தாலாட்டு பாடல்
***********************
செல்லமே அழகிய செல்லமே
உலகில் உனக்குஈடு இல்லையே
வெல்லமே இளகிய வெல்லமே
உன்னிடம் கடன்கொஞ்சம் கேட்குமே
உன் பிறப்பு என் மறுஜென்மம்
உன் வாழ்வு என் மறுவாழ்வு
உடன் நீயிருக்க நெருங்குமோ தாழ்வு
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
சரணம்
**********
மேகத்தை மெத்தையாக்கி தென்றல் அதை தூது விட்டேன்
நட்சத்திரம் ஜொலிக்கவிட்டு இதமாய் இசை பாட விட்டேன்
நிலாமுகம் நீ தூங்க நிலவொளியை குறைச்சு வச்சேன்
கலைநயம் நீ மகிழ பாசத்தை நெறைச்சு வச்சேன்
மலரும் உன் முகம்பாக்க மனசும் மலரும் கண்ணே
ஊரு கண்ணு குவிஞ்சிருக்கு கண்மூடி தூங்கு கண்ணே
கருவினில் உதைத்த அந்த காலு ரெண்டும் நோகுங் கண்ணே
நோகாம புடிச்சி விட சுகமா தூங்கு கண்ணே
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
சரணம்
**********
தேவர்கள் கடைந்தெடுத்து கண்ட முதல் அமுதம் நீயன்றோ
தமிழும் திகைத்துநின்ற மழலை சொல் உதிர்த்தது நீயன்றோ
உன்னை நான் முத்தமிட என்மொத்தமும் சத்தமிட அடடா
எந்தன் உயிர் நாடிகள் உன்விரல்பிடியில் கிடக்கிறதே அடடா
உறங்கும் என் ஓவியமே சிணுங்கும் உலக இசையே
முனங்கும் வான் முகிலே தாவும் அழகிய புயலே
விழிக்கும் விண் மீனே சிரிக்கும் இதழ் சித்திரமே கண்ணுறங்கு
தோட்டத்தில் முகிழ்ந்த முதல் பூவே தூங்கு கண்ணே
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
***********************
செல்லமே அழகிய செல்லமே
உலகில் உனக்குஈடு இல்லையே
வெல்லமே இளகிய வெல்லமே
உன்னிடம் கடன்கொஞ்சம் கேட்குமே
உன் பிறப்பு என் மறுஜென்மம்
உன் வாழ்வு என் மறுவாழ்வு
உடன் நீயிருக்க நெருங்குமோ தாழ்வு
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
சரணம்
**********
மேகத்தை மெத்தையாக்கி தென்றல் அதை தூது விட்டேன்
நட்சத்திரம் ஜொலிக்கவிட்டு இதமாய் இசை பாட விட்டேன்
நிலாமுகம் நீ தூங்க நிலவொளியை குறைச்சு வச்சேன்
கலைநயம் நீ மகிழ பாசத்தை நெறைச்சு வச்சேன்
மலரும் உன் முகம்பாக்க மனசும் மலரும் கண்ணே
ஊரு கண்ணு குவிஞ்சிருக்கு கண்மூடி தூங்கு கண்ணே
கருவினில் உதைத்த அந்த காலு ரெண்டும் நோகுங் கண்ணே
நோகாம புடிச்சி விட சுகமா தூங்கு கண்ணே
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
சரணம்
**********
தேவர்கள் கடைந்தெடுத்து கண்ட முதல் அமுதம் நீயன்றோ
தமிழும் திகைத்துநின்ற மழலை சொல் உதிர்த்தது நீயன்றோ
உன்னை நான் முத்தமிட என்மொத்தமும் சத்தமிட அடடா
எந்தன் உயிர் நாடிகள் உன்விரல்பிடியில் கிடக்கிறதே அடடா
உறங்கும் என் ஓவியமே சிணுங்கும் உலக இசையே
முனங்கும் வான் முகிலே தாவும் அழகிய புயலே
விழிக்கும் விண் மீனே சிரிக்கும் இதழ் சித்திரமே கண்ணுறங்கு
தோட்டத்தில் முகிழ்ந்த முதல் பூவே தூங்கு கண்ணே
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
No comments:
Post a Comment