையை எதிர் கொள்ளடா நிச்சயம் வெற்றி பெறுவாயடா...
உனக்காய் பிறந்தது ஒரு புதுநாள்
விதையாய் விதைந்து நீயும் எழுடா
தானாய் நடக்கும் ஒரு அனுபவம்
துணையாய் துணிவாய் நீயும் வாழடா

சரணம்
*********
சென்ற வருடம் நேர்ந்த சோகம் வரும் வருடத்தில் வெந்து நொந்து போகும்டா...
சென்ற வருடம் தங்கிய சந்தோஷம் வரும் வருடத்திலும் தங்கி தேங்கி வருடும்டா...
பூவாய் பிறந்தது புது வருடம்
மொட்டாய் மலர்ந்தது நம் உலகம்
சிட்டாய் பறந்திடு ஊர் மகிழும்
பொட்டாய் அணிந்திடு உன் திலகம்

Friday, December 28, 2018

கத்தி


காதல் பாடல்#29

உன்னை தொட்ட தென்றல் வந்து என்னை தொட
எந்தன் வாழ்வே நீதானென தந்து சொல்லி காட்ட
அம்மம்மா நெஞ்சம் துள்ள
காதலோ கையால் அள்ள
போவென்று மேகத்தை நானும் தூது சொல்ல
சொல்லம்மா செல்லம்மா கண்ணம்மா காதல் செய்தி?

சரணம்
********

விடியும்வரை என்னுடன் இருக்கிறாய்
விடிந்தவுடன் மறைந்து செல்கிறாய்
கண்ணுக்குள் காதல் வார்க்கிறாய்
நெஞ்சுக்குள் ஆசை வளர்க்கிறாய்
நினைக்கிறேன் மறுகணம் தோன்றுகிறாய்
மறக்கிறேன் போக மறுக்கிறாய்
காற்றாய் என்னை வருடுகிறாய்
காதலால் என்னை வறுக்கிறாய்
சொல்லம்மா செல்லம்மா கண்ணம்மா காதல் செய்தி?
சரணம்
*********
நடக்கிறேன் பாதை ஆகிறாய்
படிக்கிறேன் பாடம் ஆகிறாய்
தவிக்கிறேன் ஆறுதல் ஆகிறாய்
முழிக்கிறேன் விடைகள் ஆகிறாய்
பேசுகிறேன் வார்த்தை ஆகிறாய்
சிரிக்கிறேன் சத்தம் ஆகிறாய்
உளறுகிறேன் அர்த்தம் ஆகிறாய்
தெளிவாகிறேன் நித்தம் ஆகிறாய்
சொல்லம்மா செல்லம்மா கண்ணம்மா காதல் செய்தி?

காதல் பாடல்#28

காதல் பாடல்#28 

அறிந்தேன் அறிந்தேன் உன்னை பார்க்க
காதல் யாதென அறிந்தேன்.
தெளிந்தேன் தெளிந்தேன் உன்னை நினைக்க 
உலகம் நீயென தெளிந்தேன்.
நிறைந்தேன் உன் இதயத்தில் நிறைந்தேன்
பறந்தேன் வான் தொட்டுவிட பறந்தேன்

சரணம்
**********

அளந்தேன் அழகின் பேரழகியே இவளென்று அளந்தேன்.
பிளந்தேன் வாயின் கதவுதனை மூடாமல் பிளந்தேன்.
உலகம் தேடினாலும் கிடைக்காத மங்கை இவளென்பதை உணர்ந்தேன்.
வாழும் வாழ்விலும் கிடைத்திடாத பொன்னான வாழ்க்கை நீதானென்பதை உணர்த்தினேன்.


சரணம்
**********
நெளிந்தேன் காதல் காதலென்று என்னுள் குழைந்தேன்.
களைந்தேன் மௌனம் கூடாதென்று எண்ணம் களைந்தேன்.
காதல் அவளிடம் சொல்லிவிட நேரில் ஒருகைபார்த்திட துணிந்தேன். 
அவளை நேரில் பார்த்துவிட காதல் என்னை ஒருகைபார்த்திட தணிந்தேன். 

Sunday, December 23, 2018

நவீன திருக்குறள் அதிகாரம் : மொபைலும் மேனும்

நவீன திருக்குறள்
அதிகாரம் : மொபைலும் மேனும் 
**********************************

1. உலகமே கைகளில் வந்ததோ நம்முலகம்
அதனுள் மாட்டிக் கொண்டதோ?!

2. உள்ளங்கையில் உலகம்  சின்னதாக ஆனது
உறவுகளோ சின்னாபின்ன மானது.

3. பிறர்முகம் மறந்தோம் எண்களால் பின்னால்
நம்முகமும் மறப்போம் உன்னால்.!

4. மொபைலால் மனிதனின் மொபைலிட்டி போச்சு
மொத்தத்தில் முடவனாய் நிற்கலாச்சு.

5. கைப்பேசி இல்லாதார் கைவீசி நடப்பார்
நடக்கையில் தலைநிமிர்ந்தும் நடப்பார்.

6. தூரத்தும் சொந்தங்களும் வெகுதூர சொந்தங்களானது
சுகதுக்கத்துக்கு ஸ்டேட்டஸ்சே பதிலானது.

7. மொபைலுக்கு உள்ளே போவான் ஒருவனவன்
குடும்பங்களில் இருந்து வெளியேறுபவன்.

8. நான்கு திசைகளில் நல்லதொரு குடும்பம் 
நான்குபேர் கைகளிலும் கைப்பேசி.

9. தொலைக்காட்சியை ஓடவிட்டு பார்க்குறதைவிட தன்னுடைய
கைபேசியை பார்குறவன் அதிகம்.

10. தலைநிமிர்ந்து நடந்தவ ரெல்லாம் உன்னால்
தலைகுனிந்து நடக்க லாச்சே?!

Saturday, December 22, 2018

காதல் பாடல் #27




கண்ணில் கண்ணில் காதல் காதல்
உன்னில் என்னில் காதல் காதல்
காலம் அழியா காதல் காதல்
காலம் புகழும் காவிய காதல்
சொல்ல சொல்ல இனிக்கும் காதல்
சொல்லார் சொல்லும் இதுவே காதல் காதல்
சரணம்
*********
சிலையோடு உளி செய்யும் காதல் காதல்
அலையோடு கரை தழுவும் காதல் காதல்
மலையோடு அருவி கொட்டும் காதல் காதல்
விலையோடு மக்கள் வாழும் காதல் காதல்
கலையோடு நாம் இருவர் கொண்டாடும் காதல் காதல்
நிலையோடு நமது இருதயம் போற்றிடும் காதல் காதல்.
எல்லாம் வியக்கும் நமது காதலே காதல் காதல்.

சரணம்
**********
பூவோடு வண்டு வட்டமிடும் காதல் காதல்
மழையோடு மண் பேசிடும் காதல் காதல்
கடலோடு மீன்கள் உறவாடும் காதல் காதல்
வானோடு விண்மீன் சிரிக்கும் காதல் காதல்
பயிரோடு நமது விவசாயி செலுத்திடும் காதல் காதல்
உயிரோடு எனது உயிர்தனை வைத்திடும் காதல் காதல்
எல்லாம் வியக்கும் நமது காதலே காதல் காதல்.

Tuesday, December 18, 2018

காசு காசு காசு

காசு காசு காசு நண்பா காசு காசு
நடக்கும் எல்லாத்துக்கும் காசு காசு
பீசு பீசு பீசு தேவை பீசு பீசு
போகும் இடமெல்லாம் பீசு பீசு
காசில்லாத வாழ்க்கை இங்கேது பாஸ்சு
காசிருந்தா எல்லாமே ஆகுமே பாசு
சரணம்
**********
பிரசவம் பார்க்க பிள்ளையை பாதுகாக்க காசு காசு
பள்ளி  படிக்க வைக்க பட்டம் பெற்றிட காசு காசு
வேலைய தொடங்கவும் வேலைய முடிக்கவும் காசு காசு
ஏழை முதல் பணக்காரன் வரை ஆட்டி
படைத்து கொண்டு இருப்பதும் காசு காசு
நிலை இல்லாத வாழ்க்கைனு தெரிந்தும்
மானுடன் அடிமை பட்டு இருப்பதும் காசு காசு
சரணம்
**********
பெண்ணை பார்க்கவும் கல்யாணம் பண்ணவும் காசு காசு
குழந்தை பெறவும் அதனை வளர்க்கவும் காசு காசு
சமுதாயம் கவனிக்க நம்மை நிலைநிறுத்த காசு காசு
இருக்கிற நிம்மதியை தொலைத்து நம்மை
பைத்தியமாக தெருவில் நிற்க்க செய்வதும் காசு காசு 
மனிதனின் அன்பு கருணை அனைத்தையும்
அழித்து கொண்டு தன்னையும் அழிக்கும் இந்த காசு காசு

அழகு


Friday, December 14, 2018

உலகமே...!


நம்பிக்கை பாடல்

தலை நிமிர்ந்து முன்னே செல்லடா
தடைகள் தொடுப்பவர் இங்கே எவனடா..
திரும்பும் திசைகள் பாதை தானடா
உன்னை தொடர்வார் பலர் உண்டடா..
வலியில்லா வாழ்க்கை ஏதடா அன்னை 
வலி கொண்டதால் தான் உலகில் நீயடா
சரணம்
++++++++
வீழ்ந்தாலும் அருவியை போல் எழுந்திடுடா
தாழ்ந்தாலும் கதிரை போல் வளைந்திடடா
மறைந்தாலும் விதை போல் வந்திடடா
இறந்தாலும் சூரியன் போல் உதித்திடடா
முயற்சி ஒன்றையே மூச்சாய் மாற்றடா
விடாமுயற்சி கொள்வதால் வாழ்வே வருமடா
இதனை உணரடா இயங்கி உயருடா
சரணம்
++++++++
மலையும் பொடியாகும் உளியாய் இருந்திடடா
குளமும் கடலாகும்  துளியாய் இருந்திடடா
வானம் வெளிச்சமாகும் ஒளியாய் இருந்திடடா
எங்கும் நிறைத்திடும் வளியாய் இருந்திடடா 
நம்பிக்கை கொண்டு உன்னை செதுக்கடா
தன்னம்பிக்கை உன்னை தலைநிமிர்ச் செய்யும்டா
இதனை உணரடா இயங்கி உயருடா

Sunday, December 9, 2018

MOtivation#7


கருப்பு வெள்ளை


காதல் ரொமான்ஸ் பாடல்#26

காதல் ரொமான்ஸ் duet பாடல்#26

வெட்கத்தை மறைச்சு நின்னேன்
பக்கத்தை குறைச்சு வைச்சேன்
இடைவெளி ஏதுமில்லை மாமா...
தேடிதேடி படிக்க வந்தேன்
படித்திட புதையல்  கண்டேன்
தலைக்கனம் மீறவில்லை மானே...
சரணம்
*********
உடுத்தும் மேலாடை நூலாக நானாக இருந்து இறுகவா
படுத்தும் பாடாக என்மேனி உருகும் பார்த்து பருகவா
உனது விழி அசைவில் வீழ்ந்தேனோ
மீண்டும் உனது ஓரப்பார்வை இன்பம் வா வாவென்று அழைக்கிறதோ
இரவின் மயக்கம் விடியலில் என்றால் கசந்திடதான் தோன்றுமோ
கரும்பில் எது என்றாலும் சுவைப்பதில் தவறு இல்லை
சரணம்
*********
கனிந்த பழங்கள் சுவைத்து பார்க்க அணிலாக மாறவா
துணிந்து கன்னம் ரெண்டும் சிவக்க முத்தங்கள் போடவா.
உனது அழகு வெட்கத்தில் தொலைந்தேனோ
மீண்டும் உனது வெட்கம் என்னை வா மீட்கிறேன் என்கிறதோ
கன்னத்தில் இச்சென்ற ஓசை அழுத்தமாக விழுந்திட விழுந்திட
நரம்புகளில் ஒரு மின்னல் காதலில் குழந்தைகளாக நாம் இருவரும்.

Saturday, December 8, 2018

காதல் பாடல்#25

காதல் பாடல்#25

தேர்தல் தேர்தல் காதல் தேர்தல் நம்முள்ளே
நீயா நானா வெல்வது யாரிங்கே சொல்கண்ணே
நீ என்னை வென்றால் நான் உந்தன் உடல்தான்.
நான் உன்னை வென்றால் நீ எந்தன் உயிர்தான்.
உயிர்மெய் சேர்ந்திட காதல் தேர்தல் சேர்ந்தே வெல்வோமா?

சரணம்
********
பார்த்த நாள் முதல் அன்பே
உள்ளம் கொள்ளை கொண்டு
உள்ளாட்சி உள்ளே செய்கிறாய்
தேர்தல் வீணடி காதல்தானடி
இதயராணி நீயடி வாழ்வேநானடி.
பணம் ஏனோ மனம் போதும்
கட்சித் தாவல் வேண்டாம்
காதல் காவல் வேண்டும்
மோதல் நமக்குள் ஏதடா
காதல் ஓட்டு போடடா
உயிர்மெய் சேர்ந்திட காதல் தேர்தல் சேர்ந்தே வெல்வோம் வாடா!

சரணம்
********
நீதானே எனது முதல் மந்திரி
நானே உந்தன் ராஜதந்திரி
சட்டசபை அமைக்க போவோமா
காதல் சட்டம் இயற்றிட
செய்வோமா காதலும் செய்வோமா.
ஊருக்கே தலைவன் நான்
எனது உள்ளத்து தலைவிநீ
கட்டளை போடு நடக்கிறேன்
கட்டிக் கொள்ள உருகுறேன்.
உயிர்மெய் சேர்ந்திட காதல் தேர்தல் சேர்ந்தே வெல்வோம் வாடி!

நவீன திருக்குறள் அதிகாரம் - பெண்ணென்பவள்

நவீன திருக்குறள்
அதிகாரம் - பெண்ணென்பவள்
----------------------------------------------------------

1. கருவிலே உதித்ததும் கள்ளிப்பால் என்றோரை
கழுத்தறுத்து தாய்ப்பால்  பருகியவளோ.!

2. அன்னையில் தொடங்கி பெண்மையில் அடங்கி
ஆண்மையில் முடங்கி நிற்பவளோ.!

3. உடலற்ற உயிரை உயிராய் கருவாக்கி 
உடலாக்கிய பிறப்பின் உச்சமவளோ.!

4. சொல்லப் போவது யாதென அறியாத
இரகசியம் கொண்ட பெண்(Pen)ணிவளோ.!

5. புரியாத புதிராய் விளங்காத விடையாய்
முடியாத முடிவுமாய் விளங்குபவளோ.!

6. உயிராய் நினைத்து உயிரை வைத்து
உருகுலையா உறவை காப்பவளோ.!

7. அன்பாய் அன்பும் கொஞ்சும் கெஞ்சும்
அரவணைக்கும் அன்புத் தாய்மையோ.!

8. இல்லாள் இல்லாது இருக்காது இல்லமது
இருந்தால் இல்லமில்லை அது.

9. வாய்ப்பளித்து  வாய்ப்பிளக்க வாழ்வுதனை அளித்ததால்   
வாழ்க்கையில் யாதுமாகி நிற்பவளோ.!

10. இருப்போரிடம் விழிப்பாய் நெருப்பாய் இருப்பாய்
உயர்வாய் சிறப்பாய் இருப்பாய்.!

Sunday, December 2, 2018

தாலாட்டு பாடல்

தாலாட்டு பாடல்
***********************
செல்லமே அழகிய செல்லமே
உலகில் உனக்குஈடு இல்லையே
வெல்லமே இளகிய வெல்லமே
உன்னிடம் கடன்கொஞ்சம் கேட்குமே
உன் பிறப்பு என் மறுஜென்மம்
உன் வாழ்வு என் மறுவாழ்வு
உடன் நீயிருக்க நெருங்குமோ தாழ்வு
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ

சரணம்
**********
மேகத்தை மெத்தையாக்கி தென்றல் அதை தூது விட்டேன்
நட்சத்திரம் ஜொலிக்கவிட்டு இதமாய் இசை பாட விட்டேன்
நிலாமுகம் நீ தூங்க நிலவொளியை குறைச்சு வச்சேன்
கலைநயம் நீ மகிழ பாசத்தை நெறைச்சு வச்சேன்
மலரும் உன் முகம்பாக்க மனசும் மலரும் கண்ணே
ஊரு கண்ணு குவிஞ்சிருக்கு கண்மூடி தூங்கு கண்ணே
கருவினில் உதைத்த அந்த காலு ரெண்டும் நோகுங் கண்ணே
நோகாம புடிச்சி விட சுகமா தூங்கு கண்ணே
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ

சரணம்
**********
தேவர்கள் கடைந்தெடுத்து கண்ட முதல் அமுதம் நீயன்றோ
தமிழும் திகைத்துநின்ற மழலை சொல் உதிர்த்தது நீயன்றோ
உன்னை நான் முத்தமிட என்மொத்தமும் சத்தமிட அடடா
எந்தன் உயிர் நாடிகள் உன்விரல்பிடியில் கிடக்கிறதே அடடா
உறங்கும் என் ஓவியமே சிணுங்கும் உலக இசையே
முனங்கும் வான் முகிலே தாவும் அழகிய புயலே
விழிக்கும் விண் மீனே சிரிக்கும் இதழ் சித்திரமே கண்ணுறங்கு
தோட்டத்தில் முகிழ்ந்த முதல் பூவே தூங்கு கண்ணே
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ

Wednesday, November 28, 2018

காதல் பாடல் #24

hi ஸ்மார்ட் போன் பெண்ணே 
my ஹார்ட் உந்தன் பின்னே
டச் மீ டச் மீனு சொல்கிறாய்
ஸ்வாப் மீ ஸ்வாப் மீனு சிலிர்க்கிறாய்
இருந்தும் லாக் பண்ணி கீபேட் தந்து சீக்கிரட் பின் கேட்கிறாய்  

சரணம்
*********

உன்னை பார்த்ததும் கண்ணில் brightness கூடுதே
எனக்குள் lifetime புதிதாய் recharge ஆகுதே 
விழித்திரை திறந்து திறந்து மூடுகையில் 
மனக்குறை குறைந்து குறைந்து போகுதடி
என்னைவிட்டு தள்ளி தள்ளி ஓடுகையில்
சிக்னல்கெட்டு நீயும் நீயும் நிற்பாயடி
காதல் செய்ய காலம் தந்த கருவி நீ
காலம் முழுதும் வாழ உந்தன் சிம் நானடி

சரணம்
*********

Cameraவா கண்ணடித்து உந்தன் நெஞ்சில் பதிவிடு
நமது பெயரை Memory cardல் நிரப்பிடு
Facebookல் பேஸ் பேஸ் பார்த்து Whatsappல் வாய்ஸ் வாய்ஸ் கேட்போமடி
காதல்Apps install install பண்ணி
நம்முள் Gapsசை gapsசை தள்ளடி. 
பூமிக்கு வந்த Online தேவதை நீ
டேட்டா குறையாமல் டே-டூ-டே பேசுபவன் நானடி. 

Tuesday, November 27, 2018

நவீன திருக்குறள் அதிகாரம் - வாழ்வியல் தத்துவம் #4

1.   தின்பதே  நோய்க்கு வழிவகுக்கும் தின்னா 
திருப்பான் நோயில்லா திருப்பான்.

2. அறிஞர்களாலும் ஞானிகளாலும் உணரவைக்க முடியாததை
அனுபவம் உணரவைத்து விடும்.

3. விழுந்தாலும் அழுதாலும் எழுந்திடும் குழந்தையிடம்
வாழ்க்கையை கேளுங்கள் யாதென   

4. பலமில்லா உடம்போ பகலில் தூங்கும்
தூங்காது இரவில் மனசு

5. முன்னே செல்பவரிடம் கற்றுக்கொள் பின்னே
வருபவரிடம் எச்சரிக்கை கொள்

6. பிச்சை இடுவதும் கூட சுயநலமே
புண்ணியம் கிடைக்குமென்று இட்டால்.

7. மதிப்பீடு பணத்திற்கு உண்டு செலவழித்தால்
மனிதனுக்கும் உண்டு கடன்கேட்டால்.

8. வலியில்லா வாழ்க்கை வாழ விழைகின்றோம்
வலிமறக்க சிரித்தே வாழ்கின்றோம்.

9. உண்மையில் உழைத்து வரும் சம்பாத்தியம் 
பெரும்பாலும் உண்டியலுக்கு வருவதில்லை.

10. நல்லவனென்று நிலைநிறுத்த பிறரை கெட்டவனென்றால்
நல்லவனென்பது நிலைக்காது வெகுநாள்.

Saturday, November 24, 2018

காதல் பாடல் #23

உன் பார்வை பட்டதும் நெஞ்சினில் வீசும் பூங்காற்று
ஒரு வார்த்தை சொன்னதும் உள்ளே சுழலும் புயல்காற்று
காதல் மழை சாரல் தூவ வானில் தேகம் லேசா போக
பறக்குறேன் நான் மேல மேல தேவதை உன்ன காண காண 
சரணம்
**********
நாடா'வா கண்ணே நீ வந்தாலும் மனம் உன்னை நாடிடவே துடிக்கிறது.
ஒக்கி'யா பெண்ணே நீ முறைத்தாலும் உசுரா உன்னை பார்க்கவே நினைக்கிறது.
கஜாவின் தங்கச்சியா இருந்திட்டு போ
வார்தாவின் தோழியா இருந்திட்டு போ
தன்னிலை இழந்த வானிலை தான் இப்போ என்னிலை இந்நிலை மாற காதல் மையம் கொண்டு உன்னை நிலை நிறுத்தடி.
சரணம்
**********
மழையாய் அன்பே நீ தூறினாலும் பூமியாய் உன்னை ஏற்கவே தோன்றுகிறது.
புயலாய் முன்பே நீ நின்றாலும் சுவாசமாய் உன்னை இழுக்கவே நினைக்கிறது.
கரைகளை ஒதுங்கி வட்டமிட்டிட்டு போ
கரைசேர என்னை உன்னிலிட்டு போ
என்னில் காதல் புயலின் எச்சரிக்கை விடுத்து செய்திகள் பறக்குது அன்பே நிவாரண நிதியாய் ஒரு முத்தத்தை மனம் கேட்குது.

கஜா

எதற்க்காக இங்கு வந்தாய் கஜா
உன்னை யார் இங்கு அழைத்தது கஜா

மழை வேண்டித்தானே நின்றோம் கஜா
பிழை செய்து போனாயே கஜா

மண்ணை பார்த்து வேலை செய்தோம் கஜா
மண்ணை வாரி தூவிட்டியே கஜா

பொண்ண போல பார்த்து வளர்த்தோம் கஜா
பொரட்டி போட்டு போயிட்டியே கஜா

கண்ணை போல கட்டி காத்தோம் கஜா
கண்ணில் கண்ணீர் வச்சிட்டியே கஜா

விண்ணை போல போற்றி புகழ்ந்தோம் கஜா
வில்லை வீட்டையும் ஒடச்சிட்டியே கஜா

ஆசை வச்சு காட காத்தோம் கஜா
காடு கழனியெல்லாம் மூழ்கி போச்சு கஜா

இயற்கை உன்னை சுவாசித்தோம் கஜா
இல்லாம ஓட்டாண்டி ஆக்கிட்டியே கஜா  

கூரை ஓடெல்லாம் மட்டமாச்சு  கஜா
கைகூப்பி நிற்க விட்டுட்டியே கஜா

நட்ட மரமெல்லாம் சாஞ்சது கஜா
பட்ட பாடெல்லாம் வீணா போச்சே கஜா

வாழை மரங்களை வளைச்சிட்டியே கஜா
வாழ்க்கையே சேதச்சிட்டியே கஜா

ராஜாவா வாழ்ந்தோம் இங்கே கஜா
கூஜா ஏந்த வச்சிட்டியே கஜா

செய்வது அறியாது தவிக்கின்றோம் கஜா
நல்ல வச்சி செஞ்சிட்டேயே கஜா

ஆடு மாடெல்லாம் செத்தாச்சு கஜா
வெறும் உயிரை வெச்சி நிற்கிறோம் கஜா

எதற்க்காக இங்கு வந்தாய் கஜா
உன்னை யார் இங்கு அழைத்தது கஜா

Wednesday, November 21, 2018

காதல் பாடல் #22

அழகு சிலைதான் இவள போல எவதான்
ஆய கலைதான் பிரம்மன் செய்த தவம்தான்
ஊரே வியக்கும் அவளை பார்த்து மூக்குல விரலை வைக்கும்
தேரே போகும் கடவுளே பார்த்து வரம் கேட்டு நிற்கும்
( hear me beauty for me hearty  love you cutie  love me sweetie)
சரணம்
++++++++
மல்லிகை ஏங்குதடி உன் கூந்தலில் இடம் கேட்டு  குடிபுக
செவ்வானம் வந்ததடி உன் உதட்டோர சிவப்பை கடன் கேட்க
மைதீட்டிய உன் விழிகள் புதுமொழி பேசுதடி
வானத்தில் உன் புருவங்கள் கவிழ்ந்த பிறையடி
பிரம்மா நன்றி வியந்தேன் உன் படைப்பை இவளை
பார்த்த பின்பு வியந்தேன்
சரணம்
++++++++
கவியுலகம் தேடுதடி உன் நாசிக்கு புதியதோர் உவமை ஒன்று
காந்தள் நானுதடி உன் அழகிய விரல்களை கண்டு கண்டு
காதோர உன் லோலாக்கு புதுநடனம் பயிலுதடி
ஐந்தடி உன் உயரம்நீ அலங்கரித்த அழகுதேரடி
பிரம்மா நன்றி வியந்தேன் உன் படைப்பை இவளை
பார்த்த பின்பு வியந்தேன்

Tuesday, November 20, 2018

ஆத்திசூடி - அம்மா

ஆத்திசூடி - அம்மா

1. அ'கிலத்தின் தொடக்கம்

2. ஆ'ண்டவனின் உண்மை உருவம்

3. இ'ல்லத்தின் விடிவெள்ளி

4. ஈ'கையின் குணம்

5. உ'யிர்களுக்கெல்லாம் உயிர்   

6. ஊ'ன் வளர்ப்பவள்

7. எ'ல்லோரும் உச்சரிக்கும் வார்த்தை

8. ஏ'ணியாய் நிற்பவள்

9. ஐ'யமில்லா அன்பு

10. ஒ'ப்பில்லா உலகம்

11. ஓ'யாது உழைப்பவள்

12. ஔ'டத சொல்

13. அஃ'றிணைகளும் அடங்குமிடம்

14. க'ண் கண்ட தெய்வம்

15. ங'ப்போல் குடும்பத்திற்க்காக வளைபவள்

16. ச'ங்கடங்களின் தீர்வு

17. ஞ'யமாய் பேசுபவள் 

18. வட'மென கட்டி காப்பாள்

19. வண'க்கத்திற்கு உரியவள்

20. ந'லம் போற்றுவாள்  

21. மன'தார செய்பவள்

22. ப'ண்பை விதைத்தவள்

23. ம'ண்ணில் ஒரு மாணிக்கம்

24. இய'ல்பாய் இயங்குபவள்

25. ர'ணமாற காரணம்

26. தல'ங்கள் தலைவனக்குமிடம்

27. வ'யிறு காய்ந்தாலும் பசியாற்றுபவள்

28. அழ'கு தன்பிள்ளை என்பாள்

29. வள'ர்த்துவிட்ட வாழ்வாள்

30. சிற'ப்புற செய்வாள்

31. தின'ம்தினம் பேணுவாள்.

32. க'ருவறை கொண்ட கோவில்.

33. கா'ணிக்கை கேட்காத கடவுள்.

34. கி'ழமை விடாதவள்

35. கீ'தமாய் இசைப்பவள்

36. கு'டும்ப விளக்கொளி

37. கூ'ட்டணி தலைமையவள் 

38. கெ'டுப்பதை தடுப்பவள்

39. கே'ள்வியை தொடுப்பவள்

40. கை'கோர்த்து முகத்தோடு அணைப்பவள்

41. கொ'ள்ளை மனமேடுபவள்

42. கோ'டிகளுக்குள் அடங்காதவள் 

43.  கெள'ரவம் அவளது பாசம்

44. ச'த்தியத்தின் குரு

44 சா'தனை சின்னம்.

45. சி'த்திரம் கொஞ்சுமழகு

46. சீ'ர்பட செய்பவள்.

47. சு'மைகளை சுகமாக்குபவள்

48. சூ'துவாது அறியாதவள்.

49.  செ'துக்கும் உளி

50. சே'ய்களுக்கு சேய்

51. சை'கையிலும் மொழிவாள்

52.  சொ'ர்க்கப்பூமியும் அவள்

53.  சோ'கத்தை விரட்டுபவள்

54.  த'வற்றைப் பொறுப்பவள்

55.  தா'ங்கி நம்மையும் தாங்குபவள்

56.  தி'த்திக்கும் சொல் அவள்

57. தீ'மையை தீர்த்திடுவாள்

58.  து'க்கத்தை எதிர்ப்பவள்

59.  தூ'ங்காது நம்மைக் காத்தவள்

60.  தெ'கட்டாத தேன்.

61. தே'சம் போற்றினாலும் நம் தேசம்

62. தை'ரியம் கூடும் அவளை நினைக்கையில்

63. தொ'ழு அனுதினம்

64. தோ'ல்வியிலும் தேற்றுபவள்

65. ந'டமாடும் தெய்வம்

66. நா'னாக இருக்க (நானிருக்க) நீயே காரணம்

67. நி'கரில்லை உன்போல்.

68. நீ'யின்றி ஏதுமில்லை

69. நு'ட்பம் அறிந்தவள்

70. நூ'ற்சேலை உடுத்தினாலும் நம்மை அழகுபார்ப்பவள்

71. நெ'ஞ்சிலும் சுமப்பவள்

72. நே'சிக்க மட்டுமே தெரிந்தவள்

73. நை'ச தாலாட்டுபவள்

74. நொ'டிக்கு நொடி நினைப்பவள்.

75. நோ'ய்தீர நோபிருப்பவள்.

76. ப'ரிதவிப்பவள்

77. பா'சக்கடல் அவள்

78.  பி'ணித்தீர்க்கும் மருந்து அவள்.  

79. பீ'டுநடை போட மகிழ்பவள்

80.  பு'ன்னகை அழகி அவள்

81.  பூ'வின் மணம் அவள்

82. பெ'யர் சொல்லி பெருமைப்படுபவள்

83. பே'றுபெற வாழ்த்துபவள்

84. பை'ந்தமிழின் அழகு  அவள்

85. பொ'றுமையின் சிகரம் அவள்

86.  போ'ற்றும் உலகம் அவள்.

87.  ம'னதை நன்கு அறிந்தவள்.

88.  மா'றாத; மறவாத அன்புடையவள்.

89.  மி'ன்னும் நட்சத்திரம் அவள்

90. மீ'ட்டும் நரம்புவாள்

91.  மு'த்தமிழும் அவள்

92. மூ'ன்றெழுத்து கவிதை

93.  மெ'ல்லிய காற்று அவள்

94. மே'ன்மக்களுக்கு மேல்

95. மை'விழியார் மான்விழியாள்

96. மொ'ழிவதில் பிள்ளைமொழியாள்

97. மோ'கனம் படுபவள்

98.  வ'னத்தின் வாசம் அவள்

99.  வா'ழ்க்கையே அவள்.

100.  வி'வேகத்தின் வேகம் அவள்

101. வீ'டே சொர்க்கமென ஆக்குபவள்

102. உ'லகம் வியக்கும் உறவு.

103. ஊ'க்கமளிப்பவள்

104. வெ'றுமையில் வெளிச்சம் அவள்

105. வே'ண்டினால் வரமளிப்பவள்

106. வை'கறைத் திங்களவள்

107. ஒ'ழுக்கம் போதிப்பவள்

108. ஓ'ய்வில் அவள் மடியே மடம்.

அம்மா


Wednesday, November 14, 2018

மனிதன் கணிதன்


குழந்தைகளே குழந்தைகளே

குழந்தைகளே குழந்தைகளே எனதருமை குழந்தைகளே!
செல்லங்களே செல்லங்களே நம்வீட்டு செல்லங்களே!
துன்பங்கள் பறக்கும் சிரிப்புகளே இன்பங்கள் நிறைக்கும் சுட்டிகளே!
இறுக்கங்கள் குறைக்கும் இனிப்புகளே சறுக்கங்கள் நொறுக்கும் இனிமைகளே!
சொர்க்கம் வீடென காட்டி தினம் தினம் சொக்கவைக்கும் பொடுசுகளே!

சரணம்
**********
உங்கள் கைகால்கள் ஆட்டி நடக்கையில் காண்கிறோம் தாமரை
உங்கள்  தேகம் வீசும் வாசனையில் நுகர்கிறோம் ரோஜா
உங்கள் சிரிப்பு கோபங்கள் தீர்க்கும் முல்லை வனப்பு தாழம்பூ சொல்லும் எல்லை
உங்கள் கண்கள் நேரெதிர் பார்க்கும் நேர்மை கரையாத மனதும் கரைந்திடும் உண்மை
வீட்டின் உற்சாக அருவிகள் எங்கும் பாடித்திரியும் குருவிகள்
நம் வாழ்வை வளமாக்க வந்த சுருதிகள்
நம் நாட்டினை உயர்வாக்க வந்த கருவிகள் 

சரணம்
**********
ஊரும் அழகாச்சு உன்னை நாடுகையில் உறவுகளும் அழகாச்சு
பாரம் மறந்தாச்சு உன்னை கொஞ்சுகையில் கவலைகளும் பறந்தாச்சு
காலை என்ன மாலை என்ன எதுவும் உன்னிடம் மயங்குமே  தினம் தினம்
கோபம் என்ன தாபம் என்ன எதுவும் உன்னிடம் பொசுங்குமே கணம் கணம்  
பொம்மையும் கொஞ்சிடும் பொம்மைகள் ஆய்ந்து பார்த்திடும் ஜீவிகள்
பல பெருமை வாங்கிட வந்த இளவல்கள்
வீறு நடை போட்டிட வந்த செல்வங்கள்

Saturday, November 10, 2018

காதல் பாடல் #21

ஆசை மெல்ல மெல்ல துளிர்க்கும்
அதை சொல்ல சொல்ல இனிக்கும்
அழகு கொள்ள கொள்ள பறிக்கும்  
அமுதம் அள்ள அள்ள தெறிக்கும்
மனம் காதல் காதலென்று பறக்கும்
தினம் வானில் சிறகுகள் விரிக்கும்

சரணம்
**********
நெற்றியில் குங்கும பொட்டாக ஒட்டி கொள்ள ஆசை
கூந்தலில் அழகு பூஞ்சரமாய் கட்டி தொங்க ஆசை
விரலில் மோதிரமாக ஒட்டிக்கொண்டு முத்தமிட ஆசை
கைக்கடிகாரமாக நான் மாறி உன்னை கட்டிக் கொள்ள ஆசை
வளையளாக உனது கைகளில் வழுக்கி விளையாட ஆசை
என்னில் காதல் வரைந்து வரைந்து உன்னில் கரைந்து கரைந்து விட ஆசை.

சரணம்
**********
சேலைக்குள் நூலாக  தேகத்தை சுற்றிக்கொள்ள ஆசை
ஒட்டியாணமாக இடையை இருக்கி கொடியாக படர ஆசை
கால் கொலுசில் வரும் இசையாக இணைந்திருக்க ஆசை
உருவம் இல்லாத கற்புக்கு உருவமாக இருக்க ஆசை
உயிரினில் உள்ளே உதிரமாய் ஓடி கொண்டிருக்க ஆசை
உன்னில் இதயம் நுழைந்து நுழைந்து உன்னுள்ளே கலந்து கலந்துவிட ஆசை

Thursday, November 8, 2018

காற்று


நவீன திருக்குறள் அதிகாரம் - காதலென்பது

1. கண்களில் படும் நெஞ்சினில் சுடும்
வயிற்றினில் படபடக்கும் பட்டாம்பூச்சி 

2. நான்கு கண்களும் சேர்ந்து நமக்குள் 
காணும் ஒரே காட்சி.

3. தொட்டாலும் பட்டாலும் சதைப்பசி தாண்டிய 
ஓர் நளின உணர்வு.

4. பூட்டிப் பூட்டி பொத்தி வைத்தாலும்
எட்டி எட்டிப் பார்க்கும்.

5. உலகில் இயங்கும் சக்திகளுக்கெல்லாம் தலையானது
உள்ளங்களை பிணைக்கும் மாபெரும்சக்தி.

6. ஆனந்தம் கொள்ள வைத்து மூழ்கடிக்கும்
ஆனந்த கண்ணீரிலும் நனைக்கும்.

7. ஒருவர்மீது ஒருவர் கொள்ளும் அன்பின்
இறுக்கத்தின் புரிதலோடு பிரசவிப்பது.

8. இயற்கையானது தூய்மையானது நம்பிக்கையுடையது சிறுபிள்ளைத்தனமானது
மரணத்தை மரணிக்கச் செய்வது.

9. வயதின் விதி வாலிபத்தின் சதி
வென்றால் இருவரும் சதிபதி

10. இரண்டு இருதயங்களில் ஒருவரில் லப்
இன்னொருவரில் கேட்கும் டப்.

கன்னக்குழி


Tuesday, November 6, 2018

10000வாலா

கண்கள் ராக்கெட்
முகம் பூந்தொட்டி
நெற்றி ட்ரை கலர்
கன்னம் ஸ்டார் ட்ரம்
வாய் 1000வாலா
பற்கள் 2000வாலா
பேச்சு குருவி வெடி 
அழுகல் ஹைட்ரஜன் பாம்
மூக்கு துப்பாக்கி 
மூச்சு புஸ்வானம்
நெஞ்சு பிஜிலி
மனசு பேபி ராக்கெட் 
நடை பாம்பு மாத்திரை 
உடை பேப்பர் பாம்
இடை புல்லட் பாம்
தொடை ரங்மேளா
சிரிப்பு மத்தாப்பு
கைகள் சாட்டை 
விரல்கள் பென்சில்
கோபம் ஆட்டம்பாம் 
கால்கள் சங்குசக்கரம்
மொத்தத்தில்
என்னவள் 10000வாலா

Sunday, November 4, 2018

தீபாவளி தீபாவளி

தீபாவளி தீபாவளி
இல்லம் எங்கும் தீபஒளி தீபஒளி.
தீபாவளி தீபாவளி
தீமை நீங்கும் இன்பஒளி இன்பஒளி.
பார்க்கும் தெருவெல்லாம் மத்தாப்பு
சிரிக்கும் மனசெல்லாம் தித்திப்பு
சரணம்
**********
நல் எண்ணை தேய்த்து தீய எண்ணம் நீங்கு
புற வெளிச்சம் கொடுத்து உள் இருளை போக்கு
இன்முகம் காட்டி இனிதாய் குதூகலிக்கும் உறவுகள்.
விதவிதமாய் உடை அணிந்து ஆடிவிளையாடும் மழலைகள்.
வகை வகையாய் பலகாரம் செய்திட 
முடியாமல் வடை சட்டிக்கும் வாய் வலித்திட
நித்தமும் இல்லத்தில் மகிழ்ச்சியே நிலவட்டும்.
சித்தமும் சிறந்தே சிந்தனையும் செழிக்கட்டும.


சரணம் 
**********
சிறு சண்டைகளை சீக்கிரம் ஊசி வெடியாய் வெடி.
பயம் கொண்ட நெஞ்சினை பாயும் ராக்கெட்டாயாய் மாறு.
ஆட்டம்பாம் போல ஏறிடும் விலைவாசி புஸ்வானமாகட்டும்.
சரவெடியாய் நிம்மதி எங்கும் படபடவென வெடிக்கட்டும்.
சங்கு சக்கரமாய் வேலைகள் செய்திட
ஆசைகள் எல்லாம் மத்தாப்பாய் நிறைவேறி பூத்திட
பொய்புரட்டு சூதுலஞ்சம் பசிபட்டினி கருகட்டும்.
புதுஉதயம் புதுவாழ்வு புத்துணர்ச்சி பொங்கட்டும்.

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...