Wednesday, November 21, 2018

காதல் பாடல் #22

அழகு சிலைதான் இவள போல எவதான்
ஆய கலைதான் பிரம்மன் செய்த தவம்தான்
ஊரே வியக்கும் அவளை பார்த்து மூக்குல விரலை வைக்கும்
தேரே போகும் கடவுளே பார்த்து வரம் கேட்டு நிற்கும்
( hear me beauty for me hearty  love you cutie  love me sweetie)
சரணம்
++++++++
மல்லிகை ஏங்குதடி உன் கூந்தலில் இடம் கேட்டு  குடிபுக
செவ்வானம் வந்ததடி உன் உதட்டோர சிவப்பை கடன் கேட்க
மைதீட்டிய உன் விழிகள் புதுமொழி பேசுதடி
வானத்தில் உன் புருவங்கள் கவிழ்ந்த பிறையடி
பிரம்மா நன்றி வியந்தேன் உன் படைப்பை இவளை
பார்த்த பின்பு வியந்தேன்
சரணம்
++++++++
கவியுலகம் தேடுதடி உன் நாசிக்கு புதியதோர் உவமை ஒன்று
காந்தள் நானுதடி உன் அழகிய விரல்களை கண்டு கண்டு
காதோர உன் லோலாக்கு புதுநடனம் பயிலுதடி
ஐந்தடி உன் உயரம்நீ அலங்கரித்த அழகுதேரடி
பிரம்மா நன்றி வியந்தேன் உன் படைப்பை இவளை
பார்த்த பின்பு வியந்தேன்

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...