உன் பார்வை பட்டதும் நெஞ்சினில் வீசும் பூங்காற்று
ஒரு வார்த்தை சொன்னதும் உள்ளே சுழலும் புயல்காற்று
காதல் மழை சாரல் தூவ வானில் தேகம் லேசா போக
பறக்குறேன் நான் மேல மேல தேவதை உன்ன காண காண
ஒரு வார்த்தை சொன்னதும் உள்ளே சுழலும் புயல்காற்று
காதல் மழை சாரல் தூவ வானில் தேகம் லேசா போக
பறக்குறேன் நான் மேல மேல தேவதை உன்ன காண காண
சரணம்
**********
நாடா'வா கண்ணே நீ வந்தாலும் மனம் உன்னை நாடிடவே துடிக்கிறது.
ஒக்கி'யா பெண்ணே நீ முறைத்தாலும் உசுரா உன்னை பார்க்கவே நினைக்கிறது.
கஜாவின் தங்கச்சியா இருந்திட்டு போ
வார்தாவின் தோழியா இருந்திட்டு போ
தன்னிலை இழந்த வானிலை தான் இப்போ என்னிலை இந்நிலை மாற காதல் மையம் கொண்டு உன்னை நிலை நிறுத்தடி.
சரணம்
**********
மழையாய் அன்பே நீ தூறினாலும் பூமியாய் உன்னை ஏற்கவே தோன்றுகிறது.
புயலாய் முன்பே நீ நின்றாலும் சுவாசமாய் உன்னை இழுக்கவே நினைக்கிறது.
கரைகளை ஒதுங்கி வட்டமிட்டிட்டு போ
கரைசேர என்னை உன்னிலிட்டு போ
என்னில் காதல் புயலின் எச்சரிக்கை
விடுத்து செய்திகள் பறக்குது அன்பே நிவாரண நிதியாய்
ஒரு முத்தத்தை மனம் கேட்குது.
No comments:
Post a Comment